தொண்டாமுத்தூர் அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் தூய்மைப்பணி

  தொண்டாமுத்தூர், செப்.24: ஒன்றிய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் செப்டம்பர் 7ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை தூய்மையே சேவை பிரச்சாரத்தை முன்வைத்துள்ளது. பொது சுகாதார நிலையங்கள், அரசு அலுவலகங்கள், ஆறு, குளம், பள்ளி, கல்லூரி வளாகங்கள் போன்ற பொது இடங்களை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களின்...

பாரம்பரிய பனிவரகு ரகங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

By Arun Kumar
22 Sep 2025

  கோவை, செப். 23: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய பனிவரகு ரகங்களில் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கம் சார்பில், கனடா நாட்டின் கிராண்ட் செலஞ்ச் நிதியுதவியுடன் பாரம்பரிய பனிவரகு ரகங்களில் மதிப்பு கூட்டுதல் என்ற தலைப்பில்...

திருக்குறள் முற்றோதல் போட்டி: மாணவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

By Arun Kumar
22 Sep 2025

  கோவை, செப்.23: திருக்குறளில் உள்ள 1,330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் திறன்பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு ரூ 15,000 பரிசுத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 2025-2026ம் ஆண்டிற்கு மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. திருக்குறள் முற்றோதலில் பங்கேற்கும் மாணவ, மாணவியர்கள் 1,330 குறட்பாக்களையும் ஒப்பிக்கும்...

ரயில்வே காப்பர் கம்பிகள் திருடிய 4 பேர் கைது

By Arun Kumar
22 Sep 2025

  கோவை, செப். 23:கோவையில் ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை திருடிய 4 பேரை ஆர்பிஎப் போலீசார் கைது செய்தனர். கோவை பீளமேடு - ஆவாரம்பாளையம் ரயில்வே பாலம் அருகே, கடந்த 19ம் தேதி ரயில்வேக்கு சொந்தமான காப்பர் கம்பிகளை சிலர் வெட்டி திருடி சென்று விட்டனர். இது குறித்து ரயில்வே ஊழியர்கள் அளித்த புகாரில்,...

நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் மோதுவதால் ‘பிளாஸ்டிக் டிவைடர்’ நாசம்

By Arun Kumar
22 Sep 2025

  கோவை, செப்.22: கோவை மதுக்கரை நீலாம்பூர் பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் அத்துமீறி வலதுபுறம் செல்வதாக புகார் அதிகரித்தது. பைபாஸ் ரோடு குறுகலாக இருப்பதால் சென்டர் மீடியன் அமைக்கப்படவில்லை. வாகனங்கள் இல்லாத பகுதியில் இட பக்கம் செல்லும் வாகனங்கள் வலது புறம் முந்தி செல்லும் நிலையிருக்கிறது. ஆனால் போக்குவரத்து அதிகமாக இருக்கும் போதும் வாகனங்கள் வலது...

மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கோதுமை நாகம் மீட்பு வனப்பகுதியில் விடுவிப்பு

By Arun Kumar
22 Sep 2025

  மேட்டுப்பாளையம், செப்.22: மேட்டுப்பாளையத்தில் குடியிருப்பு பகுதியில் கொடிய விஷமுள்ள கோதுமை நாகம் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது. மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியில் உள்ள சாமண்ணா நீருந்து நிலையம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் பாம்பு ஒன்று புகுந்து இருப்பதாக என்.டபிள்யூ.சி.டி நிறுவனர் ஒயிட் பாபுவுக்கு தகவல் வந்துள்ளது. இதன்பேரில் அங்கு விரைந்து...

மகாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் மக்கள் குவிந்தனர்

By Arun Kumar
22 Sep 2025

  தொண்டாமுத்தூர், செப்.21: புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு பேரூர் நொய்யல் ஆற்றின் கரையில் பொதுமக்கள் குவிந்தனர். ஆண்டுதோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை பிறகு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை தினமானது மகாளய அமாவாசையாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.  மகாளய அமாவாசை தினங்களில் இந்துக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபடுவதை வழக்கமாக...

தொண்டாமுத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம்

By Ranjith
18 Sep 2025

தொண்டாமுத்தூர் செப். 19: கோவை அருகே தொண்டாமுத்தூர் வட்டார காங்கிரஸ் கட்சியின் சார்பாக கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் அறிமுக கூட்டம் மற்றும் கொடியேற்று விழா வட்டார தலைவர் எம்.வி.நாகராஜ் தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட தலைவர் மருதூர் ரங்கராஜன் கொடி ஏற்றி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.என்.கந்தசாமி, வாக்கு...

ஆறரை கிலோ கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் மீது குண்டாஸ்

By Ranjith
18 Sep 2025

மேட்டுப்பாளையம்,செப்.19: மேட்டுப்பாளையத்தில், கஞ்சாவை விற்பனைக்காக ஆறரை கிலோ கஞ்சா வைத்திருந்த கேரள வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. மேட்டுப்பாளையம் பகுதியில் கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி ஆறரை கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த கேரள மாநிலத்தை சேர்ந்த முனீர் (24) என்பவரை பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்....

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 18 தொகுதிகளில் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம்

By Ranjith
18 Sep 2025

தொண்டாமுத்தூர், செப்.19: கோவை மேற்கு மண்டல திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகிகள் கூட்டம் கோவையில் நடந்தது. ஆதிதிராவிடர் நலக்குழு மாநில இணை செயலாளரும், தூய்மை பணியாளர் வாரிய தலைவருமான திப்பம்பட்டி ஆறுச்சாமி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட அமைப்பாளர் ஞானசேகரன் வரவேற்றார். கோவை வடக்கு மாவட்ட அமைப்பாளரும், தலைமை கழக பேச்சாளருமான வக்கீல் தென்னை சிவா...