திருவெண்ணெய்நல்லூர் அருகே முட்டை லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி 2 பெண்கள் உட்பட 6 பேர் படுகாயம்
திருவெண்ணெய்நல்லூர், செப். 17: சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் உயிரிழந்த ஆண் சடலத்தை ஏற்றிக்கொண்டு நேற்று தூத்துக்குடி மாவட்டம் கூழாமூர் கிராமத்திற்கு தனியார் ஆம்புலன்ஸ் சென்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரசூர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சத்துணவு முட்டைகளை இறக்கிவிட்டு நாமக்கல் நோக்கி சென்ற லாரி மீது...
பகுதிநேர வேலை, ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ரூ.19.34 லட்சம் மோசடி
புதுச்சேரி, செப். 17: ஆன்லைனில் பகுதிநேர வேலை, ஆன்லைன் டிரேடிங் எனக்கூறி 3 பெண்கள் உள்பட 6 பேரிடம் ரூ.19.35 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆண் நபரை அறிமுகம் இல்லாத நபர் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்டுள்ளார். ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிகமாக சம்பாதிக்கலாம் என அவர் ஆசைவார்த்தை...
திருவெண்ணெய்நல்லூர் அருகே ரூ.2 லட்சம் புகையிலை பொருட்கள், கார் பறிமுதல்
திருவெண்ணெய்நல்லூர், செப். 17: திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று அதிகாலை காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் போலீசார் அரசூர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனைக்காக நிறுத்தியபோது வேகமாக சென்றது. காரை போலீசார் துரத்திச் சென்று இருவேல்பட்டு பகுதியில் மடக்கி பிடித்து சோதனை செய்தனர்....
17 வயது மாணவிக்கு பாலியல் சீண்டல் போக்சோ வழக்கில் கரியாலூர் தனிப்பிரிவு காவலர் அதிரடி கைது
கள்ளக்குறிச்சி, செப். 16: மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தனிப்பிரிவு காவலரை போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை பகுதியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்பு அந்த...
ரயில்வே மேம்பால பணி காரணமாக புதுச்சேரி-கடலூர் சாலையில் போக்குவரத்து தடை அமல்
புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி-கடலூர் சாலையில் உள்ள ஏஎப்டி மில் ரயில்வே கேட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதையொட்டி அப்பகுதியில் ரூ.72 கோடியில் இருவழி சாலை ரயில்வே மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, முதல்வர் ரங்கசாமி பூமிபூஜை செய்து பணிகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். ஆனால், ஏ.எப்.டி...
சித்தானந்தா கோயில் அருகே பரபரப்பு தனியார் மழலையர் பள்ளியில் தீ விபத்து
புதுச்சேரி, செப். 16: புதுச்சேரி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோயில் அருகே தனியார் மழலையர் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் புதுச்சேரியை சேர்ந்த 10 ஆசிரியர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், தனியார் மழலையர் பள்ளி வழக்கம்போல் நேற்று காலை திறக்கப்பட்டு ஆசிரியர்கள், குழந்தைகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது, காலை 9...
கத்தியை காட்டி மிரட்டி இளம்பெண்ணிடம் 7.5 பவுன் தாலி செயின் பறிப்பு
கள்ளக்குறிச்சி, செப். 15: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள சோமண்டார்குடி கிராமத்தை சேர்ந்தவர் முகிலன் மனைவி கல்கி (27). இவர் கள்ளக்குறிச்சி-கச்சேரி சாலை பகுதியில் உள்ள ஒரு கடையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது சோமண்டார்குடி கிராம எல்லை பகுதியில் வந்த போது...
வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
உளுந்தூர்பேட்டை, செப். 15: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புது தெருவில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் ஆகாஷ் (20) என்பவர் ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு துபாயில் கடந்த எட்டு மாத காலமாக வேலை செய்து வந்துள்ளார். இரண்டு மாத விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர் மீண்டும் வெளிநாடு செல்ல விருப்பம் இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த...
கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகளில் 2.10 லட்சம் குடும்பங்கள் திமுகவில் இணைந்தனர்
கடலூர், செப். 15: கடலூரில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே. பன்னீர்செல்வம் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: கடலூரில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த ஜூலை 1ம் தேதி தமிழக முதல்வர் இப்பணியை தொடங்கி வைத்தார். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில்...