நிலக்கோட்டையில் அன்னதானம்
நிலக்கோட்டை, அக். 30: நிலக்கோட்டையில் பேரூர் திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழநி எம்எல்ஏவுமான ஐபி.செந்தில்குமார் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்பிள்ளை தலைமை வகித்தார். பேரூர் துணை தலைவர்கள் கதிரேசன், மணி ராஜா முன்னிலை வகித்தனர். கவுன்சிலர் காளிமுத்து வரவேற்றார் சிறப்பு அழைப்பாளராக கலந்து...
திண்டுக்கல் மாவட்ட எல்லையில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடல்
திண்டுக்கல், அக். 30: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை முன்னிட்டு இன்று திண்டுக்கல் மாவட்ட எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பசும்பொன்னில் இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதையடுத்து பொது அமைதி மற்றும்...
டூவீலர் மோதி முதியவர் பலி
நத்தம், அக். 29: நத்தம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (80). இவர் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சேர்வீடு பிரிவு அருகேயுள்ள தனது தோட்டத்திற்கு சென்று விட்டு வீட்டுக்கு செல்வதற்காக சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது மதுரையை நோக்கி ஜெயக்கிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த...
கொடைக்கானல் நகராட்சியில் வார்டு சபை கூட்டங்கள்
கொடைக்கானல், அக். 29: கொடைக்கானல் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளிலும் வார்டு சபை கூட்டங்கள் நேற்று நடந்தன. அந்தந்த வார்டுகளின் கவுன்சிலர்கள் தலைமை வகித்தனர். இக்கூட்டங்களில் வார்டுகளில் குடிநீர், தெரு விளக்கு, கழிப்பறை சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சேவைகளின் குறைபாடுகள் குறித்து பொதுமக்கள் தெரிவித்தனர். முன்னதாக 17வது...
காற்றாலையில் வடமாநில வாலிபர் தற்கொலை
பழநி, அக். 29: ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிக்நா மாஞ்சி மகன் செசாதேவ மாஞ்சி (18). இவர் குடும்பத்துடன் பழநி அருகே ராஜாம்பட்டியில் உள்ள செங்கல் சேம்பரில் தங்கி பணிபுரிந்து வந்தார். தந்தை பிக்நா மாஞ்சி குடிப்பழக்கம் உள்ளவர் என கூறப்படுகிறது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு தனது மகனை அடிப்பதும், கூலிப்பணத்தை பிடுங்கி செல்வதுமாக...
கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு திருமலைக்கேணி கோயிலில் சூரசம்ஹாரம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு
கோபால்பட்டி, அக்.28: சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடந்த சூரசம்ஹார நிகழ்வில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். சாணார்பட்டி அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் விழா நடந்தது. முன்னதாக கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினர். தொடர்ந்து சிவபூஜை...
ஊழல் தடுப்பு விழிப்புணர்வு
திண்டுக்கல், அக்.28: ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த நாளை முன்னிட்டு அக்.27 முதல் நவ.3 வரை ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையத்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த பொதுமக்களுக்கு, திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும்...
இலவச பட்டா கோரி கலெக்டரிடம் மனு
திண்டுக்கல், அக்.28: இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி தமிழ்நாடு கல் உடைக்கும் மற்றும் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தினர், கலெக்டர் சரவணனிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், வேடசந்தூர் தாலுகா சின்ன கூவக்காபட்டி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றன. அதில் 20க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இலவச...
வேடசந்தூரில் பருவமழையை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறை தயார்
வடமதுரை அக். 25: தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை துவங்கி வெளுத்து வாங்கி வருகிறது. இதனை எதிர்கொள்ள நெடுஞ்சாலை துறையினர் தயார் நிலையில் இருக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நெடுஞ்சாலை துறையினர் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளுடன் தயார் நிலையில் இருந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக வேடசந்தூர் தாலுகாவில் வடகிழக்கு பருவமழையால்...