நெசப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோயில் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்றக்கோரி வழக்கு: மாநகராட்சி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.5: நெசப்பாக்கம் வரசக்தி விநாயகர் கோயில் எதிரில் உள்ள எம்ஜிஆர் சிலையை அகற்ற கோரிய மனுவுக்கு சென்னை மாநகராட்சி பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் விருகம்பாக்கத்தை சேர்ந்த எம்.கோபால் தாக்கல் செய்த மனுவில், நெசப்பாக்கத்தில் 275 ஆண்டுகள் பழமையான வரசக்தி விநாயகர் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு...
இந்திய கடற்படை சார்பில் முதன்முறையாக ‘சென்னை அரை மாரத்தான்’ ஓட்டம்: டிச.14ல் பொதுமக்களும் பங்கேற்கலாம்
சென்னை, நவ.5: இந்திய கடற்படை சென்னையில் முதன்முறையாக அரை மாரத்தான் ஓட்டத்தை வரும் டிசம்பர் 14ம் தேதி நடத்த உள்ளது. மும்பை, விசாகப்பட்டினம் போன்ற நகரங்களில் மாரத்தான் நிகழ்ச்சியை நடத்திய இந்திய கடற்படை மாரத்தான்களின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னையில் முதல் ‘சென்னை அரை மாரத்தான்’ ஓட்டத்தை வரும் டிசம்பர் 14ம் தேதி நடத்த உள்ளது....
ஒரு மண்டலத்துக்கு ரூ.1 கோடி வீதம் ஒதுக்கீடு செய்து சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி தீவிரம்: விரைந்து முடிக்க திட்டம்
சென்னை, நவ.1: மழை ஓய்ந்த நிலையில், சென்னை முழுவதும் சேதமடைந்த சாலைகளை ரூ.15 கோடி மதிப்பில் சீரமைக்கும் பணி தொடங்கப்பட்டு, முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த மழை வருவதற்குள் இப்பணிகளை முடிக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பருவமழை காலம் வந்து விட்டாலே சென்னை மக்கள் பல்வேறு பிரச்னைகளை எதிர்நோக்குவது என்பது எழுதப்படாத ஒன்றாக மாறிவிட்டது. ஏனென்றால்,...
மயான பாதையை மறித்து கட்டிய மதில் சுவர் இடித்து அகற்றம்
அம்பத்தூர், நவ.1: அம்பத்தூர் அருகே மயான பாதை ஆக்கிரமிப்பு கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மதில்சுவர் இடிக்கப்பட்டது. அம்பத்தூர் அருகேயுள்ள ஒரகடத்தில் சுமார் 2 ஏக்கர் மயானம் உள்ளது. இதனை, ஒரகடம் மற்றும் பானு நகர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த 2 பகுதி மக்களும் இந்த மயானத்திற்கு அவரவர் பகுதிக்கு ஏற்ப இரு...
சென்னை விமான நிலையத்தில் மலேசியாவிலிருந்து கடத்தி வந்த 10 பாலி மைனாக்கள் பறிமுதல்: 3 பயணிகள் கைது
சென்னை, நவ.1: மலேசியாவில் இருந்து சென்னைக்கு வந்த தனியார் பயணிகள் விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட அரிய வகை மலேசிய பாலி மைனாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தல் பயணிகள் 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான...
பூண்டி ஏரியில் இருந்து உபரிநீர் திறப்பு: 1000 கன அடியாக குறைப்பு
சென்னை, அக்.31: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து குறைந்துள்ளதால், உபரிநீர் திறப்பு 2000 கன அடியில் இருந்து 1000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளதையொட்டி, கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வந்ததால், சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர்த்தேக்கங்களுக்கு நீர் வரத்து அதிகரித்தது. நேற்று முன்தினம் மாலை 6...
பாஜவில் மாநில பொறுப்பு வாங்கி தருவதாக ரூ.64 லட்சம் மோசடி செய்த போலி சாமியாருக்கு சிறை
சென்னை, அக்.31: ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன்(54). இவர், ஆவடி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் எனது கார் டிரைவர் சரவணன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த சீனிவாசன் (எ) வாசு(32) என்பவர் அறிமுகமானார். இவர், திருமுல்லைவாயல் வைஷ்ணவி நகரில் வாடகை வீட்டில் தங்கியுள்ளார். இந்நிலையில், வாசு என்னிடம் பாஜ பிரபலங்கள், அதிகாரிகளை...
ஆதம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலையில் பயங்கர தீ விபத்து டாக்டர் மனைவி உடல் கருகி பலி: குளியல் அறைக்குள் புகுந்ததால் கணவர், மகன், மகள் தப்பினர்
சென்னை, அக்.31: ஆதம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் டாக்டர் மனைவி உடல் கருகி இறந்தார். குளியல் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டதால் டாக்டர், அவரது மகன், மகள் ஆகியோர் உயிர் தப்பினர். ஆதம்பாக்கம், ராமகிருஷ்ணா நகர், 2வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் வசித்து வருபவர் டாக்டர்...
தற்போது பாதிப்பு இல்லாததால் சுழற்சி முறையில் தினமும் 30 முகாம்கள் சென்னையில் அதிக மழை பெய்தால் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள்: மேயர் பிரியா தகவல்
சென்னை, அக்.30: தற்போது பாதிப்பு இல்லாததால் சுழற்சி முறையில் தினமும் 30 முகாம்கள் நடந்து வரும் நிலையில் சென்னையில் அதிக மழை பெய்தால் 200 வார்டுகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை ஓட்டேரி செல்லப்பா தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், கட்டடத்தின்...