வடமதுரை அருகே டூவீலர் விபத்தில் தொழிலாளி பலி
வடமதுரை, அக். 18: வடமதுரை அருகேயுள்ள சுக்காம்பட்டி பூசாரிபட்டியை சேர்ந்தவர் அப்பாச்சாமி (60). கூலித்தொழிலாளி. இவர் கடந்த அக்.15ம் தேதி டூவீலரில் வீட்டிலிருந்து அதே பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நாய் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பாச்சாமி நிலை தடுமாறி டூவீலரில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த...
பாதுகாப்பு கோரி கலெக்டரிடம் மனு
திண்டுக்கல், அக். 18: வத்தலக்குண்டு அருகே ராமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (32). பால் வியாபாரி. இவர் கடந்த அக்.12ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் இவரது மாமனார் சந்திரன், மாமனார் அன்புச்செல்வி, மைத்துனன் ரிவின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கொலையான ராமச்சந்திரன் மனைவி ஆர்த்தி பாதுகாப்பு மற்றும் நிவாரணம் கேட்டு திண்டுக்கல் கலெக்டர்...
பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட முதிர்வு தொகை பெற ஆவணம் சமர்ப்பிக்கவும்
திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பதிவு செய்து தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனம் மூலம் வைப்பு தொகை ரசீது பெற்ற பெண் குழந்தைகளில் 18 வயது நிரம்பிய முதிர்வு தொகை பெற வேண்டியவர்கள் சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்களில்...
ஒட்டன்சத்திரத்தில் ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
ஒட்டன்சத்திரம், அக். 17: ஒட்டன்சத்திரத்தில் ஜாக்டோ, ஜியோ சார்பில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் மகாராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் வட்டக்கிளை...
திண்டுக்கல் கூட்டுறவு பண்டகசாலை மூலம் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பனை
திண்டுக்கல், அக். 17: டிடி 487 திண்டுக்கல் மாவட்ட (அபிராமி) நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் மூலம் சுயசேவை பிரிவு அங்காடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண், பெண் இருபாலர்களுக்கும் புதுரக ஆடைகள் தள்ளுபடி விலையில் விற்பனை செய்து வருகின்றனர். பண்டகசாலைக்கு (அபிராமி) சொந்த தயாரிப்பான No.1 இராஜபோகம், பொன்னி அரிசி மிகவும் குறைந்த...
வெடிபொருளுடன் 2 பேர் கைது
திருப்புவனம், அக். 17: சிவகங்கை மாவட்டம், பூவந்தி பகுதியில் கியூ பிரிவு எஸ்ஐக்கள் சுப்பிரமணி, குணசேகரன், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசனூர் பஸ் ஸ்டாப்பில் சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள் சேலம் சங்ககிரி புல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (42), திண்டுக்கல் வத்தலக்குண்டு பண்ணைப்பட்டியை சேர்ந்த சத்யராஜ் (33)...
காட்டுப்பன்றி வேட்டை ரூ.2.40 லட்சம் அபராதம்
ஒட்டன்சத்திரம், அக். 16: ஒட்டன்சத்திரம் அருகே காட்டுப்பன்றி வேட்டையாடிய 6 பேருக்கு வனத்துறையினர் ரூ.2.40 லட்சம் அபராதம் விதித்தனர். ஒட்டன்சத்திரம் அருகே சிந்தலவாடம்பட்டி ஊராட்சி ராமபட்டினம் புதூர் பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்பகுதியில் ஒரு தோட்டத்தை கடந்து சென்ற போது சிலர் காட்டுப்பன்றியை வெட்டி இறைச்சியை பங்கிட்டு கொண்டிருந்ததை பார்த்தனர்....
பழநியில் குதிரைகளுக்கு தடுப்பூசி
பழநி, அக். 16: பழநியில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்காக பஸ் நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து குதிரை வண்டிகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 100க்கும் மேற்பட்ட குதிரை வண்டிகள் உள்ளன. தமிழகத்தில் பழநியில் மட்டுமே தற்போது வரை குதிரைவண்டி சவாரி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பழநியில் நேற்று நகராட்சி, வனத்துறை மற்றும் தன்னார்வலர்களின் சார்பில் குதிரைகளுக்கு...
திண்டுக்கல்லில் ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல், அக். 16: திண்டுக்கல்லில் ரயிலில் கடத்தி வந்த 6 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை வந்தது. அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா, குட்கா புகையிலை பொருட்கள் மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள்...