பில்லூர்-3 திட்டத்தின் குடிநீர் விநியோகத்தை கமிஷனர் ஆய்வு

  கோவை, ஆக.3: கோவை மாநகராட்சியில் உள்ள பொதுமக்களுக்கு பில்லூர் 1, பில்லூர் 2, பில்லூர் 3, சிறுவாணி, ஆழியார் மற்றும் பவானி ஆகிய 6 குடிநீர் திட்டங்கள் மூலமாக சீரான இடைவெளியில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. பவானி ஆற்று நீரை ஆதாரமாக கொண்ட பில்லூர்-3 குடிநீர் திட்டத்தின் கீழ், பவானி ஆற்றின் சமயபுரம்...

விபத்தை தவிர்க்க டிவைடர் தேவை

By Arun Kumar
02 Aug 2025

  கோவை, ஆக.3: கோவை நகரில் பல இடங்களில் சிக்னல்கள் பழுதான நிலையில் இருக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் ரோட்டை கடக்க முடியாமல் திணறி வருகின்றனர். குறிப்பாக, மேம்பால பணிகள் நடக்கும் இடங்களில் சிக்னல்கள் அகற்றி வைக்கப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சிக்னல்கள் இயங்கவில்லை. யு டர்ன் அதிகமாக்கப்பட்ட இடங்களில் போதுமான அளவு டிவைடர் வைக்கப்படவில்லை. போக்குவரத்து...

உலக நலன் வேண்டி பால்குட ஊர்வலத்தில் 500 பெண்கள் பங்கேற்பு

By Ranjith
01 Aug 2025

  மேட்டுப்பாளையம், ஆக.2: மேட்டுப்பாளையம் பால்குட பக்தர்கள் பாதயாத்திரை குழு சார்பில் உலக நலன் வேண்டி ஆண்டுதோறும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்று தேக்கம்பட்டி வன பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். 17 வது ஆண்டு பால்குட ஊர்வலம் மேட்டுப்பாளையம் சக்தி விநாயகர் கோயிலில் இருந்து நேற்று துவங்கியது. ஊர்வலத்தை விழா குழு தலைவர் பாஸ்கர்...

சோமனூரில் ஆடு, கோழிகளை திருட முயற்சித்த ஒருவர் சிக்கினார்; 3 பேர் ஓட்டம்

By Ranjith
01 Aug 2025

  சூலூர், ஆக.2: சோமனூர் பகுதியில் ஆடு, கோழி திருட முயன்ற 4 பேரை பொதுமக்கள் துரத்தினர். இதில் ஒருவர் பிடிபட்டார். மேலும் 3 தப்பி ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம், சோமனூர், சேடபாளையத்தை சேர்ந்த நாச்சிமுத்து என்பவரது மகன் சுப்பிரமணியம். தனது வீட்டின் அருகே சாலை அமைத்து ஆடுகள் மற்றும் கோழிகள்...

ஓரணியில் தமிழ்நாடு ஆலோசனை கூட்டம்

By Ranjith
01 Aug 2025

  கோவை, ஆக. 2: கோவை பீளமேடு அண்ணாநகரில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இதில், மண், மொழி, மானம் காத்திட ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தை வீடு வீடாக சென்று திமுக கழக உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்த...

21 கிலோ கஞ்சா விற்க முயன்றவருக்கு 14 ஆண்டு சிறை

By Ranjith
31 Jul 2025

  கோவை, ஆக.1: திருப்பூர் காமநாயக்கன்பாளையம் போலீசார் ரகசிய தகவல் அடிப்படையில் எம்.ஊத்துக்குளி ரோட்டில் கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி சோதனை செய்தனர். அப்போது ஒரு நபர் கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வருவதாக தகவல் கிடைத்தது. போலீசார் வெள்ளை நிற சாக்கு பையுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவர் வைத்திருந்த...

அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள 3 ஆந்தை குஞ்சுகள் மீட்பு

By Ranjith
31 Jul 2025

  கோவை,ஆக.1: கோவை கணபதியில் உள்ள ஒரு வீட்டு மாடியில் 3 பறவை குஞ்சுகள் இருந்துள்ளன. அவற்றின் சத்தம் வித்தியாசமாகவும் இருந்துள்ளது.அப்பகுதி மக்கள் பார்த்த போது, அவை வழக்கமான ஆந்தைகள் போல இல்லாமல் முகம் மற்றும் முன்பகுதி வெண்மையாகவும், உடலில் ஆங்காங்கே கருப்பு நிறத்திலும் இருந்துள்ளன.காக்கை மற்றும் பூனைகளால் அவை தாக்கப்படும் அபாயம் இருந்ததால், இது...

காரமடையில் ஆக.5ல் அதிமுக ஆர்ப்பாட்டம்

By Ranjith
31 Jul 2025

  கோவை, ஆக. 1: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:  கோவை புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில், காரமடை கார் ஸ்டாண்ட் அருகில் வரும் ஆகஸ்ட் 5ம் தேதி (செவ்வாய்) காலை 10 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ‘’காரமடை நகராட்சி சந்தைகடை ஏலத்தில் முறைகேடு செய்து, நகராட்சிக்கு வருமான...

வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி பறக்கணிப்பு போராட்டம்

By Ranjith
30 Jul 2025

  கோவை, ஜூலை 31: வக்கீல் படுகொலையை கண்டித்து கோவையில் வழக்கறிஞர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாராபுரத்தில் நீதிமன்ற ஆணையின்படி நீதிமன்ற ஊழியர் மற்றும் சர்வேயர் உடன் 28ம் தேதி பள்ளியில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டப்பட்டதனை அளவிட சென்னை வழக்கறிஞர் முருகானந்தம் சென்றார். அப்போது, சமூக விரோதிகளால் முருகானந்தம் படுகொலை செய்யப்பட்டார். இதை...

ஆடிப்பெருக்கு, வார இறுதியை முன்னிட்டு நாளை முதல் சிறப்பு பஸ்கள் இயக்கம்

By Ranjith
30 Jul 2025

  கோவை, ஜூலை 31: கோவையில் ஆடிப்பெருக்கு, வாரயிறுதி நாளை முன்னிட்டு சிறப்பு பஸ்கள் நாளை முதல் இயக்கப்படுகிறது. ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமை நாளையும் (1ம் தேதி), 2ம் தேதி சனிக்கிழமையும், 3ம் தேதி ஆடிப்பெருக்கும் வருகிறது. இந்த நாட்களில் கோவையில் இருந்து வெளியூர்களுக்கு அதிகளவிலான பயணிகள் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து,...