நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர் தற்கொலை
நெல்லிக்குப்பம், ஜூலை 4: நெல்லிக்குப்பம் அருகே சென்னை ஆயுதப்படை பெண் காவலர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், பட்டாலியன் காவலரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம், கொங்கராயனூர் பகுதியை சேர்ந்தவர் முகிலன் (29), கார் டிரைவர். இவரது...
அரசு ஒதுக்கீட்டில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான நுழைவுத்தேர்வு முடிவு வெளியீடு
புதுச்சேரி, ஜூலை 4: புதுச்சேரியில் அரசு ஒதுக்கீட்டில் உள்ள பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான இடங்களுக்கு கடந்த 29ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வு முடிவுகள் நேற்று சுகாதாரத்துறை மற்றும் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதில் 2 மாணவர்கள் முதலிடம் பிடித்துள்ளனர். புதுச்சேரியில் 3 அரசு செவிலியர் கல்லூரிகளில் 146 இடங்களும், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடாக...
ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி ஸ்டிரைக்: தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்பு
விழுப்புரம், ஜூலை 4: ஒன்றிய அரசை கண்டித்து 9ம் தேதி நடக்கும் ஸ்டிரைக்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் பங்கேற்கிறது என விழுப்புரத்தில் கு.பாலசுப்பிரமணியன் கூறினார். விழுப்புரத்தில் நேற்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில தலைவர் சரவணன்,...
காவல் நிலையத்தில் காவலாளி கொலை விழுப்புரம் மாவட்டத்தில் 6 தனிப்படைகள் கலைப்பு
விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் மாவட்டத்தில் டிஜிபி உத்தரவு எதிரொலியாக எஸ்பி, டிஎஸ்பி வசம் செயல்பட்டு வந்த 6 தனிப்படைகள் கலைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல்போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளியை போலீசார் அடித்து கொலை செய்ததாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....
விழுப்புரத்தில் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணம் திருட்டு
விழுப்புரம், ஜூலை 3: விழுப்புரம் முதியவர் வீட்டில் ரூ.1 லட்சம் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்தவர் பூசமணி(64). இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் வீட்டை பூட்டிக் கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டு ஹால் மேஜை மீது தனது பையை வைத்துவிட்டு தூங்கியுள்ளாராம்....
வீட்டில் கேஸ் சிலிண்டர் தீப்பிடித்ததால் பரபரப்பு
உளுந்தூர்பேட்டை, ஜூலை 3: கள்ளக்குறிச்சி மாவட்ட உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் நாராயணசாமி மனைவி அஞ்சம்மாள். நேற்று இவருடைய வீட்டிலிருந்து சிலிண்டரை சமையல் செய்வதற்காக பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது. உடனே உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு...
அன்புமணிக்கு போட்டியாக மாவட்ட பொதுக்குழுவை கூட்டுகிறார் ராமதாஸ்
திண்டிவனம், ஜூலை 2: அன்புமணிக்கு போட்டியாக பாமக நிறுவனர் ராமதாஸ் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டங்களை நடத்தி, கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளார். வரும் 10ம்தேதி கும்பகோணத்தில் நடக்கும் தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசுகிறார். அதன்பின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்...
5 மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகளில் தொடர்பு தொழிலதிபரின் வீட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையன் கைது
புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வீட்டை உடைத்து திருடிய பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாநிலங்களில் 18 திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவரிடமிருந்து ரூ.30 லட்சம் நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி ரெட்டியார்பாளையம் விவேகானந்தா நகர் விரிவாக்கம் பகுதியை ேசர்ந்தவர் தரன் (67). இவர்...
ஜிபே மூலம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினர் மீது போலீசார் வழக்கு பதிவு
புதுச்சேரி, ஜூலை 2: புதுச்சேரியில் சிறுமி கடத்தல் வழக்கில் ஜிபேவில் லஞ்சம் பெற்றதாக சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியினர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி சுல்தான்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் முகமதுரபீக், ஷர்மிளா தம்பதியினர். இவர்களது மகள் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காணவில்லையென வில்லியனூர் காவல் நிலையத்தில் ஷர்மிளா புகார்...