வத்தலக்குண்டு அருகே காட்டுப்பன்றிகளால் பயிர்கள் சேதம்: விவசாயிகள் கவலை
வத்தலக்குண்டு, ஜூலை 21: வத்தலகுண்டு அருகே விளைநிலங்களில் புகுந்து பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வத்தலக்குண்டு அருகே கோம்பைபட்டி கிராமத்தையொட்டி அமைந்துள்ள கடவா குறிச்சி மலைப்பகுதியில் அதிகளவில் காட்டுப்பன்றிகள் உள்ளன. அங்கு காட்டுப்பன்றிகளுக்கு போதிய அளவில் உணவு மற்றும் நீர் கிடைக்கவில்லை. இதனால் மலைப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டுப்பன்றிகள் அருகில்...
மஞ்சப்பை விழிப்புணர்வு
நிலக்கோட்டை, ஜூலை 21: சின்னாளபட்டி அருகே தொப்பம்பட்டியில் தமிழ்நாடு நீர்நிலை பாதுகாப்பு தன்னார்வ குழு சார்பில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைவர் தமிழ் செல்வன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ராமசாமி, பொறியாளர் சதீஷ், தன்னார்வலர்கள் பொன்ராஜ், முனியாண்டி முன்னிலை வகித்தனர், நாகராஜ் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பாலித்தீன் பைகளை தவிர்த்து...
வரப்புகளில் பயறு வகை பயிரிட்டால் பூச்சி தாக்கம் கட்டுப்படும்
பழநி, ஜூலை 21: நெற்பயிரில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பில் பயறு வகைகள் பயிரிட வேளாண்மை துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்தாவது: நெற்பயிரை இலை சுருட்டுப்புழு, தண்டு துளைப்பான், புகையான், பச்சை தத்துப்பூச்சி, ஆணைக்கொம்பன் ஈ போன்ற பூச்சிகள் தாக்கி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இப்பூச்சி தாக்குதலை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்த பொறி வண்டு, சிலந்தி,...
குஜிலியம்பாறை- பாளையம் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் நீர்கசிவு நிறுத்தம்
குஜிலியம்பாறை, ஜூலை 20: தினகரன் செய்தி எதிரொலியாக குஜிலியம்பாறை- பாளையம் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் ஏற்பட்ட நீர்கசிவை சரிசெய்து நிறுத்தினர். குஜிலியம்பாறையில் இருந்து பாளையம் செல்லும் வழித்தடத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் அமைந்துள்ள மெயின் சாலையில் திண்டுக்கல் நகருக்கு செல்லும் காவிரி குடிநீர் குழாயில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு லேசான நீர்கசிவு ஏற்பட்டது....
நிலக்கோட்டை வட்டாரத்தில் பசுந்தாள் உர விதைகள் மானியத்தில் பெறலாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
நிலக்கோட்டை, ஜூலை 20: நிலக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் உமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: நிலக்கோட்டை வட்டார விவசாயிகளிடையே பசுந்தாள் உர உபயோகத்தினை பரவலாக்கி அதன் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மண்ணுயிர் காப்போம் திட்டத்தினை இந்த ஆண்டு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம் மண்ணில் உள்ள...
பாடியூர், மினுக்கம்பட்டியில் நாளை ‘பவர் கட்’
வடமதுரை/ வேடசந்தூர், ஜூலை 20: வடமதுரை உபகோட்டத்தில் உள்ள தாமரைப்பாடி துணை மின் நிலையத்தில் நாளை (ஜூலை 21ம் தேதி, திங்கள் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தாமரைப்பாடி, வேல்வார்கோட்டை, முத்தனங்கோட்டை முள்ளிப்பாடி, புதுப்பட்டி, பாடியூர், கூட்டாத்துபட்டி, பெரியகோட்டை ஆகிய...
புத்தாக்க பயிற்சி முகாம்
ஒட்டன்சத்திரம், ஜூலை 19: ஒட்டன்சத்திரம் ஆசிரியர் பயிற்சி வளாகத்தில் மாவட்ட பள்ளிக்கல்வி துறை சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா ஆலோசனையின் பேரில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்களுக்கு புத்தாக்க பயிற்சி முகாம் நடைபெற்றது. மாவட்ட தொடக்க அலுவலர சண்முகநாதன் முன்னிலை வகித்தார். மாநில உதவி தொடர்பு அலுவலர் சவுந்தரராஜ் தலைமை வகித்து...
பழநி ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் மறியல் போராட்டம்
பழநி, ஜூலை 19: பழநி அருகே ஆயக்குடியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் மணி, ஒன்றிய செயலாளர் அரவிந்தன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில்ஆயக்குடி பகுதியில் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வரும் யானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். யானைகளால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...
திண்டுக்கல்லில் கால்பந்து போட்டி பரிசளிப்பு விழா
திண்டுக்கல், ஜூலை 19: திண்டுக்கல் மாவட்ட கால்பந்து கழகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஏழு அணிகளும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடின. போட்டிகள் தனித்தனியாக நடைபெற்றது. நேற்று மாலை பெண்களுக்கான இறுதி போட்டியில்...