வரும் 2ம் தேதி கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு லீவு
கோவை, செப்.30: கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபானக்கடைகள், பார்கள், பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் செயல்படும் மதுபான கடைகள், தமிழ்நாடு ஹோட்டல், சுற்றுலா துறை மூலமாக நடத்தப்படும் மதுக்கூடங்கள் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் உள்ளிட்ட அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை கடைகள்...
கோவை மாநகராட்சி உதவி கமிஷனர்கள் மாற்றம்
கோவை, செப். 27: கோவை மாநகராட்சி மத்திய மண்டல உதவி கமிஷனராக நித்யா நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இதற்கு முன்பு மேட்டூர் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்தார். இதேபோல், தெற்கு மண்டல உதவி கமிஷனராக தட்சிணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி வடக்கு மண்டல உதவி கமிஷனராக பணிபுரிந்த செந்தில்குமரன், நிர்வாகத்துறை இணை இயக்குனராக பதவி உயர்வு பெற்று, சென்னைக்கு மாற்றப்பட்டார்....
தொடர் விடுமுறையொட்டி கோவையில் இருந்து வெளியூர்களுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோவை, செப். 27: கோவை மாவட்டத்தில் காலாண்டு தேர்வு விடுமுறை, ஆயுத பூஜை தொடர் விடுமுறையொட்டி சேலம், திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளுக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் அக்டோபர் 1-ம் தேதி ஆயுத பூஜை,...
ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும்
கோவை,செப்.27: கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்பினருடனான கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சின்னவேடம்பட்டி தொழில் கூட்டமைப்பு சார்பில் ஜிஎஸ்டி ஆணையர் தினேஷ்ராவிடம் ஒரு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது, ‘‘ஜாப் ஆர்டர்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக...
பெண்ணிடம் நகை பறிப்பு
கோவை,செப்.26:கோவை ஒண்டிப்புதூர் அருகே உள்ள நஞ்சப்பா செட்டியார் வீதியை சேர்ந்தவர் ரங்கசாமி (57). இவர் நேற்று முன்தினம் மதியம் பைக்கில் தனது மனைவியுடன் சென்று கொண்டு இருந்தார். அப்போது இருகூர் ரோடு சுங்கம் அருகே வந்த போது, 2 பைக்கில் வந்த 3 பேர் திடீரென ரங்கசாமியை வழிமறித்தனர். அதில் ஒருவர் இறங்கி வந்து ரங்கராஜ்...
சூலூர் வட்டாட்சியர் ஆபீசில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம்
சூலூர், செப்.26: கோவை மாவட்டம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி காத்திருப்பு போராட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர்...
சுந்தராபுரம் பகுதியில் விதிமுறை மீறி கட்டிய கட்டிடத்திற்கு அதிகாரிகள் சீல்
மதுக்கரை, செப்.26: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் 96-வது வார்டு பகுதியில் உள்ள லோகநாதபுரம், முதலியார் வீதி, 4-வது தெரு பகுதியில், விதிமுறைகளை மீறி கட்டிடம் கட்டப்பட்டு வருவது குறித்து, பொது மக்கள் புகார் தெரிவித்தனர். மேலும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அந்த பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்பவர், சென்னை நீதிமன்றத்தில் வழக்கு...
உறுப்பு தான விழிப்புணர்வில் ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு விருது
கோவை, செப். 24: கோவை ராமகிருஷ்ணா மருத்துவமனை, உறுப்பு தான துறையில் ஆற்றிய சிறப்பான பங்களிப்புக்காக தமிழக அரசால் கவுரவிக்கப்பட்டது. உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதிலும், சமூகத்தில் நேர் மறையான மாற்றத்தை ஏற்படுத்துவதிலும் மருத்துவமனை வகிக்கும் பங்களிப்பை பாராட்டும் விதமாக நேற்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில் சென்னை கலைவாணர்...
பங்களாமேடு பகுதியில் மருந்து, மாத்திரைகள் எரிப்பு
மேட்டுப்பாளையம், செப்.24: மேட்டுப்பாளையம் நகராட்சியில் மொத்தமாக 33 வார்டுகள் உள்ளன. இதில் மேட்டுப்பாளையம் - சிறுமுகை சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகம் பின்புறம் பழைய நான்கு சக்கர வாகனங்களில் இருந்து உதிரிபாகங்களை பிரித்து எடுத்து விற்பனை செய்யும் ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இதேபோல் இச்சாலையின் வழியாக மேட்டுப்பாளையம் பங்களா மேடு பகுதிக்கு செல்ல...