சின்கியுபீல்ட் கோப்பை செஸ் 5 வது சுற்று போட்டிகளில் குகேஷ், பிரக்ஞானந்தா டிரா
செயின்ட் லூயிஸ்: சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 5வது சுற்றில் இந்திய வீரர்களான உலக சாம்பியன் குகேஷ், பிரக்ஞானந்தா ஆடிய போட்டிகள் டிராவில் முடிந்தன. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரல் சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. 9 சுற்றுகள் கொண்ட இப்போட்டியின் 5வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தன....
அர்ஜென்டினா கால்பந்தாட்ட ஜாம்பவான் கேரளா வருகிறார் மெஸ்ஸி: நவம்பரில் நடக்கும் போட்டியில் பங்கேற்பு
பியனஸ் அயர்ஸ்: ஃபிபா சர்வதேச ஃப்ரெண்ட்லி கால்பந்தாட்ட போட்டியில், கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணியும், கேரளா அணியும், வரும் நவம்பரில் மோதவுள்ளன. அர்ஜென்டினா தேசிய கால்பந்தாட்ட அணிக்கு, கால்பந்தாட்ட ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், அர்ஜென்டினா கால்பந்தாட்ட தேசிய அணி, கேரளாவில், வரும் நவம்பரில் நடக்கும் நட்பு...
ஆஸியுடன் 4 நாள் டெஸ்ட்: இந்தியா மகளிர் ஏ அணி 254 ரன் முன்னிலை: அசத்தலாய் ஆடிய ராகவி
பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா மகளிர் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில் இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 260 ரன் எடுத்து, 254 ரன் முன்னிலை பெற்றுள்ளது. இந்திய மகளிர் ஏ கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அங்கு நடக்கும் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்று வருகிறது....
இம்ரான் தாஹிர் உலக சாதனை: 46 வயதில் 5 விக்கெட்
ஆன்டிகுவா: தென் ஆப்ரிக்கா சுழல் பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர், டி20 போட்டியில், 46 வயதில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய கேப்டனாக புதிய உலக சாதனை படைத்துள்ளார். கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) போட்டித் தொடரில், கயானா அமேஸான் வாரியர்ஸ் அணியின் கேப்டனாக, தென் ஆப்ரிக்கா முன்னாள் வீரர் இம்ரான் தாஹிர் (46) ஆடி வருகிறார்....
ஆசிய துப்பாக்கி சுடுதல் மீண்டும் தங்கம் வென்று மிரள வைத்த இளவேனில்: கலப்பு அணி பிரிவில் அபாரம்
ஷிம்கென்ட்: ஆசிய துப்பாக்கி சுடுதல் கலப்பு அணி 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன், அர்ஜுன் பாபுடா இணை அபார வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. கஜகஸ்தான் நட்டின் ஷிம்கென்ட் நகரில், 16வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று...
மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் உறுதியாய் வென்ற டயானா இறுதிப் போட்டிக்கு தகுதி
மான்டெர்ரே: மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் நேற்று, ரஷ்ய வீராங்கனை டயானா ஸ்னெய்டர் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார். மெக்சிகோவின் மான்டெர்ரே நகரில் மான்டெர்ரே ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. பிரத்யேகமாக மகளிருக்கென நடத்தப்படும் இப்போட்டிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளன. இந்நிலையில் நேற்று...
உடல் நலம் பாதிப்பால் சுப்மன் கில் ஓய்வு
பெங்களூரு: துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 28ம் தேதி பெங்களூருவில் துவங்க உள்ளன. இதில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான வடக்கு மண்டலத்துக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் சுப்மன் கில், கேப்டனாக உள்ளார். இந்நிலையில், கில் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் ஓய்வில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால், துலீப் கோப்பை போட்டிகளில்...
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நாளை தொடக்கம்; ஒற்றையரில் பட்டம் வெல்பவருக்கு ரூ.43 கோடி பரிசு
நியூயார்க்: ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நாளை துவங்கவுள்ளது. இதில் முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில், நடப்பு சாம்பியனும், நம்பர் 1 வீரருமான இத்தாலியின் ஜானிக் சின்னர் (முதல் போட்டியில்) செக் குடியரசு வீரர் விட் கோப்ரிவா உடன் மோத உள்ளார். 2வது ரேங்க்...
பிட்டாக இருக்கிறார்கள்... சிறப்பாக ஆடுகிறார்கள் ரோகித், கோஹ்லி ஓய்வுக்கு இப்போது என்ன அவசியம்? பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா கேள்வி
மும்பை: இந்திய கிரிக்கெட்டின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோஹ்லியின் ஒருநாள் கிரிக்கெட் எதிர்காலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், இதுகுறித்த அனைத்து வதந்திகளுக்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு, ரோஹித் மற்றும் கோஹ்லி...