தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர் மட்ட மேம்பால பணி திட்டமிட்ட காலத்தில் முடியும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
சென்னை: தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை அமைக்கப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பால பணிக்கு உருவாக்கப்பட்டு வரும் பிரத்யேக எக்கு உற்பத்தி கட்டமைப்பு பணிகளை குஜராத் வதோதராவிற்கு நேரில் சென்று அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: மேம்பாலப் பணிகள் திட்டமிட்ட காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்படுவதை உறுதி செய்ய தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. உற்பத்தி...
தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுடன் ஆலோசனை: தேர்தல் அலுவலர் குமரகுருபரன் தலைமையில் நடந்தது
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்தில் தேர்தல் வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் நேற்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது. இந்திய தேர்தல் ஆணையம் ஒரு வாக்குச்சாவடியில் 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால்...
பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் திட்டங்களைபற்றி தெரியப்படுத்த வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களின் இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடனான பணி ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் குறித்து...
புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சென்னை: புழல் மகளிர் சிறையில் இலங்கை பெண் கைதியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3 பிரிவுகளில் சுமார் 4000க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மகளிர் சிறையில் கொலை, கொள்ளை வழிப்பறி, கஞ்சா கடத்தல் உள்பட பல்வேறு வழக்குகளில் கைதான 100க்கும் மேற்பட்ட பெண்...
தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்ற பிறகு 23,180 பேர் உறுப்புதான பதிவு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் சார்பாக நடந்த உறுப்பு தான தின நிகழ்ச்சியில், உறுப்பு கொடையாளர் குடும்பத்தினருக்கு சிறப்பு செய்து, உறுப்பு மாற்று சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் விருதுகள் வழங்கினார். மேலும் வருடாந்திர அறிக்கை மற்றும் மேம்படுத்தப்பட்ட செயலி விடியல் 2.0 வெளியிட்டு, உறுப்பு கொடையாளர்களுக்கு...
காஞ்சி டிஎஸ்பியை கைது செய்ய உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி மீதான விசாரணை அறிக்கையை ஐகோர்ட் நிர்வாகக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி மீது நிர்வாக ரீதியில் நடவடிக்கை எடுக்கும் வகையில் விஜிலன்ஸ் பதிவாளர் விசாரணை அறிக்கையை உயர் நீதிமன்ற நிர்வாக குழுவுக்கு அனுப்புமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் காவலராக பணிபுரிந்து வரும் லோகேஸ்வரன் என்பவரின் மாமனார் சிவகுமார் என்பவர் அப்பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி...
கடலோரங்களில் உள்ள அலையாத்தி காடுகள் வெறும் மரங்கள் அல்ல, நமது காலநிலையின் உயிர்நாடி: இயற்கையை பாதுகாக்க தமிழ்நாடு அரசு உறுதி
சென்னை: தமிழ்நாடு அரசு முதல் அலையாத்தி காடுகள் மாநாட்டினை நேற்று மகாபலிபுரத்தில் நடத்தியது. வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் ஆர்.எஸ் ராஜகண்ணப்பன், ‘தமிழ்நாட்டின் அலையாத்தி பயணம்’ எனும் விரிவான அறிக்கையை வெளியிட்டார். இந்தியாவிற்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட தலைவர் பாலகிருஷ்ண பிசுபதி, சௌமியா சுவாமிநாதன், எரிக் சோல்ஹெய்ம், நிர்மலா ராஜா, ரமேஷ் ராமச்சந்திரன்,...
வருமானத்தை மறைத்ததற்காக நடிகர் விஜய்க்கு அபராதமாக ரூ.1.5 கோடி விதித்தது சரிதான்: சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பரபரப்பு வாதம்
சென்னை: வருமானத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு ரூ.1.50 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. கடந்த 2016-17ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்தபோது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே...
திமுக பொதுக்குழு முடிவின்படி 3 பேர் குடும்பத்திற்கு ரூ.30 லட்சம் நிதியுதவி
சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று திமுக உறுப்பினர்கள் குடும்பத்தினருக்கு திமுக சார்பில் ரூ.30 லட்சம் நிவாரண நிதியை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சாலை விபத்தில் மரணமடைந்த திருவாரூர் மாவட்டம் எம்.விக்னேஷ் - கடலூர் மேற்கு மாவட்டம் குப்புசாமி மற்றும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் கே.ஏ.ராம்பிரசாத் ஆகிய மூன்று குடும்பத்திற்கும் தி.மு.க. சார்பில்...