பாலியல் தொழில் செய்த பெண் புரோக்கர் கைது: தொடர்ந்து வீடுகளை வாடகைக்கு விட்ட உரிமையாளர் மீதும் வழக்கு பாய்கிறது
சென்னை, ஜூலை 26: சாலிகிராமம் திருவள்ளுவர் தெருவில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில், விபசார தடுப்பு பிரிவு-1 இன்ஸ்பெக்டர் ராஜலட்சுமி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் அந்த வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அதில் சூளைமேடு பகுதியை சேர்ந்த மகாலட்சுமி (33) என்பவர், தனது ஆண் நண்பருடன்...
விபத்தில் உயிரிழந்த மாணவன் உடல் உறுப்புகள் தானம்
அம்பத்தூர் ஜூலை 25: அம்பத்தூர் கள்ளிக்குப்பம் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் ரகுமூர்த்தி. இவரது மனைவி லஷ்மி. இவர்களது மூத்த மகன் சந்தோஷ் (24), தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். 2வது மகன் ஹேம்நாத் (20), நெற்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இருசக்கர வாகனத்தில்...
சுகாதாரமற்ற முறையில் உணவு விற்ற கடைகள் அகற்றம்
அண்ணாநகர், ஜூலை 25: கோயம்பேடு மார்க்கெட் அருகே மழைநீர் கால்வாய் பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், சாலையில் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் அருகில், தள்ளுவண்டி கடை உணவகங்கள் சுகாதாரமற்ற முறையில் செயல்பட்டு வந்தன. இது தொடர்பாக, அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதிக்கு வந்த புகாரின் பேரில், அவர் நேரில் ஆய்வு செய்து,...
நகரமைப்பு பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் 28ம் தேதி வரை நிறுத்தம்: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை, ஜூலை 25: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள் சேவைகளின் பாதுகாப்பு, கிடைக்கும் தன்மை அளவிடுதல் ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை மாநில தரவு மையத்திற்கு இடம் பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு...
கோயம்பேடு மார்க்கெட் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக அமைத்த 300 கடைகள் அகற்றம்: அங்காடி நிர்வாக அதிகாரி அதிரடி
அண்ணாநகர், ஜூலை 24: கோயம்பேடு மார்க்கெட் அருகே அங்காடி நிர்வாகத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து 300க்கும் மேற்பட்ட கடைகள் போடப்பட்டுள்ளன. இந்த கடைகளால் தினமும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாக வியாபாரிகள் அங்காடி நிர்வாகத்தில் புகார் அளித்தனர். அதன்படி அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி கோயம்பேடு மார்க்கெட்டை சுற்றியுள்ள இடத்தை ஆய்வு செய்து, ஏற்கனவே...
வேப்பேரியில் தொழிலதிபர்களுக்கு கொக்கைன் விற்றவர் கைது
சென்னை, ஜூலை 24: வேப்பேரி பகுதியில் தொழிலதிபர்களுக்கு கொக்கைன் விற்று வந்த ராஜஸதான் வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 7 கிராம் கொக்கைன், ஒரு ஐ போன் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை சூளைமேடு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் கொக்கைன் விற்பனையில் ஈடுபட்டதாக மயூர் ராட் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர்...
குரோம்பேட்டை நியூ காலனியில் டிரான்ஸ்பார்மர் வெடித்து தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
தாம்பரம், ஜூலை 24: குரோம்பேட்டை, நியூ காலனி, 1வது பிரதான சாலையில் ஏராளமான குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த பகுதியில் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகளுக்கு சீரான மின்சாரம் விநியோகிக்க டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் இந்த டிரான்ஸ்பார்மர் நேற்று காலை திடீரென பலத்த சத்தத்துடன் வெடித்து தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட...
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் 6 மண்டலங்களில் இன்று நடக்கிறது: மாநகராட்சி அறிவிப்பு
சென்னை: உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர் உள்ளிட்ட 6 மண்டலங்களில் நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (23ம் தேதி) மாதவரம் மண்டலம், வார்டு-24ல் புனித அந்தோணி நகர், ஜிஎன்டி சாலையில் உள்ள தியா திருமண...
கூடுதல் வரதட்சணையாக ரூ.1 கோடி கேட்டு கணவர் சித்ரவதை: போலீசில் மனைவி புகார்
அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் 25 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் புகார் ஒன்று கொடுத்தார். அதில் கூறியிருந்ததாவது: எனக்கு முகப்பேர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (28) என்பவருடன், இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. எனது கணவர், எலக்ட்ரீஷியன் கடை நடத்தி வருகிறார். திருமணத்தின் போது,...