ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி கொக்கைன் பறிமுதல்; விமான நிலையத்தில் கென்யா இளைஞர் கைது

சென்னை, செப். 18: ஆப்பிரிக்க நாட்டிலிருந்து விமானத்தில் சென்னைக்கு கடத்தி வந்த ரூ.20 கோடி மதிப்பிலான 2 கிலோ கொக்கைன் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. சாக்லேட் பாக்கெட்டுகளில் மறைத்து எடுத்து வந்த கொக்கைன் போதை பொருளை மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கென்யா நாட்டைச் சேர்ந்த கடத்தல் பயணியான இளைஞரை...

சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.14,000 கோடியில் புதிய திட்டம்: நீர்வளத்துறை தகவல்

By Karthik Yash
16 Sep 2025

சென்னை, செப்.17: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.14,000 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்டுவதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய நீர்நிலைகளாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை, மற்றும் வீராணம் ஏரிகள் உள்ளன. இந்த 6 ஏரிகளிலும் மொத்தம்...

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் : காவல்துறை அறிவிப்பு

By Karthik Yash
16 Sep 2025

சென்னை, செப்.17: திருப்பதி திருக்குடைகள் ஊர்வலத்ைத முன்னிட்டு சென்னையில் இன்று காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை போக்குவரத்து மாற்றம் செய்து போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: பொதுமக்கள் கவனத்திற்கு இன்று திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் நடைபெற இருக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்ள உள்ளனர்....

கேரளாவிற்கு கடத்த முயன்ற 60 மாடுகள் பறிமுதல்

By Karthik Yash
16 Sep 2025

பல்லாவரம், செப்.17: மாங்காடு அருகே வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்டச் சாலையில் சரக்கு லாரி ஒன்றில் சட்டவிரோதமாக கேரளாவிற்கு மாடுகள் கடத்திச் செல்வதாக மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், விரைந்து சென்ற போலீசார் மாடு கடத்தி வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், ஒரே லாரியில் 60க்கும் மேற்பட்ட மாடுகள் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கொண்டு வரப்பட்டதும்,...

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தாழ்வான பகுதிகளில் நீரை அகற்ற வாகனங்கள், இயந்திரங்கள் தயார்: மாநகராட்சி தகவல்

By Karthik Yash
15 Sep 2025

சென்னை, செப்.16: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள அனைத்து வகை வாகனங்கள், இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை தயார்படுத்தும் பணி நடைபெற்றது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க உள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்ைககளில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வடிகால் அமைப்பது, நீர்நிலைகளை தூர்வாரி...

வாலிபர் கொலை வழக்கில் 10 ஆண்டாக தேடப்பட்ட ரவுடி ஆந்திராவில் கைது

By Karthik Yash
15 Sep 2025

சென்னை, செப்.16: எண்ணூர், வஉசி நகரை சேர்ந்த தேவபிச்சை என்பவரின் மகன் ஜான்சன் (37) என்பவரை, முன்விரோத தகராறில் அத்திப்பட்டு பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு 4 பேர் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. இந்த வழக்கு தொடர்பாக ராஜி, சீனிவாசன், ரஹ்மான், உலகநாதன் ஆகிய 4 பேரை மீஞ்சூர் போலீசார் கைது செய்து சிறையில்...

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பல மடங்கு கட்டணம் வசூலிப்பு: வாடகை கார் ஓட்டுநர்கள் அடாவடி

By Karthik Yash
15 Sep 2025

மீனம்பாக்கம், செப்.16: சென்னை விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் சர்வதேச முனையங்களில், நாள் ஒன்றுக்கு சுமார் 60 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் சுமார் 30,000 பயணிகள் வருகை பயணிகள். இவர்களில் பெரும்பாலானோர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் செல்வதற்கு வாடகை கார்களை பயன்படுத்துகின்றனர். இவர்களிடம் வாடகை கார் ஓட்டுனர்கள் அதிக கட்டணம் வசூல்...

காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் ஆந்திர மீனவர் அடித்து கொலை: போலீசார் விசாரணை

By Ranjith
14 Sep 2025

தண்டையார்பேட்டை: எண்ணூர் கேவிகே குப்பத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் (41). இவருக்கு சொந்தமான விசைப்படகில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பேரூரை சேர்ந்த சீனு (35) என்பவர், கடந்த ஒரு மாதமாக மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த வாரம் விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக சீனு, பாஸ்கரய்யா (47), வெங்கடேசன் (50), கொன்னூர் சீனு (55), தண்டையார்பேட்டை...

ராயப்பேட்டை பகுதியில் வெறிநாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு: மூதாட்டி படுகாயம்

By Ranjith
14 Sep 2025

சென்னை: ராயப்பேட்டையில் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முகமது நஸ்ரூதின். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர், கடந்த மாதம் திருவல்லிக்கேணி மார்கெட் சென்ற போது, அங்கிருந்த ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் ஒன்று இவரை கடித்திருக்கிறது. இதனையடுத்து அவர் ரேபிஸ் தடுப்பூசியை...

தொடர் மழை காரணமாக ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

By Ranjith
14 Sep 2025

புழல்: திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் 8 செமீ, சோழவரத்தில் 6 செமீ, செங்குன்றத்தில் 4 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, புழல் ஏரிக்கு இன்று 417 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. 3300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட...