சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது
சென்னை, ஜூலை 11: சென்னையில் உள்ள 19 மண்டலங்களில் நாளை ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறும் என தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது விநியோக திட்டத்தின் பயன்களை குடும்ப அட்டைதாரர்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் சென்னையை பொறுத்தவரை மண்டல...
தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்படும் மாவட்ட தலைமை மருத்துவமனை இம்மாத இறுதியில் திறக்க ஏற்பாடு: இறுதிகட்ட பணிகள் விறுவிறு
தாம்பரம், ஜூலை 11: தாம்பரத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனையை இம்மாத இறுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறக்க உள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தாம்பரம் அரசு பொது மருத்துவமனை, குரோம்பேட்டையில் இயங்கி வருகிறது. இங்கு, சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் தினசரி மருத்துவ சிகிச்சை பெறுகின்றனர். இந்த மருத்துவமனையை...
பணி நிரந்தரம் செய்யக்கோரி அனுமதியின்றி கோட்டை நோக்கி சென்ற தூய்மைப் பணியாளர்கள் கைது
தண்டையார்பேட்டை, ஜூலை 10: நாடு முழுவதும் நேற்று பொது வேலை நிறுத்தம் நடந்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி வழக்கறிஞர் கு.பாரதி தலைமையில் பாரிமுனை குறளகத்தில் இருந்து கோட்டை நோக்கி பேரணியாக சென்று தமிழக முதல்வர், துணை முதல்வரை நேரில் சந்தித்து அவர்களிடம் கோரிக்கை மனு...
உல்லாசத்துக்கு பெண்களை அனுப்புவதாக கூறி ரூ.1.20 லட்சம் பெற்று ஏமாற்றிய பாலியல் புரோக்கர் கடத்தல்: தனியார் சட்டக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது
சென்னை, ஜூலை 10: உல்லாசத்துக்கு இளம்ெபண்களை அனுப்புவதாக கூறி ரூ.1.20 லட்சம் பணம் பெற்று ஏமாற்றிய பாலியல் புரோக்கர் மற்றும் அவரை கடத்திய தனியார் சட்டக் கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே மூன்று சட்டக் கல்லூரி மாணவர்கள் வாலிபரை கடத்தி சென்று மறைவான...
சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் பணியாற்ற மண்டல துணை தளபதி பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஜூலை 10: சென்னை பெருநகர காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர ஊர்க்காவல் படையில் மண்டல துணை தளபதி பதவிக்கு இளமையும், ஊக்கமும், அர்ப்பணிப்பு மற்றும் தலைமை பண்புடைய விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், உயர் பதவி வகிப்பவர்கள், சுய தொழில் புரிபவர்கள், உயர் தகுதி வாய்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் பொது நலத்தொண்டில் ஈடுபாடு...
மக்கள் தொகை உள்ளிட்ட முக்கிய விவரங்களை புதுப்பிக்கும் வகையில் வீடு வீடாக பயோமெட்ரிக் கணக்கெடுப்பு: சைதையில் இன்று தொடங்குகிறது சென்னை மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 9: சென்னை மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களை புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு பணிகளை மாநகராட்சி தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு, குறிப்பாக சைதாப்பேட்டை, திடீர் நகர், அடையாறு ஆற்றங்கரை உள்ளிட்ட பகுதிகளில் முதற்கட்டமாக நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள...
கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்படும் 1800 புதிய குடியிருப்பு பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
சென்னை, ஜூலை 9: கோட்டூர்புரத்தில் ரூ.307.24 கோடியில் கட்டப்படும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் டிசம்பருக்குள் முடிக்கப்படும், என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோட்டூர்புரம் திட்டப்பகுதியில் ரூ.307.24 கோடியில் கட்டப்பட்டு வரும் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமான பணிகளை அமைச்சர்கள்...
கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பாஜ நிர்வாகி கைது: கூட்டாளிகளும் சிக்கினர்
சென்னை, ஜூலை 9: சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக தலைமை செயலக காலனி இன்ஸ்பெக்டர் அகிலனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று குன்னூர் நெடுஞ்சாலை பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த 3 பேரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம், ஒரு கிலோ...
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
சென்னை: பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் சைபர் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சட்ட உரிமைகள்சட்ட உதவிகள்பாதுகாப்பு அம்சங்கள்சமுதாயத்தில் பெண்களின் பங்குதனித்திறன்சட்ட நுணுக்கங்கள் தொடர்பான தகவல்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்கள்ஊடகங்கள்சமூக வலைதளங்கள் மற்றும் விளம்பரங்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சமூகத்தில் வன்முறையைக் குறைக்கவும்பெண்கள் மற்றும்...