புறவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு சத்தியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சத்தியமங்கலம், ஜூலை 30: கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் இருந்து அன்னூர், புஞ்சை புளியம்பட்டி, சத்தியமங்கலம் வழியாக பண்ணாரி அம்மன் கோயில் வரை புறவழிச்சாலை அமைப்பதற்கான திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்கென நிலம் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தேசிய நெடுஞ்சாலைத் துறை, வருவாய் துறை மேற்கொண்டு வருகிறது. இத்திட்டத்தினால் விவசாய விளைநிலங்கள் மற்றும் வீடுகளை இழக்க நேரிடும் என்பதால்...
வணிகர் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்
ஈரோடு, ஜூலை 30: ஈரோடு மாவட்டம் பி.பெ.அக்ரஹாரத்தைச் சார்ந்த முகமது நாசர் அலி மற்றும் அசோகபுரத்தை சார்ந்த சுயம்புலிங்கமுத்து ஆகிய இருவரும் மளிகைக்கடை நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 2024ம் ஆண்டு இறந்துவிட்டனர். இவர்கள் இருவரும் அரசின் வணிகர் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்திருந்தனர். இதனால் அவரது வாரிசுதாரர்களான முகமது நாசரின் மனைவி...
ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு தொடக்க விழா
ஈரோடு, ஜூலை 30: ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யுபிஎஸ்சி பயிற்சி வகுப்பு மற்றும் இளைஞர் சக்தி இயக்கம் தொடக்க விழா நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை உரையில் முன்னாள் தலைமை செயலர் வெ.இறையன்புவிடம் தான் பணியாற்றிய காலத்தை நினைவு கூர்ந்தார். முன்னாள் அரசுத் தலைமை செயலாளர் வெ.இறையன்பு யுபிஎஸ்சி...
கோபி அருகே முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் உள்ளது
கோபி, ஜூலை 29: கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையில் முதியவர்கள் தாக்கப்பட்ட விவகாரத்தில் நிலம் தொடர்பான முன்விரோதம் இருப்பதாக மாவட்ட காவல்துறை தெரிவித்து உள்ளது. கோபி அருகே உள்ள எலத்தூர் நாகமலையை சேர்ந்தவர் லிங்குசாமி (66). இவரது மனைவி ஈஸ்வரியின் தங்கை விஜயலட்சுமி (52). இவர்கள் நேற்று முன் தினம் இரவு வீட்டில் இருந்தனர்....
ஈரோடு மாநகராட்சி குப்பை கிடங்கில் தீ
ஈரோடு, ஜூலை 29: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட வெண்டி பாளையத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில், தினசரி சேகரிக்கப்படும் குப்பை, வெண்டிபாளையம் குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. மலை போல் காணப்படும் அந்த குப்பைக்கிடங்கில், அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவதாலும், இதனால் சுற்று வட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாலும் அக்கிடங்கை...
ரூ.6.90 கோடிக்கு கொப்பரை ஏலம்
ஈரோடு,ஜூலை28: பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் ரூ.6.90 கோடிக்கு நேற்று முன்தினம் கொப்பரை விற்பனை நடைபெற்றது. பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாரந்தோறும் சனி மற்றும் புதன்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெற்று வருகிறது.நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்துக்கு மொத்தம் 6,126 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில், முதல் தர கொப்பரைகள்...
‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தினருடன் கலெக்டர் சந்திப்பு
ஈரோடு,ஜூலை28: ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஸ்டார்ட் அப் நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சியில் கலெக்டர் கந்தசாமி கலந்துரையாடினார். ஈரோடு மாவட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தொழில் முனைவோர் சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தங்களது வழிவகைகள், முன்னேற்றங்கள், சந்திக்கும் சவால்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி...
சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி நெற்கதிர், கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்ற கொ.ம.தே.க.வினர்
ஈரோடு,ஜூலை28: தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் சிபில் ஸ்கோர் முறையை ரத்து செய்யக் கோரி, ஈரோட்டில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் நெற்கதிர்,கரும்புகளுடன் ரயில் மறியலுக்கு முயன்றனர். தமிழ்நாட்டில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பயிர்கடன் பெறுவதில் இருக்கும் சிபில் ஸ்கோர், என்.ஓ.சி குளறுபடிகளை ஒன்றிய, மாநில அரசு சரி செய்ய வலியுறுத்தியும்,...
ரூ.19.89 கோடி செலவில் பவானிசாகர் அணை புனரமைப்பு, மேம்பாட்டு பணிகள் தீவிரம்
சத்தியமங்கலம்,ஜூலை 26: பவானிசாகர் அணையில் புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, இந்தியா சுதந்திரம் பெற்ற பின் முதலாம் ஐந்தாண்டு திட்டத்தில் கட்டப்பட்டதாகும்.1948ம் ஆண்டு கட்டுமான பணி தொடங்கி, 1955ம் ஆண்டு பணிகள் முடிந்து நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது.ரூ.10.50 கோடி செலவில் கட்டப்பட்ட...