கோவை மாவட்டத்தில் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
கோவை, டிச. 7: கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணியின் அடிப்படையில் தற்போது வரை இறந்த வாக்காளர்கள் 1.13 லட்சம் பேர் உள்பட மொத்தம் 5 லட்சம் வாக்காளர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை என தெரியவந்துள்ளது. கோவை மாவட்டத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) பணி நடந்து வருகிறது....
பொதுமக்கள் விரட்டியதும் பிளிறியபடி ஓடிய யானை
மேட்டுப்பாளையம், டிச.6: மேட்டுப்பாளையம் அருகே உலா வந்த ஒற்றை யானையை போ.. சாமி... போ என செல்லமாக பொது மக்கள் விரட்டியதும் கால்நடைகளையும், மனிதர்களையும் பிளிறியபடி எச்சரித்து விட்டு ஓடியதால் பரபரப்பு நிலவியது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை லிங்காபுரம் பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் உணவு மற்றும் தண்ணீரை...
நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தொழிலாளிக்கு அடி, உதை
கோவை, டிச. 6:நண்பரை தாக்கியதை தட்டி கேட்ட தொழிலாளியை அடித்து உதைத்த வாலிபர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கோவை சுந்தராபுரம் குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ரித்தீஷ் (20). இவர், போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 3ம் தேதி வேலையை முடித்து வீடு திரும்பினார். அப்போது, அவரது...
டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
பொள்ளாச்சி, டிச.6: பொள்ளாச்சி அருகே டி.நல்லிக்கவுண்டன்பாளையத்தில் நேற்று, மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 9-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கிணத்துக்கடவு எம்எல்ஏவும், அதிமுக அமைப்பு செயலாளருமான செ.தாமோதரன் கலந்துகொண்டு, ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைக்கும், உருவப்படத்துக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில், அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், வடக்கு...
திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்கள் அரசுக்கு மாநகராட்சி கோரிக்கை
கோவை, டிச. 5: கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மைக்கு 200 வாகனங்களை கேட்டு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. கோவை மாநகரில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்தும் நோக்கில், தள்ளுவண்டிகளை மாற்றி கூடுதல் வாகனங்களை கொண்டு குப்பை சேகரிப்பு பணியை மேற்கொள்ள மாநகராட்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதனிடையே, அரசிடம் கூடுதல் வாகனங்கள் கேட்டு கோரிக்கை விடப்பட்டுள்ளது. இதுகுறித்து...
அரசின் ஆன்மிக சுற்றுப்பயணம் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர்
கோவை, டிச. 5: அரசின் ஆன்மிக சுற்றுப்பயணத்தில் கோவையில் இருந்து 30 பேர் காசி சென்றனர். தமிழ் நாடு அரசு ஆன்மிக சுற்றுப்பயணமாக ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு வயது மூப்பின் காரணமாகவும், இறைதரிசனம் கிடைக்க இயலாத 60 வயது முதல் 70 வயதிற்கு உட்பட்ட 920 பக்தர்களை கடந்த...
சிறிய தொகுதிகளில் எஸ்ஐஆர் பணிகள் விரைவில் நிறைவு
கோவை, டிச. 5: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் (எஸ்ஐஆர்) நடக்கிறது. மாவட்ட அளவில் வீடு,வீடாக விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டது. பூர்த்தியான படிவங்கள் திரும்ப பெறும் பணிகள் நடக்கிறது. நேற்று வரை வழங்கப்பட்டிருந்த கால கெடு, வரும் 11ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் 10 சட்டமன்ற...
புலியகுளம் அரசு மகளிர் கல்லூரியில் எஸ்ஐஆர் விழிப்புணர்வு ஓவியப்போட்டி
கோவை, டிச. 3: கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி தொடர்பாக மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் பொதுமக்கள், கல்லூரி மாணவர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் அரசு மகளிர் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில், எஸ்ஐஆர் தொடர்பான...
மீட்டர் கட்டணத்தை திருத்தியமைக்க கோரி ஆட்டோ ஓட்டுநர்கள் கோரிக்கை மனு
கோவை, டிச.3: கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்கத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் நேற்று ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது,‘‘அரசு நிர்ணயித்த ஆட்டோ மீட்டர் கட்டணம் 13 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. எரிபொருள், உதிரிபாகங்கள், வாகன பராமரிப்பு செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவை விலை...