ஒட்டன்சத்திரத்தில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம்
ஒட்டன்சத்திரம், ஜூலை 2: ஒட்டன்சத்திரத்தில் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை முகாம், வாக்குச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள், முகவர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கள் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தலைமை வகித்து ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை குறித்து பேசினார். தொடர்ந்து 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள்,...
வாகனம் மோதி மூதாட்டி பலி
வேடசந்தூர், ஜூலை 2: வேடசந்தூர் அருகே மினுக்கம்பட்டியை சேர்ந்தவர் செல்லம்மாள் (90). இவர் நேற்று முன்தினம் இரவு அய்யர் மடம் பகுதியில் நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் செல்லம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் ஜிஹெச்சிற்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக...
சின்னாளபட்டி பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்
நிலக்கோட்டை, ஜூலை 2: சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று நடைபெற்றது, மன்ற தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆனந்தி பாரதிராஜா, செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தார். துப்புரவு மேலாளர் மணிகண்டன் வரவேற்றார் இக்கூட்டத்தில் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி உள்பட அரசு சார்பில்...
டிரைவர், கண்டக்டருக்கு 6 மாதம் சிறை
மூணாறு, ஜூலை 1: ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த மங்கலத்து சாக்கோ (58) என்பவர் கடந்த 2016 அக்டோபர் 18ம் தேதி அடிமாலியிலிருந்து பூப்பாறை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து ராஜாக்காடு என்.ஆர்.சிட்டி பாரமடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து சாக்கோ தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில்...
டிரைவர், கண்டக்டருக்கு 6 மாதம் சிறை
மூணாறு, ஜூலை 1: ராஜாக்காடு பகுதியைச் சேர்ந்த மங்கலத்து சாக்கோ (58) என்பவர் கடந்த 2016 அக்டோபர் 18ம் தேதி அடிமாலியிலிருந்து பூப்பாறை செல்லும் தனியார் பேருந்தில் பயணம் செய்துள்ளார். பேருந்து ராஜாக்காடு என்.ஆர்.சிட்டி பாரமடை பகுதியில் சென்று கொண்டிருந்த போது பேருந்தில் இருந்து சாக்கோ தவறி விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவத்தில் ராஜாக்காடு...
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள 360 மனுக்கள் பெறப்பட்டன
திண்டுக்கல், ஜூலை 1: திண்டுக்கல்லில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து 360 மனுக்கள் பெறப்பட்டன. திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் தொடர்பான 360 மனுக்கள் பெறப்பட்டன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க...
வதிலை பஸ்ஸ்டாண்ட் முன்பு இடையூறாய் கிடக்கும் கட்டிட இடிபாடுகள்: அகற்ற கோரிக்கை
வத்தலக்குண்டு, ஜூன் 30: வத்தலக்குண்டு பஸ் நிலையம் முன்பு பயணிகளுக்கு இடையூறாக கிடக்கும் கட்டிட இடிபாடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. வத்தலக்குண்டு சுப்பிரமணிய சிவா பஸ் நிலைய முன்பு இருந்த கொடி மரங்கள் மற்றும் பீடங்களை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோர்ட் உத்தரவுப்படி நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்....
நத்தத்தில் புகையிலை விற்றவர் கைது
நத்தம், ஜூன் 30: நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து நத்தம் எஸ்ஐ கிருஷ்ணகுமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். வத்திபட்டி அருகே புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கடை உரிமையாளர்...
கொள்ளை திட்டம் 5 பேர் கைது
திண்டுக்கல், ஜூன் 30: திண்டுக்கல் தாலுகா இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்ஐ பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் ரோந்து சென்ற போது நல்லாம்பட்டி ராஜா குளக்கரை அருகே சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு கும்பலை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் நல்லாம்பட்டியை சேர்ந்த பாலச்சந்தர், தனுஷ் குமார், லோகநாதன், கிழக்கு மரியநாதபுரம் பால் தினகரன் (32), மேற்கு மரியநாதபுரம்...