விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் நெரிசலை கட்டுப்படுத்த குழு: அங்காடி நிர்வாகம் நடவடிக்கை
அண்ணாநகர், ஆக.27: தமிழகம் முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வெளியூர்களில் இருந்து விளாங்காய், கம்பு மற்றும் சோளம், பேரிக்காய், வாழை இலை, வாழைப்பழம், தேங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட பூஜை பொருட்கள் லாரிகளில் வந்து கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்துள்ளன. இந்நிலையில், மார்க்கெட் வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளால், வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சரக்கு...
மெட்ரோ ரயில் பணிக்காக நாளை முதல் 30ம் தேதி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம்: வாரியம் தகவல்
சென்னை, ஆக.27: சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்ணா நகர் மண்டலம், திருமங்கலம் 100 அடி சாலையில் (15வது பிரதான சாலை சந்திப்பு மற்றும் 2வது நிழற்சாலை சந்திப்பு) பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணிகள் மேற்கொள்வதால் நாளை காலை 9 மணி முதல் 30ம் தேதி காலை...
நீர்நிலைகளை புனரமைக்கும் பணிகள் தீவிரம் கடந்த 3 மாதத்தில் வேகமாக உயர்ந்த நிலத்தடி நீர்மட்டம்: நிலப்பரப்புகளை நீர்பரப்புகளாக மாற்றும் சென்னை மாநகராட்சி
சென்னை, ஆக.23: சென்னை மாநகராட்சி மிகவும் வளர்ந்த நகரமாக இருந்து வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருப்பதாக சென்னை மாநகராட்சியில் அனைத்து வித அடிப்படை வசதிகளையும், செய்து தரவேண்டிய கட்டாயம் உள்ளது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை கோடை காலத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதும், குடங்களுடன் குடிநீருக்காக மக்கள் அலைவதும் கடந்த காலங்களில் அரங்கேறிய வழக்கமான சம்பவங்கள் என்றே...
தாம்பரம் மாநகராட்சியில் 10 ஆயிரம் நாய்களுக்கு தடுப்பூசி
தாம்பரம், ஆக.23: தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் 45,000 தெரு நாய்கள் மற்றும் 4000 முதல் 5000 வரை வளர்ப்பு நாய்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் ஆய்வுப்படி, குறைந்தபட்சம் 70 சதவீத நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும்பட்சத்தில் நோய் கிருமி தொற்று பரவலை முற்றிலுமாக தடுக்க முடியும். எனவே, தெரு நாய்களுக்கான வெறிநோய்...
மாங்காடு காவல் எல்லையை பிரித்து மவுலிவாக்கத்தில் காவல்நிலையம் திறப்பு: குற்ற சம்பவங்களை குறைக்க நடவடிக்கை
பல்லாவரம், ஆக.23: மவுலிவாக்கத்தில் புதியதாக அமைக்கப்பட்ட காவல் நிலையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார். ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மாங்காடு காவல் நிலையத்தின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் குற்ற வழக்குகளை சமாளிப்பதும், ரோந்து பணிகளில் ஈடுபடுவதும் காவலர்களுக்கு கடும் சிரமமாக இருந்து வந்தது. இதன் காரணமாக, மாங்காடு காவல் நிலையத்தை இரண்டாக பிரித்து மவுலிவாக்கம்...
காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு நர்ஸ் தற்கொலை முயற்சி
பெரம்பூர், ஆக.22: காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் மாத்திரைகளை சாப்பிட்டு நர்ஸ் தற்கொலை முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பட்டாளம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா (19, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், குரோம்பேட்டையில் உள்ள காப்பகத்தில் செவிலியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு அலுவலகத்தில் திடீரென மயங்கி விழுந்தார். சக ஊழியர்கள் சங்கீதாவை மீட்டு குரோம்பேட்டை அரசு...
மணலியில் ரூ.13.50 கோடியில் நடைபெறும் 4 ஏரிகளின் சீரமைப்பு பணியை ஒன்றிய அரசு அதிகாரி ஆய்வு
திருவொற்றியூர், ஆக.22: மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்கவும், குடியிருப்புகளை வெள்ள நீர் சூழ்வதை தடுக்கவும் ஒன்றிய அரசின் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.8.90 கோடியில் மணலி காமராஜர் சாலையில் உள்ள மணலி மாத்தூர் ஏரி, மாதவரம் ஏரி ஆகியவற்றை நவீன தொழில்நுட்பத்துடன் தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அத்துடன், ஏரிக்கரையில் பொதுமக்களுக்கு நடைபாதை,...
வரதட்சணை புகார் விசாரணையின்போது காவல் நிலையத்தில் இருதரப்பு மோதல்: மாமியார், மருமகள் மருத்துவமனையில் அனுமதி
பெரம்பூர், ஆக.22: காவல் நிலையத்தில் இரு தரப்பினர் ஆய்வாளர் முன்னிலையில் சரமாரியாக தாக்கி கொண்ட சம்பவம் கொளத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொளத்தூர் கம்பர் நகரை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி (58). இவரது மகன் ஹரி பாஸ்கர், கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். கடந்த 2021ம் ஆண்டு பிரபல மேட்ரிமோனியல் இணையதளம் மூலம் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த...
பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கி பாதுகாப்பு சோதனை: மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தகவல்
சென்னை, ஆக.20: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பூந்தமல்லி - போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கி பாதுகாப்பு சோதனை தொடங்கியுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை - போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை...