வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி பறக்கணிப்பு போராட்டம்
கோவை, ஜூலை 31: வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் நீதிமன்ற ஆணையின்படி நீதிமன்ற ஊழியர் மற்றும் சர்வேயர் உடன் 28ம் தேதி பள்ளியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதனை அளவிட சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் சென்றார். அப்போது, சமூக விரோதிகளால் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார். இதை...
ஆடிப்பெருக்கு, வார இறுதியை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்
கோவை, ஜூலை 31: கோவையில் ஆடிப்பெருக்கு, வாரயிறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை நாளையும் (1ம் தேதி), 2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும் வருகிறது. இந்த நாட்களில் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு அதிகளவிலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,...
கோவை மாநகரில் அதிரடி சோதனை: குட்கா விற்ற பெண் உட்பட 9 பேர் கைது
கோவை,ஜூலை31: கோவை மாநகர போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு குட்கா விற்பனையில் ஈடுபட்ட பெண் உட்பட 9 பேரை கைது செய்தனர். கோவை மாநகரில் ஆர்எஸ் புரம்,வெரைட்டி ஹால் ரோடு,காட்டூர்,சாய்பாபா காலனி,துடியலூர், பீளமேடு போலீசார் நேற்று முன்தினம் அவர்களது போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மளிகை கடை, பெட்டிக்கடை ஆகிய இடங்களில் அதிரடி...
வேளாண் பல்கலை.யில் காலநிலை மாற்ற தரவுகள் குறித்த கலந்துரையாடல்
கோவை, ஜூலை 30: கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தின் தாவர மூலகூறுவியல் மற்றும் உயிரித்தொழில்நுட்பவியல் மையத்தில் காலநிலை மாற்றத்தில் பெரிய தரவுகளைக் கையாளுதல் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், அமெரிக்காவின் ஓக் ரிட்ஜ் தேசிய ஆய்வகத்தின் சுற்றுசூழல் அறிவியல் துறையின் தரவு மைய இயக்குனர் கிரி பிரகாஷ் மாணவர்களுடன் கலந்துரையாடினார். இவர், தமிழ்நாடு வேளாண்மை...
கோவை ஸ்டேன்ஸ் பள்ளியில் முத்து விழா கொண்டாட்டம்
கோவை, ஜூலை 30: கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 1995ம் ஆண்டு பள்ளி இறுதியாண்டு (12ம் வகுப்பு) படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 26ம் தேதி மாலை பள்ளி அரங்கில் நடைபெற்றது. அந்த ஆண்டில் படித்த மாணவ, மாணவிகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் இந்த...
நம்பர் பிளேட் இல்லாமல் வாகனத்தில் வந்த வாலிபர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடியதால் பரபரப்பு
சூலூர், ஜூலை 30: சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் போலீசாரை பார்த்ததும் நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் தப்ப முயன்றார். அப்போது போலீசார் துரத்தி பிடித்து 6 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்டம் சூலூர் பழைய பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில்...
தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா
கோவை, ஜூலை 29: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் அறிமுக விழா நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் சார்பில் மேம்படுத்தப்பட்ட காகிதம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இதன் அறிமுக விழா மற்றும் வாடிக்கையாளர்கள், டீலர்கள் சந்திப்பு நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் செயல் இயக்குனர்கள் யோகேஷ் வர்சனே,...
பிரகதி மருத்துவமனையில் பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை
கோவை, ஜூலை 29: பிரேசில் நாட்டை சேர்ந்தவர் பெர்னால்டோ (60). இந்தோனேசியாவில் சி சர்பிங் பயிற்சியாளராக உள்ளார். இவர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில், நியூசிலாந்து நாட்டை சேர்ந்த அவரது நண்பர்கள் சிலர் கோவை பிரகதி மருத்துவமனையில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டனர். எனவே அவரும் கோவை பிரகதி மருத்துவமனைக்கு...
கோவை நீதிமன்றம் முன்பு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
கோவை, ஜூலை 29: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன் அமர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு புறம்பாக வக்கீல் வாஞ்சிநாதன் மீது கொடுத்துள்ள வழக்கினை, உடனடியாக கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் (ஜேஏஏசி) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற...