மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அகற்றம்

மேட்டுப்பாளையம், நவ.11: கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மைய பகுதியாகவும், தமிழக, கேரள, கர்நாடக மாநில எல்லை பகுதியாகவும் மேட்டுப்பாளையம் இருந்து வருகிறது. இதேபோல் பணி நிமித்தமாகவும், பள்ளி கல்லூரி செல்வதற்காகவும் நாள்தோறும் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் கட்டுமான...

தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர் மீது குண்டாஸ்

By Suresh
10 Nov 2025

பெ.நா.பாளையம், நவ.11: கோவை மாவட்டம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட குற்றத்திற்காக கோவையை சேர்ந்த தங்கராஜ் மகன் பிரகாஷ் (35) என்பவர் மீது பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட...

பி.என்.புதூரில் புனரமைக்கப்பட்ட வரி வசூல் மையம்

By Ranjith
06 Nov 2025

கோவை, நவ. 7: கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 41வது வார்டுக்கு உட்பட்ட மருதமலை சாலை, பி.என்.புதூர் பகுதியில் புனரமைக்கப்பட்ட வரிவசூல் மையம் மற்றும் சுகாதார அலுவலக கட்டிடம் திறப்பு விழா நேற்று நடந்தது.  இவற்றை, மேயர் ரங்கநாயகி திறந்துவைத்தார். பின்னர், குத்துவிளக்கு ஏற்றினார். இதன்பிறகு, வரிவசூல் மையத்தில் மாநகராட்சியின் 41வது வார்டு பகுதிகளுக்கான வரிவசூல்...

மரத்தில் பைக் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

By Ranjith
06 Nov 2025

மதுக்கரை, நவ. 7: மதுக்கரை அருகே மரத்தில் பைக் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஆற்று வீதியை சேர்ந்த ஹரி நாராயணன் என்பவரின் மகன் சைலேஷ் விஸ்வநாதன் (20). கோவை குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ்- 2 பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவரின் மகன்...

இருகூரில் காரில் இளம்பெண் கடத்தல்?

By Ranjith
06 Nov 2025

கோவை, நவ.7: கோவை இருகூர் பகுதியில் இளம்பெண் ஒருவர் நேற்றிரவு நின்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த ஒருவர் இளம்பெண்ணை தாக்கி காரில் ஏற்றி கடத்தி சென்றார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து, இருகூர் பகுதியில் காரில் இளம் பெண்ணை கடத்தி செல்வதாக தெரிவித்தனர். இதையடுத்து, கட்டுப்பாட்டு...

அன்னூர் அருகே பரபரப்பு பிக்கப் வாகனத்தின் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பலி

By Ranjith
05 Nov 2025

அன்னூர், நவ.6: அன்னூர் கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில் பிக்கப் வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதியதில் வாலிபர் பலியானார். இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயம் அடைந்தனர். ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்குமார் (25). இவர் புளியம்பட்டியை சேர்ந்த மதன்குமார் என்பவரிடம் பிக்கப் வாகன...

போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரளா வாலிபருக்கு 4 ஆண்டு சிறை

By Ranjith
05 Nov 2025

கோவை, நவ.6: போதை பொருள் கடத்தல் வழக்கில் கேரளா வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோவை போதை பொருள் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை போதைப்பொருள் நுண்ணறிவு போலீசாருக்கு கடந்த 22-8-2022-ம் ஆண்டு, கோவை ரயில் நிலையத்திற்கு வாலிபர் ஒருவர் போதைப்பொருளை கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, ரயில்வே பாதுகாப்பு...

10 கிலோ கஞ்சா பறிமுதல்: ஒடிசா தொழிலாளர்கள் கைது

By Ranjith
05 Nov 2025

தொண்டாமுத்தூர், நவ.6: தொண்டாமுத்தூரில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து, ஒடிசா தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர். கோவை அருகே தொண்டாமுத்தூர் போலீசாருக்கு மாதம்பட்டி ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.ஐ பிரபாகரன் மற்றும் குழுவினர் சோதனை நடத்தியதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சரண் பிரதான் (45), நாகு பிரதான்...

சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும்

By Ranjith
04 Nov 2025

கோவை, நவ. 5: கொமதேக கோவை வடக்கு மாநகர மாவட்டச் செயலாளர் ரமேஷ் என்கிற மயூரநாதன், கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது, ‘‘விளாங்குறிச்சி முதல் தண்ணீர்பந்தல், ராமகிருஷ்ணா மில் சந்திப்பு முதல் நல்லாம்பாளையம், சங்கரா கல்லூரி முதல் அத்திப்பாளையம் பிரிவு, துடியலூர் முதல் அப்பநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில்...

கஞ்சிக்கோடு அருகே தமிழக அரசு பஸ்சில் தீ

By Ranjith
04 Nov 2025

பாலக்காடு, நவ. 5: பாலக்காடு மாவட்டம் கஞ்சிக்கோடு அருகே தமிழக அரசு போக்குவரத்துக்கழக பஸ்சின் டயர் பஞ்சரானதை தொடர்ந்து தீப்பரவி புகை கிளம்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையிலிருந்து பாலக்காடு நோக்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பஸ் ஒன்று வந்துக் கொண்டிருந்தது. அப்போது கஞ்சிக்கோடு ஐடிஐ நிறுத்தம் அருகே திடீரென பஸ் டயர் பஞ்சராகியது. தொடர்ந்து, பஸ்சிற்கு...