தெ. ஆ.வுடன் 3வது ஓடிஐ ஆஸி இமாலய வெற்றி: 3 வீரர்கள் அதிரடி சதம்
மேக்கே: தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டியில் நேற்று, ஆஸ்திரேலியா அணி, 276 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. தென் ஆப்ரிக்கா கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சென்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் தெ.ஆ. வென்ற நிலையில், 3வது ஒரு நாள்...
துரந்த் கோப்பை கால்பந்து நார்த் ஈஸ்ட் எப்சி மீண்டும் சாம்பியன்: 6 கோல் அடித்து சாதனை
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் நடந்த துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் நார்த் ஈஸ்ட் எப்சி அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. கொல்கத்தாவில் சால்ட் லேக் ஸ்டேடியத்தில் 134வது துரந்த் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி நடந்தது. அதில், நடப்பு சாம்பியன் நார்த் ஈஸ்ட் எப்சி அணியும்,...
இந்தியாவுடன் 4 நாள் டெஸ்ட்: அசத்தலாய் வென்ற ஆஸி மகளிர் ஏ அணி
பிரிஸ்பேன்: இந்தியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸி மகளிர் ஏ அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தியா மகளிர் ஏ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆடியது. கடந்த 21ம் தேதி துவங்கிய இப்போட்டியின்...
ஆப்கான் அணிக்கு ரஷித் கான் கேப்டன்
காபுல்: வரும் செப்டம்பரில் நடக்கவுள்ள ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில், ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் ஜாட்ரன், தர்விஷ் ரசூலி, செதிகுல்லா அடல், அஸ்மதுல்லா ஒமர்ஸாய், கரிம் ஜனத், முகம்மது நபி, குல்பதின் நயிப், ஷரபுதின் அஷ்ரப், முகம்மது இஷாக், முஜிபுர்...
சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் புஜாரா
மும்பை: இந்திய கிரிக்கெட் டெஸ்ட் அணியில் அற்புதமான வீரராக விளங்கிய சதேஸ்வர் புஜாரா (37), சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக, எக்ஸ் சமூக தளத்தில் அறிவித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 19 சதங்கள், 35 அரை சதங்கள் உட்பட, 7,195 ரன்கள் குவித்துள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா, 21,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார்....
மான்டெர்ரே டென்னிஸ் டயானா சாம்பியன்
மான்டெர்ரெ: மெக்சிகோவில் நடந்த மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் ரஷ்ய வீராங்கனை டயானா மேக்சிமோவ்னா ஸ்னெய்டர் (21), ரஷ்ய வீராங்கனை ஏகதேரினா அலெக்சாண்ட்ரோவா (30) மோதினர். போட்டியின் முதல் செட்டை, 6-3 என்ற புள்ளிக் கணக்கில் டயானாவும், 2வது செட்டை 6-4 என்ற புள்ளிக் கணக்கில் ஏகதேரினாவும் கைப்பற்றினர். அதன் பின்...
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில், 276 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தது. இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டியில் 98 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென்னாப்பிரிக்கா, அடுத்த போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு...
வான்கடே மைதானத்தில் கவாஸ்கர் சிலை திறப்பு
மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள எம்சிஏ ஷரத்பவார் கிரிக்கெட் அருங்காட்சியகத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுனில்கவாஸ்கரின் முழு உருவ சிலை திறக்கப்பட்டது. 2023ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது, சச்சின் டெண்டுல்கரின் பிரமாண்டமான சிலை திறக்கப்பட்டது. தற்போது கவாஸ்கருக்கு சிலை திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கவாஸ்கர் பேசுகையில், ``நான் எப்போதும் கிரிக்கெட்...
ஆசிய கோப்பையில் அனைத்து போட்டியிலும் பும்ரா விளையாட வாய்ப்பு இல்லை: டிவில்லியர்ஸ் சொல்கிறார்
கேப்டவுன்: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, முதுகு பகுதியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அடிக்கடி வலியால் அவதிப்பட்டு வருகிறார். இதனால் அவரை முக்கியமான போட்டிகளில் மட்டுமே பங்கேற்கிறார். அவரின் வேலை பளுவை குறைக்கும் வகையில் பிசிசிஐ கவனமாக பயன்படுத்தி வருகிறது. அடுத்த மாதம் யுஏஇயில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை தொடர்...