ஐஸ்அவுஸ் பகுதியில் தடையை மீறி நுழைய முயன்ற இந்து முன்னணி நிர்வாகிகள் 53 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை, செப்.2: ஐஸ்அவுஸ் பகுதியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் மணலி மனோகரன் மற்றும் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் உட்பட 53 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் வழிபாடு முடிந்து...
சிங்கபெருமாள்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டில் 140 சவரன் கொள்ளை: சிசிடிவி காட்சி மூலம் ஆசாமிகளுக்கு வலை
சென்னை, செப்.2: சிங்கபெருமாள்கோவில் அருகே தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோ லாக்கரில் வைத்திருந்த 140 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சிங்கபெருமாள்கோவில் பாரதியார் தெருவில் வசிப்பவர் ரத்தீஷ் (40), தொழிலதிபர். இவர், அதேபகுதியில் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, இவரது தாய் வீட்டில்...
விநாயகர் சிலைகள் கரைப்பு எதிரொலி; பட்டினப்பாக்கம் கடற்கரையில் 77 டன் குப்பை கழிவு அகற்றம்: மாநகராட்சி தகவல்
சென்னை, செப்.2: விநாயகர் சிலைகள் கரைப்பு காரணமாக, பட்டினப்பாக்கம் கடற்கரையில் குவிந்த 77டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 27ம் தேதி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. சென்னையை பொருத்தவரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை பெருநகர காவல் எல்லையில் 1,519 சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் எல்லையில் 300க்கும்...
பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது: 7ம் தேதி ஆடம்பர தேர் பவனி
வேளச்சேரி, ஆக.30: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய 53ம் ஆண்டு பெருவிழா கொடி ஏற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. இந்த ஆண்டின் மையக் கருத்தாக யூபிலி ஆண்டின் நிறைவு விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை கொடியேற்று விழாவையொட்டி ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முன்னதாக காலை 5.30 மணி, 6.30 மணி,...
சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீள சாலை வெட்டு சீரமைப்பு பணிகள் நிறைவு: மாநகராட்சி தகவல்
சென்னை, ஆக.30: சென்னையில் 2,995 சாலைகளில் 480 கி.மீ நீளத்திற்கு சாலை வெட்டு சீரமைக்கும் பணிகளை நிறைவடைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியில் சாலை அமைத்தல், பாலம் கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி, 418.56 கி.மீ. நீளம் கொண்ட...
கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் 27,647 ச.மீ. பரப்பில் 4 புதிய குளங்கள்: கூடுதலாக மழைநீர் சேமிக்க ஏற்பாடு
சென்னை, ஆக.30: கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களின் கொள்ளளவை 2 மடங்காக அதிகரிக்கும் வகையில், 27,647 ச.மீ., பரப்பளவில் புதிதாக 4 குளங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையை...
3ம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க முடிவு: சார்ஜிங் ஸ்டேஷன் அமைக்கும் பணிகள் மும்முரம் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
சென்னை, ஆக. 29: மூன்றாம் கட்டமாக பூந்தமல்லி பணிமனையில் இருந்து செப்டம்பர் மாதம் முதல் 125 மின்சார பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்துதுறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்புகளை தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எரிபொருள் செலவை குறைக்கும் வகையிலும், காற்று மாசை கட்டுப்படுத்தும்...
சென்னையில் இன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
சென்னை, ஆக. 29: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களிலும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறையில் பணி நியமனம்...
ஜனாதிபதி வருகை சென்னையில் 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: காவல்துறை அறிவிப்பு
சென்னை, ஆக. 29: சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கை: குடியரசுத் தலைவர் வரும் 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் சென்னைக்கு வந்து 2ம் தேதி மதியம் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்கிறார். தொடர்ந்து, 3ம் தேதி விமானம் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு செல்கிறார்....