புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
கோவை, டிச. 3: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி தொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் அரசு மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில், எஸ்ஐஆர் தொடர்பான...
மீட்டர் கட்டணத்தை திருத்தியமைக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை மனு
கோவை, டிச.3: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,‘‘அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. எரிபொருள், உதிரிபாகங்கள், வாகன பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை விலை...
செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்
கோவை, டிச. 3: கோவை கணபதி புதூர் 10வது வீதியை சேர்ந்தவர் பழனி மகள் ஜோதி செல்வி (22). இவர் காந்திபுரத்தில் உள்ள நகைக்கடையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், ஜோதி செல்வி வேலைக்கு புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது நைசாக வீட்டுக்குள் நுழைந்த வாலிபர் ஒருவர் டேபிள் மீது வைத்திருந்த...
ரயில்வே பாலம் பராமரிப்பு பணிக்காக நல்லாம்பாளையம் சாலை மூடல்: பணிகளை விரைந்து முடிக்க திட்டம்
கோவை, டிச. 2: கோவை கவுண்டம்பாளையத்தில் இருந்து நல்லாம்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் ரயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தின் கீழ் கடந்து பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் பாலத்தின் கீழே குளம் போல தண்ணீர் தேங்கும். நல்லாம்பாளையத்தில் இருந்து கவுண்டம்பாளையம் செல்லும் அனைவரும் இந்த ரயில்வே பாலத்தை கடந்து தான்...
சுக்கிரவார்பேட்டை கோயிலில் 9 மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு
கோவை, டிச. 2: தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையதுறை சார்பில் ஆன்மீக ஈடுபாடு கொண்ட 70 வயதிற்கு மேற்பட்ட 2 ஆயிரம் தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அறநிலையத்துறை கோயில்களில் மூத்த தம்பதிகளுக்கு சிறப்பு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை காந்திபார்க் சுக்கிரவார்பேட்டை பாலதண்டாயுதபாணி சுவாமி கோயிலில்...
பைக் மீது பஸ் மோதி கூலித்தொழிலாளி பலி
மதுக்கரை, டிச. 2: பாலக்காடு மாவட்டம் இளுத்தச்சன் பகுதியை சேர்ந்த சிவதாசின் மகன் ராகுல் (25). ஆயலூர் பகுதியை சேர்ந்த பப்பவுக்குட்டனின் மகன் அனில்ஜித் (26). கூலி தொழிலாளிகளான இவர்கள் இருவரும் ஈச்சனாரி எல் அண்டு டி பைபாஸ் ரோடு பகுதியில் வேலை செய்வதற்காக கேரளாவில் இருந்து பைக்கில் வந்து கொண்டிருந்தனர். பைக்கை ராகுல்...
கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம்
கோவை, டிச. 1: கோவை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மாணவர்கள் நாசா இன்டர்நேஷனல் ஸ்பேஸ் ஆப் சேலஞ் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். இவர்கள் குளோபல் வேட்பளராக பரிந்துரைக்கப்பட்டு உள்ளனர். இந்த மாணவர்கள் அணி எக்ஸோபிளனட் பிரிவில் போட்டியிட்டனர். இப்பிரிவில்...
பைக் திருடிய சிறுவன் உள்பட 3 பேர் கைது
கோவை, டிச. 1:கோவை ஈச்சனாரியை சேர்ந்தவர் ராகுல் சக்ரவர்த்தி (20). ஆட்டோ டிரைவர். இவர் தனது விலை உயர்ந்த பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அதனை மர்ம நபர்கள் திருடிவிட்டு சென்றனர். அதன் மதிப்பு ரூ.3 லட்சத்துக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து...
பணிகள் முழுமையாக நிறைவடைந்த பின் கோவை செம்மொழி பூங்கா விரைவில் திறப்பு
கோவை, டிச.1: கோவை காந்திபுரம் பகுதியில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோவையில் கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில், அன்றைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி, மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165...