விபத்தில் கொத்தனார் சாவு
நெல்லிக்குப்பம், ஆக. 21:நெல்லிக்குப்பம் அடுத்த பாலூர் பகுதியை சேர்ந்தவர் வேலு மகன் பிரபாகரன் (38), கொத்தனார். சம்பவத்தன்று இரவு நெல்லிக்குப்பத்தில் இருந்து மேல்பட்டாம்பாக்கம் வழியாக பாலூர் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். வாழப்பட்டு ஆஞ்சநேயர் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னால் மொபட்டில் சென்றவர் திடீரென பிரேக் போட்டதால், மொபட் மீது பைக் மோதியது. இந்த...
விழுப்புரத்தில் பரபரப்பு ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் காங். நிர்வாகிகள் மோதல்
விழுப்புரம், ஆக. 21: விழுப்புரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவிப்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81வது பிறந்த நாளை முன்னிட்டு விழுப்புரம் காங்கிரஸ் கட்சி சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து...
அரசு பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கம்
உளுந்தூர்பேட்டை, ஆக. 20: உளுந்தூர்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட 4 மாணவர்கள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆசனூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வந்த 11ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் பள்ளிக்கு குடிபோதையில் வந்து ஆசிரியர்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தலைமை...
ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவ தளபதி வருகை
வானூர் ஆக. 20: வானூர் தாலுகா ஆரோவில்லுக்கு தென்னிந்திய ராணுவத்தின் தலைமை அதிகாரி லெப்டினென்ட் ஜெனரல் திங்ராஜ் சேத் வருகை தந்தார். மனித ஒற்றுமையின் மையமாக விளங்கும் ஆரோவில் சர்வதேச நகரத்தை அவர் பார்வையிட்டார். இளைஞர் மேம்பாட்டுக்கான உயர்மட்ட விவாதங்களைஆரோவில் பவுண்டேஷனின் செயலாளர் ஜெயந்தி ரவியுடன் லெப்டினென்ட் ஜெனரல் கலந்துரையாடினார். இந்திய பாதுகாப்புத் துறைக்கும், ஆரோவில்லின்...
கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
கடலூர், ஆக. 20: கடலூர் துறைமுகத்தில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா அருகே கடலோரப் பகுதியை நோக்கி நகர...
கையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகள்ளக்குறிச்சி, ஆக.19: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள ஆலத்தூர் கிராமத்தில் ராமு மகன் சதீஷ்(36), இவரது பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் பரிமளா மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட பெட்டிக்கடையில் சோதனை செய்ததில் சுமார் ஒன்றரை கிலோ புகையிலை பொருட்கள் விற்பனைக்கு...
கடலூர் சோனாங்குப்பத்தில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் வாக்குவாதம்
கடலூர், ஆக. 19: கடலூர் அருகே மீனவ கிராமமான சோனாங்குப்பத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஊர் மக்கள் ஒன்று கூடி ஊர் தலைவரை தேர்ந்தெடுத்து ஊர் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்துவது வழக்கம். இந்நிலையில் ஏற்கனவே உள்ள ஊர் தலைவர் பதவி முடிவடைந்தநிலையில் ஊர் தலைவரை தேர்ந்தெடுப்பதில் இரு தரப்பினர் இடையே பிரச்னை இருந்து வந்தது....
முன்விரோத தகராறு: 8 பேர் மீது வழக்கு
புவனகிரி, ஆக. 19: புதுச்சத்திரம் அருகே உள்ள பெரியகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாதுரை. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன். இவர்களிடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று முன்விரோதம் தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அப்பாதுரை மற்றும் வீரன் ஆகிய இருவரும் தனித்தனியே புதுச்சத்திரம்...
பாஜக திட்டமிட்டு திமுக தலைவர்களை பழிவாங்குகிறது: முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
புதுச்சேரி, ஆக. 18: புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி சுதந்திர தின உரை நிகழ்த்தும்போது, வீர சவர்க்கர் ஒரு சுதந்திர போராட்ட வீரர் என்று அவருடைய பெயரை நினைவுகூர்ந்து பேசினார். வீர சவர்க்கர் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது, ஆங்கில ஏகாதிபத்தியம் அவரை அந்தமான் நிக்கோபார் சிறையில்...