தங்கும் விடுதியில் வாலிபர் சடலம் மீட்பு

கோவை, அக். 25: கோவை காந்திபுரம் நேரு வீதியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் கடந்த 22ம் தேதி வாலிபர் ஒருவர் அறை எடுத்து தங்கினார். மறுநாள் காலை வெகு நேரமாகியும் அவர் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கவில்லை. கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது,...

பழமுதிர் நிலையத்தில் பிளாஸ்டிக் தடுப்பில் துளையிட்டு புகுந்து ரூ.88 ஆயிரம் கொள்ளை

By Suresh
25 Oct 2025

பெ.நா.பாளையம், அக்.25: கோவை கவுண்டம்பாளையம் மெயின் ரோடு கந்தசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் சேகர் (48). இவர் அந்த பகுதியில் பழமுதிர் நிலையம் ஒன்று நடத்தி வருகிறார். கடைக்கு கதவுவோ, ஷட்டரோ இல்லாத நிலையில் தற்காலிகமாக இரும்பு கேட் கொண்டு பயன்படுத்தி வந்தார். கடந்த 22 ம் தேதி இரவு வியாபாரத்தை முடித்து...

மழைக்கு ஒதுங்கிய மது பாட்டில்கள் கவுண்டம்பாளையத்தில் தாய், மகனை கத்தியால் தாக்கி பணம் பறித்த வாலிபர் கைது

By Suresh
25 Oct 2025

பெ.நா.பாளையம், அக்.25: கோவை கவுண்டம்பாளையம் முல்லை நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் என்பவர் மகன் கவுதம் (22). இவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். திருமணமாகி 4 ஆண்டு ஆகிறது. இவர் நேற்று முன்தினம் இவரது சகோதரி மகனுடன் வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்தார். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர்,...

திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம்

By Ranjith
23 Oct 2025

மதுக்கரை, அக்.24: கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 10,11,12,13,14,15 ஆகிய வார்டு பகுதி பொதுமக்கள் பயன்பெறும் வகையில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாம் நடந்தது. இம்முகாம் செம்பகாளியம்மன் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இம்முகாமை, மதுக்கரை தாசில்தார் வேல்முருகன் தலைமையில், மேற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், பேரூராட்சி தலைவர் கவிதா ஆகியோர் முன்னிலையில், கோவை...

செஞ்சேரிமலையடிபாளையம் பகுதியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாம்

By Ranjith
23 Oct 2025

கோவை, அக். 24: கோவை மாவட்டம் வ.சந்திராபுரம் வட்டாரம் செஞ்சேரிமலையடிபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் நாளை (சனிக்கிழமை) சிறப்பு மருத்துவ முகாம் நடக்கிறது. இம்முகாம் காலை 9 மணிக்கு துவங்கி, மாலை 4 மணி வரை இடைவிடாமல் நடக்கிறது. பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பியல் மருத்துவம், மகப்பேறு மருத்துவம்,...

பெரியநாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் தவித்த சிறுமி

By Ranjith
23 Oct 2025

பெ.நா.பாளையம், அக்.24: கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பஸ் நிறுத்தத்தில் நேற்று மதியம் பள்ளி சீருடையுடன் 8 வயது மதிக்கத்தக்க பெண் சிறுமி ஒன்று தனியாக நின்று கொண்டிருந்தது.  நீண்ட நேரம் இருந்த குழந்தையை பார்த்த அப்பகுதி மக்கள் சிறுமியிடம் பேசியபோது தமிழ் தெரியாமல் இந்தியில் பேசியதால் முழு விவரம் தெரியவில்லை. பெரியநாயக்கன்பாளையம் காவல்...

கணவர் இறந்த விரக்தியில் மனைவி தற்கொலை

By Ranjith
18 Oct 2025

கோவை, அக். 18: கோவை தொப்பம்பட்டி நேரு காலனியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி உமா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கடேசன் உயிரிழந்து விட்டார். இதனால் உமா மனவேதனையுடன் இருந்து வந்தார். மேலும் அவர் வழக்கமாக எடுத்து வந்த மருந்து, மாத்திரைகளை சாப்பிடாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த...

மாநகராட்சி 5-வது வார்டு தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை, இனிப்பு

By Ranjith
18 Oct 2025

கோவை, அக். 18: கோவை மாநகராட்சி 5வது வார்டுக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள், தண்ணீர் விநியோகம் செய்யும் ஊழியர்கள், தெருவிளக்கு பழுது பார்க்கும் ஊழியர்கள் உள்ளிட்ட கீழ்நிலை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையையொட்டி, புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இவற்றை, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தேசிய செயலாளரும், வார்டு கவுன்சிலருமான நவீன்குமார் வழங்கினார்....

அதிமுகவினர் 50 பேர் திமுகவில் இணைந்தனர்

By Ranjith
18 Oct 2025

கோவை, அக். 18: கோவை ஆர்.எஸ்.புரம் 72வது வார்டில் அதிமுகவை சேர்ந்த பாகமுகவர் பிரகாஷ், தலைமையில் 50 பேர் அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில், பகுதி செயலாளர் கார்த்திக் செல்வராஜ் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதில், முன்னாள் கவுன்சிலர் அம்சவேணி, கிருபா சபரிநாதன், வட்ட செயலாளர்கள்...

செஞ்சேரி மலையில் நூலகம் திறப்பு விழா

By Ranjith
16 Oct 2025

சூலூர், அக்.17: கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் பல்வேறு நலத்திட்ட பணிகள் துவக்க விழா, முடிவுற்ற பணிகள் திறப்பு விழா நடைபெற்றது. பெரிய வதம்பச்சேரி நல்லூர்பாளையம் ஜல்லிபட்டி, குமாரபாளையம், செஞ்சேரிமலை மற்றும் நகர களந்தை போன்ற பகுதிகளில் தார் சாலை அமைத்தல், அங்கன்வாடி கட்டிடங்கள் திறப்பு, நூலகம் திறப்பு...