மாணவிகளுக்கு அழைப்பு நிலக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் ‘ஸ்பாட் அட்மிசன்’
நிலக்கோட்டை, ஜூலை 30: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி முதல்வர் சீனிவாசகன் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு: நிலக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலியிடங்களுக்கு மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. விருப்பமுள்ள மாணவிகள் நேரடியாக வந்து சேரலாம். கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கு பி.ஏ தமிழ், ஆங்கிலம், பொருளியல் (தமிழ் மற்றும் ஆங்கில வழி), வரலாறு,...
திண்டுக்கல் வந்த ரயிலில் 11 கிலோ கஞ்சா பார்சல் பறிமுதல்
திண்டுக்கல், ஜூலை 30: கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்தது. அப்பொழுது திண்டுக்கல் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா மற்றும் குட்கா புகையிலைப் பொருட்கள் வெளிமாநில மது பாட்டில்கள் ரயில்களில் கடத்தி...
ஒட்டன்சத்திரத்தில் வாகனங்களில் ஏர் ஹாரன்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
ஒட்டன்சத்திரம், ஜூலை 29: சாலைகளில் செல்லும் போது அதிக ஒலி எழுப்பி பொதுமக்களின் காதுகளை பதம் பார்க்கும் ஏர் ஹாரன்களை வாகனங்களில் பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் தடை உத்தரவை மீறி ஒட்டன்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் ஏர் ஹாரன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சாலைகளில் செல்லும் மற்ற...
கொடைக்கானலில் தடை செய்யப்பட்ட கனரக வாகனங்கள் பயன்பாடு: வருவாய்த்துறையினர் போலீசில் புகார்
கொடைக்கானல், ஜூலை 29: கொடைக்கானலில், கனரக வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறையினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் கனரக வாகனங்களான ஜேசிபி, ஹிட்டாச்சி, கம்ப்ரஸர், போர்வெல் உள்ளிட்ட வாகனங்கள் இயக்க கூடாது என கொடைக்கானல் ஆர்டிஓ திருநாவுக்கரசு, கடந்த மாதம் மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி உத்தரவு பிறப்பித்திருந்தார். மேலும்...
பழநியில் தொழில் உரிமம் பெறாத நிறுவனங்களுக்கு சீல்: நகராட்சி எச்சரிக்கை
பழநி, ஜூலை 29: பழநி நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள திருமண மண்டபங்கள், பள்ளிகள், உணவகங்கள், தேநீர் கடைகள், பேக்கரிகள், சிறு, குறு தொழில் நடத்துபவர்கள், பஞ்சாமிர்த விற்பனை நிலையங்கள், அரசு கட்டிடங்கள்- அலுவலகங்கள், தங்கும் விடுதிகள், மடங்கள், மருத்துவமனைகள், தியேட்டர்கள் மற்றும் இதர தொழில்கள் செய்யும் அனைத்து உரிமையாளர்களும் நகராட்சி அலுவலகத்தில் உரிய விண்ணப்பம்...
திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கிய 5.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல், ஜூலை 28: திண்டுக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5.5 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் பகுதியில் விற்பனைக்காக ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்படுவதாக குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுகுணா, எஸ்ஐ ராதா மற்றும் போலீசார் திண்டுக்கல் நகர், புறநகர்...
மஞ்சப்பை விநியோகம்
நிலக்கோட்டை, ஜூலை 28: ஆத்தூர் அருகே சேடபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுற்றுச்சூழலை பாதிக்கும் பாலித்தீன் பைகளை தவிர்க்க வலியுறுத்தி நீர்நிலைகள் பாதுகாப்பு தன்னார்வ குழுவினர் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு இலவச மஞ்சப்பை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. குழு தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பரமேஸ்வரி, ஆசிரியர்கள் புவனேஸ்வரி,...
பழநி, ஒட்டன்சத்திரம் வன எல்லைகளில் யானைகள் நடமாட்டம் மீண்டும் அதிகரிப்பு: விவசாயிகள் கவலை
பழநி, ஜூலை 28: பழநி, ஒட்டன்சத்திரம் வனப்பகுதி எல்லைகளில் யானைகளின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனச்சரத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில் கடந்த சில ஆண்டுகளாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது. வனத்துறையினர் சோலார் மின்வேலி அமைத்தல், அகழி அமைத்தல் போன்ற பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டும் பலன் ஏதுமில்லை. பழநி...
வழியனுப்பு விழா
நிலக்கோட்டை, ஜூலை 26: சின்னாளபட்டியில் இன்றும் நாளையும் 26,27-ம் தேதிகளில் திருச்சியில் இன்றும், நாளையும் மாநில அளவிலான ரோல்பால் போட்டி நடக்கவுள்ளது. இதில் திண்டுக்கல் மாவட்ட அணி சார்பில் கலந்து கொள்ளும் ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற 2 அணிகளை சேர்ந்த 24 மாணவ, மாணவிகளை பாராட்டி வழியனுப்பும் விழா நடந்தது. இதில் பயிற்சியாளர்கள்,...