செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் சோதனை

சென்னை, நவ.12: செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல பிலிம் சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பிரபல பிலிம் சிட்டி உள்ளது. இங்கு தமிழ் திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வருகின்றன....

சென்னை விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

By Karthik Yash
10 Nov 2025

சென்னை, நவ. 11: சென்னை, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு கடந்த சனிக்கிழமை காலை, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக, மர்ம இ-மெயில் வந்தது. இதையடுத்து ஞாயிற்றுக் கிழமை காலை, கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த, மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திற்கு வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக மர்ம இமெயில் வந்தது. இரண்டு நாட்களிலும், சென்னை விமான நிலைய...

குளத்தில் மூழ்கி மகன் பலியானதால் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை

By Karthik Yash
10 Nov 2025

சென்னை, நவ.11: கோயில் குளத்தில் மூழ்கி மகன் பலியான சோகத்தில் விரைவு ரயில் முன் பாய்ந்து மகளுடன் தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அச்சிறுப்பாக்கம் அருகே சோகத்தை ஏற்படுத்தியது. அச்சிறுப்பாக்கம் அருகே கொங்கரை மாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் புருஷோத்தமன் (11), கொங்கரைமாம்பட்டில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தார். இவர்,...

மாதவரம் மண்டலத்தில் ரூ.1.1 கோடியில் 3 குளங்களை சீரமைக்கும் பணி தீவிரம்

By Karthik Yash
10 Nov 2025

சென்னை, நவ.11: சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலத்தில் உள்ள ராமச்சந்திரா குளம், படவேட்டம்மன் கோயில் குளம் மற்றும் ஊத்துகுளம் குளம் ஆகிய 3 நீர்நிலைகளை சீரமைக்கும் பணியை தொடங்கியுள்ளது. இந்த குளங்கள் மழைநீரை சேமிக்கவும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் உதவும். இதற்காக மாநகராட்சி 1.1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. இந்த குளங்களை பொதுமக்கள் பயன்படுத்தும்...

கணக்கீட்டு படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரம் எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்களுக்கு ‘1950’ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

By Karthik Yash
06 Nov 2025

சென்னை, நவ.7: சென்னையில் கணக்கீட்டுப் படிவம் வீடு வீடாக சென்று வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், எஸ்ஐஆர் குறித்த சந்தேகங்கள் இருந்தால் ‘1950’ என்ற எண்ணில் வாக்காளர்கள் தொடர்பு கொள்ளலாம், என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர்...

ஸ்டெர்லிங் சாலையில் குழாய் இணைப்பு பணி தேனாம்பேட்டை உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்: குடிநீர் வாரியம் அறிவிப்பு

By Karthik Yash
06 Nov 2025

சென்னை, நவ.7: ஸ்டெர்லிங் சாலையில் பிரதான குடிநீர் குழாய் இணைப்பு பணி நடைபெற உள்ளதால், தேனாம்பேட்டை உள்ளிட்ட 3 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது, என்று சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், தேனாம்பேட்டை மண்டலம், ஆர்.கே சாலை மற்றும் ஸ்டெர்லிங்...

தொழிலாளர் ஆணையர் அலுவலகம் அண்ணாநகர் புதிய கட்டிடத்திற்கு மாற்றம்

By Karthik Yash
06 Nov 2025

சென்னை, நவ.7: சென்னை, தேனாம்பேட்டை, டி.எம்.எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் அலுவலகம், சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-1 அலுவலகம் மற்றும் சென்னை, தொழிலாளர் இணை ஆணையர்-2 அலுவலகம் ஆகிய அலுவலகங்கள் புதிய அலுவலக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த அலுவலகங்கள் ‘தொழிலாளர் ஆணையரகம், தொழிலாளர்...

19 மண்டலங்களிலும் வரும் 8ம் தேதி பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம்: அரசு அறிவிப்பு

By Karthik Yash
05 Nov 2025

சென்னை, நவ. 6: சென்னையில் உள்ள 19 மண்டலங்களிலும் வரும் 8ம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர்...

‘பயணிகளிடம் சில்லரை பிரச்னை வேண்டாம்’ : நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் அறிவுரை

By Karthik Yash
05 Nov 2025

சென்னை, நவ.6: சில்லரை தொடர்பான விவாதங்களை தவிர்த்து, பயணிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக இணை மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: மாநகர பேருந்துகளில் பயணிகள் ஏறும்போது பயணச்சீட்டுக்கு உரிய சில்லரையுடன் பயணிக்க வேண்டும் எனக்கூறி வாக்குவாதத்தில் நடத்துநர்கள் ஈடுபடுவதாக பயணிகளிடம்...

எழும்பூர் உள்பட 3 கோட்டங்களுக்கு நாளை மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின்வாரியம் அறிவிப்பு

By Karthik Yash
05 Nov 2025

சென்னை, நவ.6: எழும்பூர் உள்பட 3 கோட்டங்களுக்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை நடைபெறும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேப்பேரியில் உள்ள எழும்பூர் துணை மின் நிலையம், ஆவடி எஸ்.எம். நகரில் உள்ள துணை மின் வளாகம் மற்றும் பெரம்பூர் எம்.இ.எஸ். ரோடு, சிம்சன் எதிரில் உள்ள செம்பியம் துணை...