நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி
கோவை, நவ.29: கோவை நீதிமன்றத்தின் முதல் மாடியில் இருந்து குதித்து வாலிபர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை சாயிபாபா காலனி பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (22). இவர் சமீபத்தில் கஞ்சா வழக்கில் சாயிபாபா காலனி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேற்று மாதேசை போலீசார் கோவை கோர்ட்டுக்கு...
விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்திவைப்பு
கோவை, நவ.28: தமிழக வேளாண்மை, உழவர்நலத்துறை அமைச்சர் தலைமையில் 87வது வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விரிவாக்க அலுவலர்களுக்கான மாநாடு சென்னையில் இன்று நடக்கவுள்ளது. இதில், பங்கேற்க அனைத்து வேளாண்மை துறை மற்றும் அதை சார்ந்த துறை தலைமை அலுவலர்கள் செல்ல இருப்பதால், கோவை மாவட்டத்தில் இன்று நடைபெற இருந்த வேளாண்மை உற்பத்திக்குழு கூட்டம் மற்றும் விவசாயிகள்...
சாய்பாபா காலனி மேம்பால பணி ஆகஸ்டில் முடியும்
கோவை, நவ.28: கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டில் ஜிஎன் மில்ஸ், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் மேம்பாலம் கட்டி திறக்கப்பட்டது. இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஓரளவு குறைந்துள்ளது. இந்த நிலையில், மேட்டுப்பாளையம் ரோடு பஸ்நிலையம் அருகே உள்ள சந்திப்பு பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை குறைக்க புதிய...
ஆசிரியை, டாக்டருக்கு இழப்பீடு; தலா ரூ.1 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு
கோவை, நவ. 28: கோவை அடுத்த கருமத்தம்பட்டி வேட்டைக்காரன் குட்டை பகுதியை சேர்ந்தவர் ஷர்மிளா(37). அரசு பள்ளி ஆசிரியை. இவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருப்பதாவது:- கருமத்தம்பட்டியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கி இருந்தேன். இந்த கடனுக்காக மாதாந்திர தவணை தொகையும் செலுத்தி வந்தேன். கடந்த 2021ம் ஆண்டு...
பிரசவ கால பாதிப்பு தவிர்க்க உடனடியாக சிகிச்சை
கோவை, நவ.27: கோவை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான பரிசோதனை, சிகிச்சை முறையாக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோய், ரத்த சோகை, போதுமான ஊட்டச்சத்து, உடல் எடை குறைவு போன்ற பாதிப்புகள் உள்ள கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்கள், அதை தீர்க்க அரசு மருத்துவமனையின் தாய் சேய் நல பிரிவினர் தீவிரம் காட்ட வேண்டும். கூடுதல்...
சிறுவாணி அணை நீர் மட்டம் கணிசமாக குறைகிறது
கோவை, நவ.27: கோவை சிறுவாணி அணையின் மொத்த நீர் மட்ட உயரம் 49.52 அடி. நேற்று அணையின் நீர் மட்டம் 38.70 அடியாக இருந்தது. அணையில் இருந்து 9.7 கோடி லிட்டர் குடிநீர் பெறப்பட்டது. அணையின் நீர் மட்டம் சுமார் 10 அடி குறைந்துள்ளது. நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. பல்வேறு பகுதியில் மழை...
வன்முறை ஒழிப்பு தின உறுதிமொழி; மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை
கோவை, நவ.27: கோவை ஒண்டிப்புதூரில் 2 ஆண்டுக்கு முன்பு நடந்த மாணவன் கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கோவை ஒண்டிப்புதூர் நஞ்சப்பா தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (68). லேத் பட்டறை நடத்தி வருகிறார். இவரது மகன் பிரணவ் (17). இவர் கடந்த 2024ம் ஆண்டு சின்ன வேடம்பட்டியில் தனியார் பள்ளியில்...
கோவை ரைசிங் பாடல் வெளியீடு
கோவை, நவ.26: கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லீ மெரிடியன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.43,884 கோடி முதலீட்டில், 1 லட்சத்து 709 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் புதிய தொழில்களுக்கான 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. இதனிடையே இந்த மாநாடு தொடர்பாக ‘கோவை ரைசிங்’ என்ற பாடலை தொழில்,...
மாநகராட்சியில் 100 வார்டில் வாக்காளர் படிவம் பெற 200 வாகனங்கள் ஏற்பாடு
கோவை நவ. 26: கோவை மாநகர் பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் நடக்கிறது. வீடு வீடாக வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து திரும்ப பெற காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் கோவை மாநகராட்சி பகுதியில் இன்று காலை முதல் கார்களில் வீடு வீடாக...