தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணி வெற்றி

திண்டுக்கல், அக். 8: சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூரில் 30வது தேசிய பெண்கள் கால்பந்து போட்டி இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு அணி மிகவும் சிறப்பாக விளையாடி கோவா அணியை 5:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தமிழ்நாடு அணியின் பிரியதர்ஷினி 3 கோல்களும், செரோன் மற்றும் வினோதினி தலா ஒரு...

திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர் கூட்டம் 277 மனுக்கள் பெறப்பட்டன

By Francis
06 Oct 2025

  திண்டுக்கல், அக்.7: திண்டுக்கல் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை கலெக்டர் சரவணன் பெற்றுக்கொண்டார். திண்டுக்கல்லில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் சரவணன் தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 277 மனுக்களை பெற்றார். அந்த மனுக்கள் மீது...

காட்டுமாடு தாக்கி முதியவர் பலி குடும்பத்திற்கு வனத்துறை இழப்பீடு

By Francis
06 Oct 2025

  பட்டிவீரன்பட்டி, அக்.7: பெரும்பாறையில் காட்டுமாடு தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு வனத்துறை சார்பில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. பெரும்பாறை மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன்(70). மலைத் தோட்டங்களில் கூலிவேலை செய்து வந்தார். இவர் கடந்த 1ம் தேதி தனியாருக்குச் சொந்தமான மலைத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது, அங்கு வந்த காட்டுமாடு முருகேசனை தாக்கியது. இதில் அவர்...

திண்டுக்கல்லில் கஞ்சா பறிமுதல் 5 பேர் கைது

By Francis
06 Oct 2025

  திண்டுக்கல், அக்.7:திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய எஸ்ஐ அங்கமுத்து, சிறப்பு எஸ்ஐ கருப்பையா, ஏட்டு சரவணன் மற்றும் போலீசார் வத்தலக்குண்டு பைபாஸ் சாலை பகுதியில் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது, பொன்மாந்துறை கட்ரோடு அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர்கள் குடைபாறைபட்டியை சேர்ந்த முகமது அலி ஜின்னா...

திண்டுக்கல் மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை

By Ranjith
04 Oct 2025

திண்டுக்கல், அக். 4: திண்டுக்கல்லில் நேற்று மாலை 6 மணிக்கு மழை பெய்ய துவங்கியது. துவக்கத்தில் லேசாக பெய்த மழை நேரம் செல்ல, செல்ல கனமழையாக மாறியது. மேலும் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது இதனால் திண்டுக்கல் நகர் பகுதி மட்டுமல்லாது புறநகர் மற்றும் நத்தம், நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் உள்பட பல...

நத்தத்தில் புகையிலை பொருட்கள் பறிமுதல், அபராதம்

By Ranjith
04 Oct 2025

நத்தம், அக். 4: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாக மாவட்ட கலெக்டருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கலெக்டர் உத்தரவுப்படி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஜாபர் சாதிக் தலைமையிலான குழுவினர் கோசுகுறிச்சி பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள...

தாடிக்கொம்பு பகுதியில் மது விற்ற 2 பேர் கைது

By Ranjith
04 Oct 2025

திண்டுக்கல், அக். 4: தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபான விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்ட எஸ்பி பிரதீப்பிற்கு தாடிக்கொம்பு பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் புறநகர் டிஎஸ்பி சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு இன்ஸ்பெக்டர் சரவணன், எஸ்ஐக்கள் சூரியகலா, முனியாண்டி மற்றும் போலீசார் தீவிர...

தேசிய துப்பாக்கி சூடும் போட்டி சின்னாளபட்டி மாணவி தமிழக அணிக்கு தேர்வு

By Ranjith
30 Sep 2025

நிலக்கோட்டை: சின்னாளபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருபவர் ஹரிஷா. இவர் கடந்த வாரம் மதுரை துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தில் நடந்த தமிழக அணிக்கான வீராங்கனைகள் தேர்வு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று முதலிடம் பிடித்தார். இவருடன் முறையே இரண்டு, மூன்றாமிடம் பிடித்து 3 மாணவியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதையடுத்து...

வத்தலக்குண்டுவில் கண் பரிசோதனை முகாம்

By Ranjith
30 Sep 2025

வத்தலக்குண்டு: வத்தலக்குண்டுவில் திமுக வடக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐ.பி.செந்தில் குமார் பிறந்தநாளையொட்டி இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வகித்தார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மகாமுனி வரவேற்றார். வடக்கு ஒன்றிய செயலாளர் கேபி. முருகன்...

வாலிபருக்கு ஆயுள் தண்டனை

By Ranjith
30 Sep 2025

திண்டுக்கல்: குஜிலியம்பாறை அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (28). இவர் கடந்த 2024ம் ஆண்டு பள்ளி சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரில் வடமதுரை மகளிர் போலீசார் போக்சோவில் வழக்குப்பதிந்து, முருகேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை திண்டுக்கல் போக்சோ சிறப்பு...