வேளச்சேரியில் அதிகாலை டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிந்தது
வேளச்சேரி, ஆக.3: வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகர் 6வது தெருவில் உள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் நேற்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனால், அப்பகுதி முழுவதும் புகை மூட்டம் சூழ்ந்தது. தகவலறிந்த வேளச்சேரி போலீசார், மின்வாரிய அதிகாரிகள், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, மின் இணைப்பை துண்டித்து தீயை அணைத்தனர். ஆனால், அதற்குள் முற்றிலும்...
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செப்டம்பர் மாத இறுதிக்குள் வடிகால் பணி முடிக்கப்படும்: மேயர் பிரியா பேட்டி
பெரம்பூர், ஆக.2: கொளத்தூரில் உள்ள ஜம்புலிங்கம் பிரதான சாலையில் மாநகராட்சி சார்பில், நவீன வசதியுடன் ரூ.13 கோடியில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூட கட்டுமான பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, மேயர் பிரியா மற்றும் ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். இதையடுத்து, கொளத்தூர் சோமையா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும்...
சென்னையில் 2 நாட்களுக்கு அஞ்சலகம் செயல்படாது: அஞ்சல் துறை தகவல்
சென்னை, ஆக.2: புதிய தொழில்நுட்பத்தை செயல்படுத்த இருப்பதால் சென்னையில் 2 நாட்களுக்கு தபால் நிலையங்களில் பரிவர்த்தனைகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் துறை தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சென்னை நகர மண்டலத்தில் உள்ள தபால் நிலையங்களில், வருகிற 4ம் தேதி முதல் அஞ்சல் துறையின் புதிய ‘மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பம் 2.0’ புதிதாக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது....
ஆடிப்பெருக்கை முன்னிட்டு தங்கமயில் ஜூவல்லரியில் நாளை சிறப்பு விற்பனை
சென்னை, ஆக. 2: தங்கமயில் ஜூவல்லரியில் ஆடிப்பெருக்கையொட்டி நாளை சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது. மதுரையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தங்கமயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழகம் முழுவதும் 64 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. 30 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் செயல்படும் இந்நிறுவனத்தில் 3,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, 100 சதவீதம் எச்.யூ.ஐ.டி. நகைகள் மட்டுமே...
சென்னை மாநகர பகுதிகளில் காற்று மாசு கண்டறிய 75 அதிநவீன சென்சார்: டிஜிட்டல் திரை மூலம் நேரலை
சென்னை, ஆக.1: சென்னையில் காற்று மாசு கண்டறிய 75 அதிநவீன சுற்றுச்சூழல் சென்சார்கள் அமைக்க திட்டமிட்டுள்ளது. காற்று மாசு என்பது ஒரு உலகளாவிய பொது சுகாதார பிரச்னையாக உள்ளது. காற்று மாசுவால் இறப்பு, சுவாசம் மற்றும் இருதய நோய்கள், நரம்பியல் பாதிப்பு குறைபாடுகள் உட்பட பல விதமான ஆரோக்கியத்துக்கு எதிரான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. வடசென்னையில் அனல்...
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரிப்பு
சென்னை, ஆக.1: ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை 8.23 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், விமானங்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது. சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து இந்தாண்டு ஜனவரி 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை புறப்பாடு மற்றும்...
சிறுதானியம் சமைத்து தர மறுத்த மனைவி அடித்து கொலை: காவல் நிலையத்தில் கணவன் சரண்
அண்ணாநகர் ஆக.1: சிறுதானியம் சமைத்து தர மறுத்ததால், மனைவியை அடித்து கொன்ற கணவன், காவல் நிலையத்தில் சரணடைந்தார். கோயம்பேடு ஜெயின் நகர் 3வது தெருவில் உள்ள தனியார் மகளிர் விடுதியில் பணிபுரிந்து வந்தவர் அருள்மணி (45). இவரது கணவர் ராதாகிருஷ்ணன் (48). இவர் திருவல்லிக்கேணியில் உள்ள டீக்கடையில் மாஸ்டராக உள்ளார். தம்பதிக்கு 2 மகன்கள். மூத்த...
போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலையில் நாளை போக்குவரத்து மாற்றம்: காவல்துறை அறிவிப்பு
சென்னை, ஜூலை 31: போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ராஜிவ் காந்தி சாலையில் நாளை(1ம்தேதி) காலை 8 மணி முதல் 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிக்கை: ராஜிவ் காந்தி சாலையின் மத்திய கைலாஷ் சந்திப்பிலிருந்து டைடல் பார்க் சந்திப்பு வரையிலான மேம்பால கட்டுமானப் பணிக்காக அச்சாலையின்...
இரிடியம் தொழிலில் மும்மடங்கு லாபம் எனக்கூறி வெள்ளி பட்டறை உரிமையாளரிடம் ரூ.92 லட்சம் மோசடியில் ஈடுபட்டவர் கைது
ஆலந்தூர், ஜூலை 31: மடிப்பாக்கம் ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசிப்பவர் தட்சிணாமூர்த்தி(52). இவர் சூளையில் வெள்ளி பாத்திரங்கள் தயார் செய்யும் பட்டறையை நடத்தி வருகிறார். இவருக்கு அறிமுகமான ராஜாராம் என்பவர் மூலம் மும்பையைச் சேர்ந்த பீர்முகமது பாதுஷா(47) என்பவர் இரிடியம் தொழில் செய்து வருவதாகவும் அதில் முதலீடு செய்தால் மும்மடங்கு லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை...