திண்டுக்கல்லில் ஓரணியில் தமிழ்நாடு கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல், செப். 24: திண்டுக்கல்லில் உள்ள கலைஞர் மாளிகையில் திமுக சார்பில் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்ற ஓரணியில் தமிழ்நாடு கலந்தாய்வு கூட்டம் நடந்தது. மண்டல தேர்தல் பொறுப்பாளரும், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சருமான அர.சக்கரபாணி தலைமை வகித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொண்டார். கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி...
கூலித் தொழிலாளி விஷமருந்தி தற்கொலை
திண்டுக்கல், செப். 23: திண்டுக்கல் நல்லாம்பட்டி அருகே கண்ணார்பட்டியை சேர்ந்தவர் மலையாண்டி (72). கூலித்தொழிலாளி. இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டதால் வேலைக்கு செல்ல முடியவில்லை.இதனால் பொருளாதாரத்துக்கு மிகவும் சிரமப்பட்டு மன உளைச்சலில் இருந்த மலையாண்டி கடந்த 16ம் தேதி அவரது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல்...
வத்தலக்குண்டு பகுதியில் பைக் திருடிய 3 பேர் கைது
வத்தலக்குண்டு, செப். 23: வத்தலக்குண்டு பகுதியில் பைக் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். வத்தலக்குண்டு பெரியகுளம் சாலையில் துணை மின்நிலையம் அருகே சந்தேகத்துக்கு இடம் அளிக்கும் வகையில் ஒருவர் பைக்கில் சென்றார். போலீசார் அவரைப் பிடித்து விசாரித்ததில் அவர் திண்டுக்கல் அருகே சீலப்பாடியைச் சேர்ந்த வெள்ளைக்காளை மகன் கண்ணன் (24) என்பதும்,...
பேக்கரியில் தீ விபத்து
பழநி, செப். 23: பழநி டவுன், சண்முகபுரம் திருவள்ளுவர் சாலையில் தொல்காப்பியன் என்பவருக்கு சொந்தமான பேக்கரி உள்ளது. இந்த பேக்கரியின் சமையல் கூடத்தில் இருந்த சிலிண்டரில் நேற்று திடீரென தீ பற்றியது. தீ மளமளவெனப் பற்றி கொழுந்து விட்டு எரியத் துவங்கியது. திடீரென தீ பற்றியதால் பேக்கரிக்கு வந்த வாடிக்கையாளர்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து...
பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை: பழநி வனத்துறை எச்சரிக்கை
பழநி, செப். 22: பறவைகளை வேட்டையாடினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என பழநி வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் பெரிய வனப்பரப்பை கொண்டது பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரகங்கள். இவ்வனச்சரகங்களில் வரிப்புலி, சிறுத்தை, யானை, மான், கேளையாடு, கரடி, காட்டு மாடு, காட்டுப்பன்றி போன்ற விலங்கினங்களும் மற்றும் விலையுயர்ந்த மரங்கள், அரிய...
ஒட்டன்சத்திரம் அருகே புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஒட்டன்சத்திரம், செப். 22: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது உறவுக்கார பெண் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகா (25). இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களின் சம்மதத்துடன் சொந்த ஊரில் திருமணம் செய்து கொண்டனர். அதன்பின் இருவரும் வேலைக்காக ஒட்டன்சத்திரம்...
ஆத்தூர் வீரசிக்கம்பட்டியில் 30 மனுக்களுக்கு உடனடி தீர்வு
நிலக்கோட்டை, செப். 19: ஆத்தூர் ஒன்றியம் போடிகாமன்வாடி ஊராட்சி வீரசிக்கம்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் தலைமை வகித்தார். வட்டாட்சியர் முத்துமுருகன், தனி தாசில்தார் தனுஷ்கோடி முன்னிலை வைகித்தனர். ஊராட்சி செயலர் முத்துப்பாண்டி வரவேற்றார். இம்முகாமில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்....
பழநியில் ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு
பழநி, செப். 19: பழநி ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் பயண பாதுகாப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக ரயில்வே பாதுகாப்பு படையினர் நேற்று பயணிகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர். அதில், ரயில் நின்றவுடன் ஏற வேண்டும், அடையாள அட்டை வைத்துள்ளவர்கள் விற்கும் உணவு பண்டங்களை மட்டுமே...
கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
திண்டுக்கல், செப். 19: திண்டுக்கல் அருகே தண்டல்காரன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (48). கூலித்தொழிலாளி. இவரும் அவரது நண்பர் ஞானப்பிரகாசமும் நேற்று வனத்து சின்னப்பர் கோயில் பிரிவு அருகே நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நல்லாம்பட்டியை சேர்ந்த சதீஷ்குமார் (20) தான் வைத்திருந்த பீர் பாட்டிலை உடைத்து ராமச்சந்திரன் கழுத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து,...