கட்டுமான பணிகள் காரணமாக ஆவடி பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றம்: போக்குவரத்து கழகம் தகவல்
சென்னை, செப்.14: கட்டுமான பணிகள் காரணமாக ஆவடி பேருந்து நிலையம் இன்று முதல் தற்காலிகமாக மாற்றப்படுகிறது. இதுகுறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும திட்டத்தின் கீழ், ஆவடி பேருந்து முனையத்தை நவீனபடுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றி அமைக்க கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதால், இப்பேருந்து நிலையத்தில்...
பெண்ணுக்கு பாலியல் தொல்லை பாஜ பிரமுகர் மீது வழக்குப்பதிவு
ஆலந்தூர், செப்.14: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜ பிரமுகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆதம்பாக்கம், பெரியார் நகரை சேர்ந்தவர் மலர் (40). இவர் அதே பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த பாஜ மண்டல செயற்குழு உறுப்பினரும், ஆட்டோ ஓட்டுநருமான நடராஜன் (51), பூக்கடை அருகே, ஆட்டோவை நிறுத்தும்...
நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் 1,148 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணை: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
பெரம்பூர், செப்.13: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் மூலக்கொத்தளம் எம்.எஸ் நகரில் ரூ.46.56 கோடியில் 308 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு பணிகள் முடிந்து நேற்று மாலை மக்கள் பயன்பாட்டிற்காக குடியிருப்பு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு வீடு ஒதுக்கீடு ஆணையை பயனாளிகளுக்கு வழங்கினார். தொடர்ந்து...
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு காலி மனை உரிமையாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு : தாம்பரம் மாநகராட்சி அதிரடி
தாம்பரம், செப்.13: தாம்பரம், பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல், செம்பாக்கம் ஆகிய நகராட்சிகளும், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, மாடம்பாக்கம், சிட்லபாக்கம், திருநீர்மலை ஆகிய பேரூராட்சிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாம்பரம் மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. 87.64 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தாம்பரம் மாநகராட்சியில், 5 மண்டலங்கள் மற்றும் 70 வார்டுகள் உள்ளன. இதில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்...
பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ெஜன்ட், மசாலா தயாரித்த குடோனுக்கு சீல்
திருவொற்றியூர், செப்.13: திருவொற்றியூர் சாத்துமா நகர், காந்திநகர் பகுதியில் இயங்கி வரும் ஒரு குடோனில், பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி டிடர்ஜென்ட் பவுடர், மசாலா பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை தயாரித்து விற்பனை செய்வதாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மும்பையில் இருந்து...
அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக பாலாற்றின் குறுக்கே புதிய பாலம்: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்
சென்னை, செப்.12: அதிகரித்து வரும் நெரிசலுக்கு தீர்வாக பாலாற்றின் குறுக்கே புதிய 4 வழி மேம்பாலம் அமைக்கப்படும், என தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் அதனை சுற்றிய புறநகர் மாவட்டங்களில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் சார்பில் புதிய சாலைகள் அமைப்பது, பழைய சாலைகள் சீரமைப்பு...
மாநகராட்சி சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு
சென்னை, செப்.12: சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கு 3 வேளையும் விலையில்லா உணவு தர முடிவு செய்யப்பட்டுள்ளது. சமையல் நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் அதிகாலையிலேயே தங்கள் பணிகளை தொடங்கிவிடுவார்கள். இதனால், பலர் சரியான நேரத்தில் உணவு உட்கொள்வதில்லை. இவர்களுக்கு தினசரி உணவு வழங்குவது, அவர்களின் உடல்...
குடிநீர் வாரியம் சார்பில் நாளை குறைதீர் கூட்டம்
சென்னை, செப்.12: சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம், மாதம்தோறும் 2வது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்திற்கான குறைதீர் கூட்டம், நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்கள் வாயிலாக பொதுமக்கள் பயன்பெற...
தினமும் லட்சக்கணக்கானோர் வந்து செல்லும் செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணி : புதிய மாடி, ஏசி காத்திருப்பு அறைகள் லிப்ட்கள், விரிவாக்க பார்க்கிங்கும் உண்டு
சென்னை, செப்.10: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் அம்ருத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.22.14 கோடியில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பொதுமக்கள் கல்வி, வேலை, வியாபாரம், மருத்துவம் என பல்வேறு தேவைகளுக்காகவும் சென்னை பெருநகருக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், சென்னையில் இருந்து...