அரசு பஸ் பயன்பாடு அதிகரிப்பு 3200 பேருக்கு புதிதாக பணி: போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்
கடலூர், ஜூலை 25: போக்குவரத்து துறையில் 3 ஆயிரத்து 200 பேருக்கு புதிதாக பணி வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் கூறினார். இது குறித்து அவர் கடலூரில் நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த அதிமுக ஆட்சியில் மணல் குவாரி நடத்தியதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். இந்த வழக்கு தொடர்பாக கடலூர் நீதிமன்றத்தில்...
சாலையில் படுத்து தூங்கிய வாலிபரிடம் செல்போன், பைக் திருட்டு
புதுச்சேரி, ஜூலை 24: புதுச்சேரி முருங்கப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (23). இவர் திருவாண்டார்கோவில் பகுதியில் உள்ள தனியார் இருசக்கர வாகன தயாரிப்பு கம்பெனியில் பயிற்சியாளராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணிக்கு வேலை முடிந்து, ஊர் திருவிழாவில் கலந்துகொண்டார். பின்னர் நள்ளிரவு 1.30 மணிக்கு புதுச்சேரி கடற்கரைக்கு பைக்கில் சென்றார்....
புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் சஸ்பெண்ட்
புவனகிரி, ஜூலை 24: புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கடலூர் மாவட்டம் புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலராக தனுஷ்கோடி என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஏற்கனவே திருப்பத்தூர் மாவட்டத்தில் பணியாற்றியதாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவர் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு சென்றபோது அங்கு ஏற்பட்ட ஒரு பிரச்னையில்...
தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா
தியாகதுருகம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன் பிடிக்க பொதுப்பணி துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனிநபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்களை வளர்த்து பிடித்தனர். குத்தகை காலம் நிறைவடைந்த நிலையில் பல்லகச்சேரி பெரிய ஏரியில் மீன்பிடி...
தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் எசாலம் செப்பேட்டை விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை: ஆட்சியரிடம் வலியுறுத்தல்
விழுப்புரம், ஜூலை 23: தொல்லியல் அலுவலகத்தில் பூட்டி வைத்துள்ள ராஜேந்திர சோழனின் ‘எசாலம் செப்பேட்டை’ விழுப்புரத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரத்தை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, சோழப் பேரரசர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை...
பெண்ணை தாக்கி பொருட்களை சேதப்படுத்திய 11 பேர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி, ஜூலை 23: கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தென்கீரனூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் மனைவி சரசு(50), இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மதுரமுத்து மகன் இளையராஜா குடும்பத்திற்கும் நிலம் சமபந்தமாக பிரச்னை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரமுத்து மகன்கள் இளையராஜா, கலியபெருமாள், கண்ணன், மதுரமுத்து மகள்கள் ராணி, ராதிகா, ரஞ்சனி, மதுரமுத்து மனைவி...
உளுந்தூர்பேட்டை அருகே பரிக்கல் கிராமத்தில் ரேஷன் கடையை முற்றுகையிட்டு கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்
உளுந்தூர்பேட்டை, ஜூலை 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது பரிக்கல் கிராமம். இக்கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் தரமற்ற முறையில் வழங்கப்படுவதாகவும் அரிசியில் அதிகளவில் பூச்சிகள் இருப்பதால் இதனை கண்டித்து இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டு திடீர் சாலை மறியல்...
புதுச்சேரி திருக்காஞ்சி கோயிலை சுற்றி வலம் வரும் கருப்பு பெண் நாய்
புதுச்சேரி, ஜூலை 21: புதுச்சேரி திருக்காஞ்சி கோயிலை சுற்றி வரும் கருப்பு பெண் நாயை பைரவி என பெயரிட்டு பொதுமக்கள் வணங்கி வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி திருக்காஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையோரம் காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. காசிக்கு நிகரான கோயிலாக கருதப்படும் இக்கோயிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து...
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த 2 பேர் கைது
புவனகிரி, ஜூலை 21: புதுச்சத்திரம் அருகே உள்ள மணிக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் வில்லியம்ஸ்(37). இவர் கீழ்பூவாணிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெகஜானந்தம் (37) மற்றும் மணிக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த மணிசேகர் (35) ஆகிய இருவரிடம் வெளிநாட்டிற்கு செல்வதற்காக சுமார் ரூ.4 லட்சம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இருவரும் வில்லியம்சை வெளிநாட்டிற்கு அனுப்பாமல் ஏமாற்றி வந்துள்ளனர்....