அந்தியூர் அருகே 156 பண்டல் குட்கா, வேன் பறிமுதல்

அந்தியூர், நவ. 28: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள வெள்ளித்திருப்பூர் காளிப்பட்டி பகுதியில் மாவோயிஸ்ட் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பட்லூர் நால்ரோட்டில் இருந்து வந்த ஒரு ஆம்னி வேனை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட, குட்கா...

விசைத்தறி கணக்கெடுப்பு, இ-மார்க்கெட் செயலி திட்டம் தொடங்க வேண்டும்

By MuthuKumar
27 Nov 2025

ஈரோடு, நவ. 28: விசைத்தறி கணக்கெடுப்பு மற்றும் இ மார்க்கெட் செயலி திட்டத்தை விரைவில் தொடங்க கோரி தமிழ்நாடு முதல்வரிடம் நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மனு அளித்தனர். ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அரசு விழாக்களில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது, அவரிடம் தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அமைப்பாளர்கள் ஜெகநாதன்,...

ரூ.3.03 கோடி செலவில் சத்தியமங்கலத்தில் வாரச்சந்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்

By MuthuKumar
26 Nov 2025

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகராட்சி 11வது வார்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.3.03 கோடி செலவில் 128 கடைகளுடன் கூடிய புதிய வாரச்சந்தை வளாகம் கட்டப்பட்டது. புதிய வார சந்தையினை நேற்று ஈரோடு சோலாரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சத்தியமங்கலம் வாரச்சந்தை...

ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய கட்டிடம் திறப்பு

By MuthuKumar
26 Nov 2025

அந்தியூர்: ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே உள்ள ஆப்பக்கூடல் புதுப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு, பள்ளி மேம்பாட்டு நிதி திட்டம் 2024-25ன் கீழ் 6 வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம் ரூ.1 கோடியே 17 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.இதனை நேற்று ஈரோடு மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி...

மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்கள்

By MuthuKumar
26 Nov 2025

ஈரோடு, நவ. 27: ஈரோடு மாவட்டத்தில் ரூ.605.44 கோடியில் புதிய திட்டங்களை துவக்கிவைத்து, 1,84,491 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில், ரூ.235 கோடியே 73 லட்சம் செலவிலான 790 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தார். பின்னர், ரூ.91 கோடியே 09...

திராவிட மாடல் ஆட்சியில் அளப்பரிய சாதனைகள் முன்னாள் எம்பி அறிக்கை

By MuthuKumar
25 Nov 2025

பவானி, நவ. 26: முன்னாள் எம்.பி. என்.ஆர்.கோவிந்தராஜர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வரிசையில், இன்று வளர்ந்து நிற்கும் உத்தமத் தலைவராக திராவிடம் காக்க வந்த திருவிளக்காக, தியாகத் திருவுருவாக, கண் தூங்கா களப்பணி ஆற்றி வருகிறார் நம் முதல்வர். திராவிட மாடல் ஆட்சியில்தான் எத்தனை சாதனைகள்....

பிரம்மாண்ட முகப்புடன் மேடை அமைப்பு

By MuthuKumar
25 Nov 2025

ஈரோடு, நவ. 26: ஈரோடு அடுத்த சோலார் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் முதல்வர் பங்கேற்கும் அரசு விழாவையொட்டி, கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக பிரம்மாண்ட முகப்புடன் மேடை, பந்தல் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. தற்போது, மேடை மற்றும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அமரக்கூடிய வகையிலான பந்தல் அமைக்கப்பட்டு, தயார்நிலையில் உள்ளது....

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு ஈரோடு புதிய புறநகர் பேருந்து நிலையம் உட்பட ரூ.235.73 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்ட பணிகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

By MuthuKumar
25 Nov 2025

ஈரோடு, நவ. 26: ஈரோடு மாவட்டத்தில் ரூ.605.44 கோடி மதிப்பீட்டில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை இன்று தமிழக முதல்வர் தொடங்கி வைத்து, 1.85 லட்சம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தமிழ்நாடு முதல்வர் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து நேரில் கள ஆய்வு செய்தும், புதிய திட்டங்களை...

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு

By Neethimaan
24 Nov 2025

  ஈரோடு, நவ. 25: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுபெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஈரோடு கலெக்டர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் துறையின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு ‘தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது’ வழங்கப்பட...

துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு மூன்றாம் பருவ திறனறி புத்தகம் தயார்

By Neethimaan
24 Nov 2025

  ஈரோடு,நவ.25: ஈரோடு மாவட்டத்தில் எண்ணும் எழுத்தும் 3ம் பருவ திறனறி புத்தகம் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்குவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு,அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் கல்வி ஆர்வத்தை மேம்படுத்த...