மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு மாநகராட்சி வார்டு குழு கூட்டத்தில் கண்டனம்

கோவை, நவ. 19: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு குழு கூட்டம் மண்டல தலைவர் லட்சுமி இளஞ்செல்வி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 5வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் நவீன் குமார் பேசியதாவது: கோவைக்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு நிராகரித்து இருக்கின்றது. 20 லட்சம் மக்கள் தொகைக்கு குறைவாக உள்ள...

ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூ. ஆர்ப்பாட்டம்

By Ranjith
18 Nov 2025

கோவை, நவ. 19: நாடு முழுவதும் ஒன்றிய பாஜ ஆட்சியில் அதிகரித்து வரும் தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், அக்கட்சியின் மாவட்டச்...

பிரதமர் வருகையையொட்டி கோவையில் 38 பார்கள் மூட உத்தரவு

By Ranjith
18 Nov 2025

கோவை, நவ. 19: கோவை பீளமேட்டில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெறும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை விவசாயிகள் மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை வருகை தர உள்ளார். இதையடுத்து மாநாடு நடைபெறும் இடங்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், எப்எல் 2 மற்றும் எப்எல் 3 பார்களை தற்காலிகமாக மூட...

கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் கொள்ளை

By Neethimaan
17 Nov 2025

பெ.நா.பாளையம், நவ.18: கவுண்டம்பாளையத்தில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் தங்க நகைகள், பணத்தை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள கிரி நகர், பாலாஜி கார்டன் 1-வது தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (25). இவர் கடந்த 15 ம் தேதி வீட்டை...

ஜாக்டோ-ஜியோ சார்பில் இன்று வேலை நிறுத்த போராட்டம் அரசு பள்ளிகளில் கற்றல் பணி பாதிக்கும் அபாயம்

By Neethimaan
17 Nov 2025

  கோவை, நவ. 18: கோவையில் ஜாக்டோ ஜியோ சார்பில் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகளில் கற்றல் பணிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் அடையாள வேலைநிறுத்த போராட்டம் இன்று நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...

24 மணி நேரத்தில் சேலத்தில் மாயமான கல்லூரி மாணவி நள்ளிரவில் கோவையில் மீட்பு

By Neethimaan
17 Nov 2025

கோவை, நவ. 18:சேலத்தில் மாயமான கல்லூரி மாணவி 24 மணி நேரத்தில் கோவையில் மீட்கப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கடந்த 15ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிங்க் நிற ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார். பிங்க் நிற காரில் ஒரு எஸ்ஐ, ஒரு போலீஸ்காரர் இரவு முழுவதும் நகரின் பஸ் நிலையங்கள்...

குட்கா பொருட்கள் பறிமுதல்; ஒருவர் கைது

By Ranjith
14 Nov 2025

சூலூர், நவ.15: கோவை மாவட்டம் சூலூர் அருகே நடுப்பாளையம் பகுதியில் தனியார் ஒருவர் வீட்டில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் குறிப்பிட்ட அந்த வீட்டுக்கு சென்ற போலீசார் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கு இருந்த ஒரு சாக்குப்பையில் தமிழக அரசால் தடை...

வரும் 26ம் தேதி செம்மொழி பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

By Ranjith
14 Nov 2025

கோவை, நவ.15: கோவை விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக கொடிசியா மைதானத்தில் ஸ்கை டான்ஸ் எனப்படும் ஒளி, ஒலி லேசர் ஷோ நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதன் துவக்க விழாவில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை கலெக்டர் பவன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  அப்போது பேசிய செந்தில்...

கோவையில் 15 மையங்களில் இன்று ஆசிரியர் தகுதி தேர்வு 3,890 பேர் எழுதுகின்றனர்

By Ranjith
14 Nov 2025

கோவை, நவ. 15: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று, நாளை என இரண்டு நாட்கள் நடக்கிறது. அதன்படி, மாவட்டத்தில் டெட் தாள்-1 தேர்வு இன்று (15-ம் தேதி) 15 தேர்வு மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்வை 3,890 தேர்வர்கள் எழுதுகின்றனர். இதனை தொடர்ந்து டெட்...

உதவிக்கு சென்றதால் நேர்ந்த சோகம் முதியவரின் ஸ்கூட்டர் 10 நிமிடத்தில் திருட்டு

By Ranjith
12 Nov 2025

கோவை, நவ. 13: கோவை கணபதிப்புதூர் 3வது வீதியை சேர்ந்தவர் மாரிமுத்து (63). இவர் கடந்த 5ம் தேதி காலை தனது ஸ்கூட்டரில் சித்தாபுதூர் அய்யப்பன் கோயில் பகுதிக்கு சென்று நின்றிருந்தார். அப்போது, அங்கு ஒருவர் கடையின் ஷட்டரை திறக்க மாரிமுத்துவை உதவிக்கு அழைத்தார். அவரும் அருகில் என்பதால் ஸ்கூட்டரில் இருந்து சாவியை எடுக்காமல் சென்றார்....