மாற்று கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில், பெருந்துறை சட்டமன்ற தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சரும், திமுக மத்திய மாவட்ட பொறுப்பாளருமான தோப்பு வெங்கடாச்சலம் முன்னிலையில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர்....

தோனிமடுவு பள்ளத்தின் குறுக்கே தடுப்பணை, நிபந்தனை பட்டா நீக்கம்

By Ranjith
29 Nov 2025

அந்தியூர், நவ.29: பர்கூர் மலைப்பகுதியில் பெய்யும் மழைநீர் காட்டாற்று வெள்ளமாக ஓடும் தோனிமடுவு பள்ளத்தில் தடுப்பணை கட்டி, அந்தியூர் தொகுதியில் உள்ள ஏரிகள், குளங்களில் நிரப்ப வேண்டும் என விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும், அந்தியூர் தொகுதியில் நீண்ட காலமாக நிபந்தனையுடன் உள்ள நிலங்களுக்கு நிபந்தனை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்...

மது விற்றவர் கைது

By Ranjith
29 Nov 2025

ஈரோடு, நவ. 29: ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொம்மன்பட்டி வாய்க்கால் ரோடு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகில் ஒரு நபர், அரசு மதுபானத்தை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது. விசாரணையில்...

தெருநாய்கள் தொல்லை கட்டுப்படுத்த காப்பகம் அமைப்பதற்கான இடம் தேர்வு பணி தீவிரம்

By MuthuKumar
27 Nov 2025

ஈரோடு,நவ.28: ஈரோட்டில் பொது இடங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், காப்பகம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துவரும் நிலையில்,பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்தும் வகையில், உச்சநீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறது. அதன்...

அந்தியூர் அருகே 156 பண்டல் குட்கா, வேன் பறிமுதல்

By MuthuKumar
27 Nov 2025

அந்தியூர், நவ. 28: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் காளிப்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பட்லூர் நால்ரோட்டில் இருந்து வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா...

விசைத்தறி கணக்கெடுப்பு, இ-மார்க்கெட் செயலி திட்டம் தொடங்க வேண்டும்

By MuthuKumar
27 Nov 2025

ஈரோடு, நவ. 28: விசைத்தறி கணக்கெடுப்பு மற்றும் இ மார்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் தொடங்க கோரி தமிழ்நாடு முதல்வரிடம் நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது, அவரிடம் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பாளர்கள் ஜெகநாதன்,...

ரூ.3.03 கோடி செலவில் சத்தியமங்கலத்தில் வாரச்சந்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

By MuthuKumar
26 Nov 2025

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சி 11வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.03 கோடி செலவில் 128 கடைகளுடன் கூடிய புதிய வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டது. புதிய வார சந்தையினை நேற்று ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வாரச்சந்தை...

ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு

By MuthuKumar
26 Nov 2025

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி மேம்பாட்டு நிதி திட்டம் 2024-25ன் கீழ் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.இதனை நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி...

மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்கள்

By MuthuKumar
26 Nov 2025

ஈரோடு, நவ. 27: ஈரோடு மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்களை துவக்கிவைத்து, 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.235 கோடியே 73 லட்சம் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தார். பின்னர், ரூ.91 கோடியே 09...

திராவிட மாடல் ஆட்சியில் அளப்பரிய சாதனைகள் முன்னாள் எம்பி அறிக்கை

By MuthuKumar
25 Nov 2025

பவானி, நவ. 26: முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வரிசையில், இன்று வளர்ந்து நிற்கும் உத்தமத் தலைவராக திராவிடம் காக்க வந்த திருவிளக்காக, தியாகத் திருவுருவாக, கண் தூங்கா களப்பணி ஆற்றி வருகிறார் நம் முதல்வர். திராவிட மாடல் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள்....