பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று: மின்தடையால் கிராமங்கள் அவதி
பழநி, ஜூலை 8: பழநி பகுதியில் சுழற்றி அடிக்கும் சூறைக்காற்றால் ஏராளமான கிராமங்களில் மின்தடை ஏற்படுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்று வீசி வருகிறது. சாலையில் உள்ள புழுதிகளுடன் காற்று வீசுவதால் எதிரே வரும் வாகனங்கள்கூட தெரிவதில்லை. இதனால் வாகன ஓட்டிகள்...
அய்யலூர் அருகே லாரி கவிழ்ந்து விபத்து
வேடசந்தூர், ஜூலை 8: அய்யலூர் அருகே, வைக்கோல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல் ரகுமான் (55). இவர் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரபீக் (48) ஆகிய இருவரும் நேற்று தஞ்சாவூரிலிருந்து, கோழிக்கோடு பகுதிக்கு லாரி மூலம் வைக்கோல் ஏற்றிக்கொண்டு சென்றனர். நேற்று மாலை...
அம்மையநாயக்கனூர் அருகே ரேஷன் கடை கட்ட பூமிபூஜை எம்பி தலைமையில் நடந்தது
நிலக்கோட்டை, ஜூலை 7: அம்மையநாயக்கனூர் பேரூராட்சி மாவுத்தன்பட்டியில் ரேஷன் கடை கட்டிடம் அமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் ஆலோசனைப்படி, பழநி எம்எல்ஏ ஐபி.செந்தில்குமார் பரிந்துரைப்படி, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் புதிய ரேஷன் கடை கட்ட ரூ.13 லட்சம் நிதி ஒதுக்கீடு...
திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா: நாட்டாண்மை காஜா மைதீன் துவக்கினார்
திண்டுக்கல், ஜூலை 7: மொகரம் பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல்லில் மத நல்லிணக்க கந்தூரி விழா நேற்று நடைபெற்றது. திண்டுக்கல் ஏகத்துவ மெய்ஞ்ஞான சபை சார்பில் இஸ்லாமியர்களின் மொகரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கந்தூரி விழாவிற்கு ஏகத்துவ மெய்ஞான சபை நிர்வாகி காஜா நஜ்முதீன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஹுஸைன் முகம்மது, முகம்மது சதக்கத்துல்லா, ஹாஜி...
வடமதுரை - நத்தம் இடையே நேரடி பேருந்துகள் இயக்க கோரிக்கை
வடமதுரை, ஜூலை 7: வடமதுரை - நத்தம் வழித்தடத்தில் வி.குரும்பபட்டி, வேலாயுதம்பாளையம், ஊத்தங்கரை, சடையம்பட்டி, ஆலம்பட்டி, செங்குறிச்சி, குடகிப்பட்டி, மணக்காட்டூர், குட்டுப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. வடமதுரையில் இருந்து நத்தம் செல்ல இதுவரை நேரடி பஸ் வசதி என்பது இல்லாமல் இருக்கிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் அதிகளவில் சிறு, குறு...
இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஒட்டன்சத்திரம், ஜூலை 6: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள எம்.அத்தப்பன்பட்டியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகள் ஹரிதா (26). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த இடையகோட்டை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைகாக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிந்த...
கொடைக்கானல் அப்பர்லேக் பகுதியில் புதிய சாலை அமைக்க பூமிபூஜை
கொடைக்கானல், ஜூலை 6: கொடைக்கானல் அப்பர்லேக் பகுதியில் புதிதாக சாலை அமைக்க கோரி அப்பகுதி மக்கள் எம்எல்ஏ ஐ.பி. செந்தில்குமாரிடம் கோரிக்கை வைத்திருந்தனர். இதனடிப்படையில் நேற்று இந்தப் பகுதியில் ரூ.25 லட்சம் செலவில் புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. கொடைக்கானல் நகர்மன்ற தலைவர் செல்லத்துரை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மாயக்கண்ணன்,...
பல்வேறு தகவல்கள் அடங்கிய மூத்த குடிமக்களுக்கான செயலி
திண்டுக்கல், ஜூலை 5: திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள், seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலியினை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரால் மூத்த குடிமக்கள் நலன் கருதி செப்டம்பர் 2023ல் seniorcitizen.tnsocialwelfare என்ற கைப்பேசி செயலி வெளியிடப்பட்டது. இந்த...
கார் மோதி 2 பேர் காயம்
நத்தம், ஜூலை 5: வேடசந்தூர் குட்டத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (47). இவர் தனது அண்ணன் தர்மராஜன் (50) என்பவருடன் டூவீலரில் நத்தத்தில் வெள்ளக்குட்டு பகுதிக்கு சொந்த வேலை நிமித்தமாக வந்து விட்டு ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது அம்மன் குளம் பகுதியில் எதிரே, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த நேதாஜி (47) என்பவர் ஓட்டி வந்த...