நள்ளிரவில் வழக்கறிஞரின் கார் கண்ணாடி, சிசிடிவி கேமரா உடைப்பு
புதுச்சேரி, ஜூலை 17: புதுச்சேரி அடுத்த பங்கூர் பாண்டி- விழுப்புரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் மணிவண்ணன் (45). புதுச்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று இரவு இவர், தனது காரை வீட்டு முன் நிறுத்தி இருந்தார். அப்போது நள்ளிரவு 12.30 மணியளவில் அடையாளம் தெரியாத 2 பேர் அங்கு வந்து அவரது கார்...
அரசு பேருந்தில் ஐடிஐ மாணவர்களை வழிமறித்து தாக்கிய கல்லூரி மாணவர்கள்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 17: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள ஐடிஐயில் 2ம் ஆண்டு கல்வி பயின்று வரும் மாணவர்கள் நேற்று நண்பர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு விருத்தாசலம் சென்று விட்டு அங்கிருந்து ஒரு அரசு பேருந்தில் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்தனர். அந்த பேருந்தில் வந்த கல்லூரி மாணவர்கள் சிலர் ஐடிஐ மாணவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக...
கடலூர் மாவட்டத்துக்கு 5 புதிய திட்டங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
கடலூர், ஜூலை 16: கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ரயில் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் சிதம்பரம் வந்தடைந்தார். இந்த பயணத்தின்போது கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், அவற்றை உடனடியாக நிறைவேற்றி கீழ்க்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்....
புதுவையில் மதுக்கடை உரிமத்துக்கு போலி வாடகை ஒப்பந்த பத்திரம் தயாரித்து மோசடி
புதுச்சேரி, ஜூலை 16: பாகூர் சோரியாங்குப்பம் நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் தினகரன் (54). இவருக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடை நடத்துவதற்காக, கடந்த 2014ம் ஆண்டு ராஜீவ் காந்தி நகர் தமிழ் மகள் வீதியை சேர்ந்த தனியார் மதுக்கடை உரிமையாளரான பிரபுதாஸ் மனைவி பிரீத்தா அணுகி, வாடகைக்கு இடம் கேட்டுள்ளார். அதற்கு தினகரனும் சம்மதித்து, கடந்த...
முன்கூட்டியே தேர்தல் பேச்சு அமித்ஷாவின் அழைப்பை புறக்கணித்த முதல்வர் ரங்கசாமி: பாஜவினர் அதிர்ச்சி
புதுச்சேரி, ஜூலை 16: பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அழைப்பு விடுத்த நிலையில், அதனை முதல்வர் ரங்கசாமி புறக்கணித்துள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தேஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. யூனியன் பிரதேசம் என்பதால், துணைநிலை ஆளுநருக்கு கூடுதல்...
மயிலம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது: மாட்டு வண்டிகள் பறிமுதல்
மயிலம், ஜூலை 15: மயிலம் அடுத்துள்ள பொம்பூர், சங்கராபரணி ஆற்றங்கரையில் சிலர் சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபடுவதாக வந்த ரகசிய தகவலின்படி மயிலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் அங்கு ரகசிய சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வருவதை...
கரும்பு தோட்டத்தில் தீ விபத்து 2 ஏக்கர் கரும்புகள் நாசம்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது எல்லப்பநாயக்கன்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் கரும்பு பயிரிட்டு விவசாயம் செய்து வருபவர் ராஜீவ்காந்தி. நேற்று இவரது கரும்பு வயலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகள் தீ பிடித்து எரிந்தது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து சென்ற தீயணைப்பு குழுவினர் சுமார்...
விஷம் குடித்து மாணவி பலி
சின்னசேலம், ஜூலை 15: சின்னசேலம் அருகே விஷம் குடித்து மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சின்னசேலம் அருகே தகரை வடக்கு தெருவை சேர்ந்தவர் காசிவேல் (49). இவர் அதே கிராமத்தில் டேங்க் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வருகிறார். மேலும் இவரது மகள் ஹரிணி (19) என்பவர் கள்ளக்குறிச்சி அரசு...
கிருமாம்பாக்கத்தில் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி, ஜூலை 14: ஏம்பலம் தொகுதிக்கு உட்பட்ட கிருமாம்பாக்கம் பகுதியில் தனியாக அனைத்து வசதிகளுடன் 5 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு அரங்கம் அமைக்கக்கோரி கிருமாமபாக்கம், பனித்திட்டு, சேலியமேடு அரங்கனூர் உள்ளிட்ட 15 கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கிருபாம்பாக்கம் மெயின் ரோட்டில் நேற்று நடந்தது. சோமநாதன்...