வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை: திமுக, காங்., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு
சென்னை, அக்.30: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ.4ம்தேதி தொடங்கும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி, அன்று முதல் தேர்தல் பணியாளர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வாக்காளர் தகவல் உறுதிப்படுத்தும் பணி மேற்கொள்வார்கள். புதிய வாக்காளர்களிடமிருந்து விண்ணப்பங்களும் பெறப்படுகின்றன. இந்த சூழ்நிலையில், வாக்காளர் தங்களது இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ்களை சமர்ப்பித்தால்...
தீபாவளியின்போது பட்டாசு வெடித்த 81 பேருக்கு பார்வை இழப்பு
சென்னை, அக்.29: தீபாவளி பண்டிகையின்போது பட்டாசு வெடித்ததில் 81 பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. 2023, 24ம் ஆண்டுகளை காட்டிலும், இந்தாண்டு உடல், கை, கால்கள், கண்பார்வை பாதிப்பு அதிகரித்துள்ளது. கடந்த 2023, 2024, 2025ம் ஆண்டுகளில் பட்டாசு வெடித்தபோது மாவட்டம் வாரியாக ஆண், பெண் மற்றும் குழந்தைகள் காயமடைந்து, கண் பார்வை பாதிக்கப்பட்டு...
ஆர்பிஎப், சிஇஐஆர் போர்ட்டல் மூலம் ரூ.30 லட்சம் மதிப்பு செல்போன்கள் மீட்பு
சென்னை, அக்.29: ரயில் பயணிகள் சேவையை மேம்படுத்தவும், டிஜிட்டல் திறனை உயர்த்தவும் தெற்கு ரயில்வேயின் ரயில்வே பாதுகாப்பு படை (ஆர்பிஎப்) ஏப்ரல் மாதம் முதல் மத்திய உபகரண அடையாள பதிவேடு (சிஇஐஆர்) மூலம் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 120க்கும் மேற்பட்ட இழந்த மொபைல் போன்களை வெற்றிகரமாக மீட்டுள்ளது. ரயில் பயணிகளின் இழந்த மொபைல்...
22 சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் அகற்றம்
சென்னை, அக்.29: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும், வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள மோந்தா புயல் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், சென்னையில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க, மாநகராட்சி அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் நேற்று காலை நிலவரப்படி...
1. தாம்பரம் - செங்கல்பட்டு இடையிலான 4வது ரயில் பாதை கிழக்கு புறம் அமைகிறது: குடியிருப்புகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை
சென்னை, அக்.28: தாம்பரம் - செங்கல்பட்டு 4வது ரயில் பாதை கிழக்கு புறமாக அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பெரும்பாலான ரயில்கள் செங்கல்பட்டு வழியாக செல்கின்றன. தினசரி 60க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும், 200க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களும் இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன. ஆனால், இத்தடத்தில் 3 பாதைகள்...
வடசென்னை பகுதிகளில் குளம், கால்வாய் தூர்வாரும் பணியை துணை முதல்வர் உதயநிதி ஆய்வு: விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்
சென்னை, அக்.28: தண்டையார்பேட்டை மண்டலம் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் வியாசர்பாடி கால்வாயில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். தொடர்ந்து வியாசர்பாடி பகுதி கேப்டன் காட்டன் கால்வாயில் ரூ.6.85 கோடி மதிப்பீட்டில் பொக்லைன் மற்றும் மிதக்கும் பொக்லைன் இயந்திரம் கொண்டு நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை டான்பாஸ்கோ பள்ளி...
சைதாப்பேட்டையில் மெட்ரோ ரயில் பயணிகளுக்கு கூடுதல் நுழைவாயில் திறப்பு
சென்னை, அக்.28: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பயன்படுத்துவதற்காக தாதண்டர் நகர் நோக்கிச் செல்லும் வகையில் கூடுதலாக ஒரு நுழைவாயிலை நேற்று திறந்துள்ளது. இந்த வசதியை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பயணிகளில் ஒருவரான தில்ஷத் பானு திறந்து வைத்தார்....
சென்னையில் மழை பாதிப்புகளை சரிசெய்ய 22 ஆயிரம் கள பணியாளர்கள்: மாநகராட்சி தகவல்
சென்னை, அக்.26: சென்னையில் பருவமழை பாதிப்புகளை சரிசெய்ய மாநகராட்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் உள்பட 22,000 பேர் களத்தில் உள்ளனர். வடகிழக்கு பருவமழை தொடங்கி, தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த பருவமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழைநீரால் பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாகவும், காணொலி...
சடையன்குப்பம் - ஜோதி நகர் இடையே மணலி சாலையில் வெள்ளப்பெருக்கு: போக்குவரத்து பாதிப்பு
திருவொற்றியூர், அக்.26: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு நீர் வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 500 கன அடியாக உள்ளது. இதனால், பாதுகாப்பு கருதி, இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து வினாடிக்கு 9500 கன அடி உபரி நீர்...