திண்டிவனம் அருகே லாரி மோதி விவசாயி பலி

திண்டிவனம், ஜூலை 10: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த நடுவனத்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் ஏழுமலை(55). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு தீவனூர்- வந்தவாசி சாலை நடுவனத்தல் கூட்டுச்சாலை ஓரமாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது செஞ்சியில் இருந்து பழைய இரும்பு ஏற்றிக்கொண்டு உத்திரமேரூருக்கு செஞ்சி அடுத்த கல்லாலிபட்டு கிராமத்தை சேர்ந்த...

காரைக்கால் மாங்கனி திருவிழாவையொட்டி இன்று விடுமுறை

By Karthik Yash
09 Jul 2025

புதுச்சேரி, ஜூலை 10: புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காரைக்கால் பகுதியில் உள்ள புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ேகாவிலில் மாங்கனி திருவிழா 8ம் தேதி முதல் 11ம் தேதி பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தெய்வங்களின் புனித திருக்கல்யாணம் 9ம் தேதி அன்று நடைபெற உள்ளது. மேலும், பக்தர்களுக்கு மாம்பழங்களை பொழியும் மங்களகரமான நிகழ்வு...

ரியல் எஸ்டேட்டில் கமிஷன் தராததால் செக்யூரிட்டி மீது சரமாரி தாக்குதல்

By Karthik Yash
08 Jul 2025

விழுப்புரம், ஜூலை 9: விழுப்புரம் அருகே செக்யூரிட்டியை தாக்கிய பிரபல ரவுடி உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் அருகே வி.புதூரைச் சேர்ந்தவர் அசோக்(எ) ரகோகத்தமன்(30). சி பிரிவு கேட்டகரி ரவுடி. இவரும் அதே பகுதியை சேர்ந்த நெப்போலியன்(எ) ராஜிவ் ஆகிய இருவரும் புதூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மனைப்பிரிவுக்கு நேற்று சென்றுள்ளனர்....

கள்ளக்குறிச்சி - துருகம் சாலை பகுதியில் லாரி ஆயில் கொட்டியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து பாதிப்பு

By Karthik Yash
08 Jul 2025

கள்ளக்குறிச்சி, ஜூலை 9: கள்ளக்குறிச்சி பஸ் நிலையம் அருகே துருகம் சாலை பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் நான்குமுனை சந்திப்பு நோக்கி சென்ற லாரியில் இருந்து ஆயில் கசிந்து வெளியானது. அதனையடுத்து அந்த லாரியானது பஸ்நிலையம் நுழைவுவாயில் எதிரே பழுதாகி நின்றது. பின்னர் ஆயில் கசிவு சரிசெய்த பின்னர் லாரியை எடுத்து சென்றனர். லாரியில்...

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது

By Karthik Yash
08 Jul 2025

கடலூர், ஜூலை 9: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் நேற்று ரோந்து பணி மேற்கொண்டனர். திருமாணிக்குழி கெடிலம் ஆறு பகுதியில் சேவல் சண்டை போட்டி நடத்தி சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் காராமணிகுப்பம் பகுதியைச் சேர்ந்த திலீபன் (34),...

திருக்கோவிலூரில் காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி ஓடிய கைதியை 48 மணி நேரத்தில் பிடித்த போலீசார்

By Karthik Yash
07 Jul 2025

திருக்கோவிலூர், ஜூலை 8: அரகண்டநல்லூரில் வழிப்பறி வழக்கில் கைதானவரை மருத்துவ பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அழைத்துச் சென்றபோது தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 48 மணி நேரத்தில் தப்பி ஓடிய கைதியை போலீசார் பிடித்தனர். விழுப்புரம் மாவட்டம் காரணை பெரிச்சானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி மகன் ஜெகன்(45), நிதி நிறுவனம் தொழில் செய்து...

ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தில் மணக்கோலத்தில் உறுப்பினராக சேர்ந்த புதுமண தம்பதி

By Karthik Yash
07 Jul 2025

காட்டுமன்னார்கோவில், ஜூலை 8: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில், புதுமண தம்பதிகள் மணக்கோலத்தில் தங்களை உறுப்பினர்களாக சேர்தது பொதுமக்கள் இடையே வரவேற்பை பெற்றது. தமிழ்நாடு முழுவதும் திமுகவிற்கு 2 கோடி உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ஓரணியில் தமிழ்நாடு என்ற இயக்கத்தை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜூலை 1ம் தேதி தொடங்கி வைத்தார். அதன்படி அமைச்சர்...

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் தற்கொலை முயற்சியால் போலீசார் சோதனை தீவிரம்

By Karthik Yash
07 Jul 2025

  கள்ளக்குறிச்சி, ஜூலை 8: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமையன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாளையொட்டி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு துறைவாரியாக மனு அனுப்பிவைத்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குறைதீர்வு நாளில் மனு அளிக்க வருகின்ற பொதுமக்கள் கடந்த மாதத்தில் மனு அளிக்க வருகின்றபோது ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில்...

என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை

By Karthik Yash
04 Jul 2025

திண்டிவனம், ஜூலை 5: என்எல்சி நிர்வாகத்தால் பாதிக்கப்பட்ட கரிவெட்டி கிராம மக்களுக்கு நியாயம் கிடைக்காவிடில் போராட்டம் வெடிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் இழப்பீடு தொகையாக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.15 லட்சம் வீதம் 2022 லோக் ஆயுக்தா (மக்கள் நீதிமன்றம்) வாயிலாக சென்று...

காதலிக்க கட்டாயப்படுத்தி பிளஸ் 2 மாணவிக்கு கத்தி குத்து

By Karthik Yash
04 Jul 2025

விருத்தாசலம், ஜூலை 5: காதலிக்க கட்டாயப்படுத்தி பள்ளி மாணவியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த ஆலடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி (பெயர் மாற்றம் ெசய்யப்பட்டுள்ளது). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி, இரண்டு பெண் பிள்ளைகள் வயது முறையே 16, 15...