நத்தம் அருகே புகையிலை பொருட்கள் 12 கிலோ பறிமுதல்

  நத்தம், அக். 11: நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி ஆலோசனையின் பேரில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜாபர் சாதிக் உள்ளிட்ட குழுவினர் நேற்று நத்தம்...

தினசரி ரயில் வேண்டும்

By Francis
10 Oct 2025

  பழநி, அக். 11: பழநியில் நுகர்வோர் சங்கங்களின் கூட்டமைப்பிற்கான மாநில தலைவர் பழனிசாமி, மாவட்ட கலெக்டருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழநியில் உள்ள சாலையோர உணவு கடைகளில் வீட்டு சிலிண்டர்கள் பயன்படுத்துதை தடுக்க வேண்டும். அதிக பக்தர்கள் வரும் பழநி நகரில் கழிப்பிடங்களை தூய்மையானதாக வைத்திருக்க வேண்டும். உணவு பொருட்களின் விலையை...

தொழிலாளி விஷம் குடித்து சாவு

By Francis
09 Oct 2025

  திண்டுக்கல், அக். 10: திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் இரண்டாவது தெருவை சேர்ந்தவர் செல்வபாண்டி (34). கூலித்தொழிலாளி. இவரது மனைவி கன்னீஸ்வரி. இவர்களுக்கு 7 வயதில் மகளும், 3 வயதில் மகனும் உள்ளனர். கணவன் மனைவியிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த நிலையில் இருந்த செல்வபாண்டி அவரது வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்....

பணம் பறித்தவர்கள் கைது

By Francis
09 Oct 2025

    வேடசந்தூர், அக். 10: திருச்சி மோளாவாளாடியை சேர்ந்தவர் கண்ணன் (24). இவர் வேடசந்தூர் அருகே நாகம்பட்டி பகுதியில் உள்ள ஒரு நூற்பாலையில் விடுதியில் தங்கியபடி வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் வேடசந்தூர் வந்து விட்டு, மீண்டும் நூற்பாலை விடுதியை நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நாகம்பட்டியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன்...

கஞ்சா விற்ற 2 பேர் கைது

By Francis
09 Oct 2025

  கொடைக்கானல், அக். 10: கொடைக்கானலில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர். கொடைக்கானல் மேல்மலை கிராமம் மன்னவனூரில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மன்னவனூரில் கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பிபின் (29)...

தீபாவளி பண்டிகை பட்டாசு கடைகளை கண்காணிக்க வலியுறுத்தல்

By Karthik Yash
08 Oct 2025

திண்டுக்கல், அக். 9: தீபாவளி பண்டிகை நெருங்கி வரும்நிலையில் பட்டாசு கடைகளில், அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுவது குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தீபாவளி என்றதும், புத்தாடையும், பட்டாசும், இனிப்பும்தான் நினைவுக்கு வரும். இத்தகைய தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பொதுமக்கள் புத்தாடைகள், வீட்டு உபயோக பொருள்களை வாங்குவதில் ஆர்வம்...

அய்யலூர் சிறப்பு முகாமில் மனுக்கள் குவிந்தன

By Karthik Yash
08 Oct 2025

வேடசந்தூர், அக். 9: அய்யலூரில் தனியார் திருமண மண்டபத்தில் 2ம் கட்டமாக நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நேற்று வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் தலைமை வகித்தார். இம்முகாமில் வருவாய்த்துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை போன்ற 13 துறை அதிகாரிகள் பொது மக்களிடம்...

திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் வார விழா

By Karthik Yash
08 Oct 2025

திண்டுக்கல், அக். 9: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் வார விழா நடைபெற்று வருகிறது என திண்டுக்கல் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் உமாராணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் அஞ்சல் துறையின் சேவைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் தேசிய அஞ்சல் வாரம் கொண்டாடப்படுகிறது. நிகழாண்டு அக்.10...

நிலக்கோட்டை உச்சணம்பட்டியில் கோரிக்கை மனுக்களுக்கு அரசு உடனடி தீர்வு

By Ranjith
07 Oct 2025

நிலக்கோட்டை, அக். 8: நிலக்கோட்டை ஒன்றியம் நரியூத்து ஊராட்சிக்குட்பட்ட உச்சணம்பட்டி கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குமரவேல் தலைமை வகித்தார். உதவி திட்ட அலுவலர் முத்துப்பாண்டி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலர் (பொ) கணேசன் வரவேற்றார். இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 500க்கும் மேற்பட்ட மனுக்களை அந்தந்த துறை அலுவலர்களால்...

கள்ளிமந்தயத்தில் இன்று ‘கரண்ட் கட்’

By Ranjith
07 Oct 2025

ஒட்டன்சத்திரம், அக். 8: ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் துணை மின் நிலையத்தில் இன்று (அக்.8ம் தேதி, புதன் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று காலை 9 மணி முதல் மாலை 4 வரை கள்ளிமந்தயம், மண்டவாடி, சின்னைய கவுண்டன்வலசு, பொருளூர், கொத்தையம், பாலப்பன்ட்டி, பருத்தியூர், அப்பியம்பட்டி, பூசாரிபட்டி, கரியாம்பட்டி, கூத்தம்பூண்டி,...