சூலூரில் பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம் பொதுமக்களிடம் துணை வட்டாட்சியர் பேச்சு வார்த்தை
சூலூர்,ஜூலை8: கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த...
மாதா அம்ருதானந்தமயி தேவிக்கு அமைதிக்கான விருது வழங்கல்
கோவை, ஜூலை 8: உலகளாவிய அளவில் மாதா அம்ருதானந்தமயி செய்து வரும் சமூக நலத்திட்டங்களை அங்கீகரித்து அவருக்கு அமைதிக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. அம்ருபுரியில் உள்ள மாதா அம்ருதானந்தமயி மடத்தில் நடந்த விழாவில், விவேகானந்தா சர்வதேச உறவுகள் அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ககன் மல்ஹோத்ரா மற்றும் தலைமை ஆதரவாளர் ரவிகுமார் ஐயர் ஆகியோர் அம்மாவுக்கு அமைதிக்கான...
வால்பாறை இளம்பெண்ணுக்கு டாக்டர் டார்ச்சர்
கோவை, ஜூலை 8: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 40 வயதான, வால்பாறையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர், பாட்டிலில் மண்ணெண்ணெய் கொண்டு வந்திருந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் பகுதியில் போலீசார் சோதனை செய்த போது மண்ணெண்ணெய் இருப்பது தெரியவந்தது. இதை பறிமுதல் செய்த போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது...
காரமடை ரயில் நிலையத்தில் சர்வர் பிரச்னையால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் கூட்டம்
காரமடை, ஜூலை 7: மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு நாள்தோறும் 5 முறை பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் காரமடை,பெரியநாயக்கன்பாளையம், துடியலூர், வடகோவை வழியாக கோவை ரயில் நிலையத்தை சென்றடையும். பணி நிமித்தமாகவும், பள்ளி, கல்லூரி செல்வதற்காகவும் நாள் தோறும் இந்த பயணிகள் ரயிலை பல்லாயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி...
போதை பொருள் விழிப்புணர்வு போட்டி
கோவை,ஜூலை7: கோவைப்புதூர் பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் பட்டிங் ஆர்டிஸ்ட் சார்பில் ‘‘போதை பொருள் இல்லா தமிழகம்” என்ற தலைப்பில் குழந்தைகளுக்கான விழிப்புணர்வு போட்டி நேற்று நடந்தது. இதில்,போதை பொருள் இல்லா தமிழகம் குறித்த ரங்கோலி விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது. தொடர்ந்து குழந்தைகளுக்கு போதை பொருட்களை பயன்படுத்த கூடாது எனவும், போதை பொருள் எதிர்ப்பு...
12 வது பட்டமளிப்பு விழா நாராயண குரு கல்லூரியில் 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர்
கோவை, ஜூலை 7: நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழாவில் 700 மாணவர்கள் பட்டங்களை பெற்றனர். கோவை க.க.சாவடியில் அமைந்துள்ள நாராயண குரு கல்லூரியில் 12 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு நாராயண குரு கல்வி அறக்கட்டளையின் தலைவர் சாத்துகுட்டி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் கல்பனா...
காற்று மாசு ஏற்படுத்திய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை
கோவை, ஜூலை 6 : கொடிசியா அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கள்ளப்பாளையம் கிராமத்தில் கொடிசியா தொழில் பூங்கா, சுமார் 120 ஏக்கரில் அமைந்துள்ளது. இங்கு முதல்கட்டமாக 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு சுமார் ஆயிரம் பேர் பணி புரிந்து வருகின்றனர்....
ரயிலில் ஓசி பயணம்; 3 மாதத்தில் ரூ.6.18 கோடி அபராதம்
கோவை, ஜூலை 6: சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு பெறாமல், ஓசி பயணம் செய்பவர்களை கண்காணித்து பிடிப்பதில், ரயில்வே டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் முனைப்பு காட்டி வருகின்றனர். அதன்படி, நடப்பாண்டில், கடந்த ஏப்ரல் 1ம்தேதி முதல், ஜூன் 30ம் தேதி வரை நடத்தப்பட்ட ரெய்டில், பயணச்சீட்டு பெறாமல்...
குடும்பம் நடத்த அனுப்பாததால் கள்ளக்காதலியின் அண்ணன் மண்டையை உடைத்த வாலிபர்
கோவை,ஜூலை6:குடும்பம் நடத்த அனுப்பாததால் கள்ளக்காதலியின் அண்ணன் மண்டையை உடைத்த வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ் (34). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நகை பட்டறை தொழிலாளி. இவரது தங்கை தனது கணவரை பிரிந்து மகனுடன் ரமேஷ் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரமேசின் தங்கைக்கு செட்டி...