பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
கோவை, ஜூலை 19: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து, போலீசாருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியின் 2ம் கட்டம் (தொகுதி 1) கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை 3 நாட்கள் தமிழ்நாடு போலீஸ் பயிற்சி தலைமையகத்தின்கீழ் சென்னையில் நடத்தப்பட்டது. இப்பயிற்சியானது, 15 பணியிடை பயிற்சி மையங்கள் மூலம் சென்னை,...
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் அரசு ஊழியர்கள் 2வது நாளாக போராட்டம்
கோவை, ஜூலை 19: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஊதிய முரண்பாட்டை நீக்கி, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு...
கோவை காப்பகத்தில் கட்டிலில் இருந்து தவறி விழுந்த மூதாட்டி பலி
கோவை, ஜூலை 18: நாமக்கல்லை சேர்ந்தவர் பர்வதம் (68). இவர், கோவை மதுக்கரை ரோட்டில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் வசித்து வந்தார். இவர், கடந்த 14ம் தேதி காப்பகத்தில் கட்டிலில் இருந்து எழுந்திருக்க முயற்சி செய்தார். அப்போது திடீரென தடுமாறி கீழே விழந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை, காப்பக ஊழியர்கள்...
ஒண்டிப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கூடைப்பந்து மைதானம்
கோவை, ஜூலை 18: கோவை ஒண்டிப்புதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய கூடைப்பந்து மைதானம் தனியார் பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இந்த புதிய மைதானத்தை பள்ளியின் தலைமை ஆசிரியர் சாந்தி நேற்று துவக்கி வைத்தார். இது பள்ளி மாணவர்கள் கூடைப்பந்து போட்டிகளில்...
சமத்துவபுரத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு
மதுக்கரை, ஜூலை 18: கோவை மாவட்டம், செட்டிபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரம் பகுதி மக்களின் வசதிக்காக, பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, தொகுதி வளர்ச்சி நிதியின் மூலம், ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இதையடுத்து இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் பேரூராட்சி துணை தலைவர்...
புஜங்கனூர் அரசு பள்ளியில் குறுமைய அளவில் விளையாட்டு போட்டிகள் துவக்கம்
காரமடை, ஜூலை 17: தமிழ்நாடு அரசு பள்ளி கல்வித்துறை சார்பில் பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் நேற்று காரமடையை அடுத்துள்ள புஜங்கனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கியது. முதல் நாளில் மேட்டுப்பாளையம் குறுமைய அளவிலான சதுரங்க போட்டிகள் நடைபெற்றன. இதில் 41 அரசு மற்றும் அரசு...
கோவை ரயில் நிலையத்தில் பைக் நிறுத்தி சென்ற 15 நிமிடத்தில் திருட்டு
கோவை, ஜூலை 17: கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் அதில்நிகாம் (21). இவர், கோவை துடியலூரில் உள்ள ஒரு தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 13ம் தேதி இவர் தனது பைக்கில் நண்பரை அழைத்துச்செல்ல கோவை ரயில் நிலையம் வந்தார். பின்னர், ரயில் நிலையம் பின் பகுதியில்...
மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
கோவை, ஜூலை 17: மதுரை மாவட்டம் செல்லூரை சேர்ந்தவர் சரவணன்(32). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கோவை சரவணம்பட்டி அருகே உள்ள சின்னவேடம்பட்டியில் தங்கி வேலை பார்க்கும் உறவினர் வீட்டுக்கு வந்தார். பின்னர் இரவில் அவர் மாடியில் வைத்து மது அருந்தி உள்ளார். இந்நிலையில், போதையில் இருந்த அவர் நள்ளிரவில் முதல் மாடியில் இருந்து...
மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா
கோவை, ஜூலை 16: கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காமராஜர் 123வது பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமையில் நிர்வாகிகள் காமராஜர் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிர்வாகிகள் வீனஸ் மணி, கோவை போஸ், தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காந்தகுமார் வரவேற்றார். இதையொட்டி, பள்ளி குழந்தைகளுக்கு...