வளர் இளம்பெண்களுக்கு விழிப்புணர்வு
பழநி, அக். 24: பழநி அடிவாரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் வளர் இளம்பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடந்தது. இம்முகாமில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்பங்கள், அதனை தடுக்கும் முறைகள், அதற்கான தண்டனைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும், இளம் வயது திருமணத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. இதில்...
மண் மாதிரி எடுப்பது எப்படி? வேளாண் துறை விளக்கம்
பழநி, அக். 23: மண் பரிசோனைக்கு மண் எடுப்பது குறித்து வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: மண் மாதிரி ஆய்வுக்கு அரை கிலோ மண் கொடுத்தால் போதும். அந்த அரை கிலோ மண் குறிப்பிட்ட நிலத்திற்கு சரியான மாதிரியாக இருந்தால் தான் நிலத்தின் உண்மையான வளம் தெரியும். மண் மாதிரி எடுக்கும்...
நத்தம் என்.புதுப்பட்டியில் பெறப்பட்ட மனுக்கள் உடனடியாக பதிவேற்றம்
நத்தம், அக். 23: நத்தம் ஒன்றியம், என்.புதுப்பட்டி ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. பேரூராட்சி தலைவரும், திமுக மத்திய ஒன்றிய செயலாளருமான சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் விஜயன், தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, பேரூர் செயலாளர் ராஜ்மோகன், மாநில பொதுக்குழு உறுப்பினர்...
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம்
திண்டுக்கல், அக். 23: திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் தரச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உயிர்ம சான்றளிப்பு மத்திய அரசின் தேசிய உயிர்ம வேளாண்மை செயல் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உயிர்ம முறையில் உற்பத்தி செய்யப்படும் வேளாண்மை...
வடமதுரை அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி
வடமதுரை, அக். 18: வடமதுரை அருகேயுள்ள சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்தவர் அப்பாச்சாமி (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த அக்.15ம் தேதி டூவீலரில் வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பாச்சாமி நிலை தடுமாறி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த...
பாதுகாப்பு கோரி கலெக்டரிடம் மனு
திண்டுக்கல், அக். 18: வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் வியாபாரி. இவர் கடந்த அக்.12ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இவரது மாமனார் சந்திரன், மாமனார் அன்புச்செல்வி, மைத்துனன் ரிவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலையான ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கேட்டு திண்டுக்கல் கலெக்டர்...
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற ஆவணம் சமர்ப்பிக்கவும்
திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்பு தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை பெற வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்...
ஒட்டன்சத்திரத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் வட்டக்கிளை...
திண்டுக்கல் கூட்டுறவு பண்டகசாலை மூலம் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை
திண்டுக்கல், அக். 17: டிடி 487 திண்டுக்கல் மாவட்ட (அபிராமி) நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம் சுயசேவை பிரிவு அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண், பெண் இருபாலர்களுக்கும் புதுரக ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பண்டகசாலைக்கு (அபிராமி) சொந்த தயாரிப்பான No.1 இராஜபோகம், பொன்னி அரிசி மிகவும் குறைந்த...