ஆற்றங்கரையில் இறங்கிய தொழிலாளி மாயம் போலீசில் புகார்

பண்ருட்டி, அக். 17: பண்ருட்டியை அடுத்துள்ள தாழம்பட்டு கிழக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாதுரை(45). கூலி தொழிலாளி. இவரது மனைவி தைரியலட்சுமி (35). இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகிறது .இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பள்ளியில் படித்து வருகின்றனர். இவரும், இவரது நண்பர் பத்மநாபன் என்பவரும் பண்ருட்டியில் பலாப்பழம் விற்றுவிட்டு இரண்டு சக்கர...

போதையில் ரகளை: 8 பேர் கைது

By Karthik Yash
16 Oct 2025

புதுச்சேரி, அக். 17: புதுச்சேரி முத்தியால்பேட்டை பெருமாள் கோயில் வீதி சுடுகாடு அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் 2 பேர் குடிபோதையில் ரகளை செய்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து முத்தியால்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, 2 பேரையும் பிடித்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை...

குட்கா கடத்திய புதுவை வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு

By Karthik Yash
16 Oct 2025

விழுப்புரம், அக். 17: புதுச்சேரி நிர்ணயப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கதிரவன்((38). இவர் விழுப்புரம் மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட புகையிலைப்பொருட்களை காரில் கடத்திவந்து விற்பனை செய்துள்ளார். அவரை திருவெண்ெணய்நல்லூர் போலீசார் கைது செய்தனர். இதனிடையே கதிரவனின் இந்த குற்றச்செயலை தடுக்கும் வகையில் குண்டர்தடுப்பு சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைக்க எஸ்பி சரவணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட...

வீடு புகுந்து நகை, பைக் திருடிய வாலிபர் கைது

By Karthik Yash
15 Oct 2025

திண்டிவனம், அக். 16: திண்டிவனம் அடுத்த ஆண்டப்பட்டு கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி ஜெயந்தி (42). இவர் கடந்த 10ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார். அவர் வீட்டின் சாவியை வீட்டின் அருகே மறைத்து வைத்ததை மர்ம நபர் நோட்டமிட்டுள்ளார். ஜெயந்தி சென்றவுடன் சாவியை எடுத்து வீட்டை திறந்து பீரோவை திறந்து 2 சவரன்...

பள்ளி 2வது மாடியிலிருந்து குதித்த மாணவி

By Karthik Yash
15 Oct 2025

நெல்லிக்குப்பம், அக். 16: புதுச்சேரி கிராமப்புற பகுதியைச் சேர்ந்த தொழிலாளியின் மகள் கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் ஒரு தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். இதற்காக பள்ளி விடுதியில் மாணவி தங்கியிருந்த நிலையில், நேற்று அவரது பெட்டியை காப்பாளர் சோதனையிட்டபோது செல்போன் மறைத்து வைத்திருந்தது தெரியவரவே, பெற்றோருக்கு தகவல் கொடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து மாணவியின்...

உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு கணக்கில் வராத பணம் ரூ.40 ஆயிரம் பறிமுதல்

By Karthik Yash
15 Oct 2025

உளுந்தூர்பேட்டை, அக். 16: உளுந்தூர்பேட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்நிலையில் நேற்று மாலை திடீரென கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜ் மற்றும்...

கடலூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது

By Karthik Yash
13 Oct 2025

கடலூர், அக். 14: கடலூரில் ஆன்லைன் லாட்டரி விற்ற பாஜக பிரமுகர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு, ரூ.22.94 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் தலைமையில் போலீசார், மஞ்சக்குப்பம் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த குண்டு உப்பலவாடி பகுதியைச் சேர்ந்த ஜெயராமன் (62), அவரது மனைவி மல்லிகா (55), மகன்...

தீபாவளியை முன்னிட்டு வியாழன் முதல் தினமும் 1,500 கூடுதல் பேருந்துகள் இயக்கம் அமைச்சர் சிவசங்கர் பேட்டி

By Karthik Yash
13 Oct 2025

கடலூர், அக். 14: கடலூரில் தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கிய அறிவுறுத்தலின்படி, தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதலாக பேருந்துகள் இயக்குவது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. வரும் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் தீபாவளி திருநாள் முடிவடைந்து, அதன் பிறகு 3 நாட்கள் அவரவர்கள்...

திருவந்திபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.43 லட்சம்

By Karthik Yash
13 Oct 2025

கடலூர், அக். 14: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் தேவநாதசுவாமி கோயிலில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டிலும் புரட்டாசி வழிபாடு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு வகைகளில் பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்...

56 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

By Ranjith
12 Oct 2025

புதுச்சேரி, அக். 13: புதுச்சேரி வில்லியனூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒதியம்பேட் மெயின் ரோடு, கணுவாபேட்டை பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் சென்றனர். அங்கு மணவெளி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (62) என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை...