2028 ஒலிம்பிக்ஸில் 6 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும்: ICC அறிவிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: 2028ம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸில், T20 ஃபார்மட்டில் 6 அணிகளுடன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் என்று ICC அறிவித்துள்ளது. ICC தரவரிசையில் இடம்பிடித்துள்ள முதல் 6 அணிகளுக்கு பதிலாக, ஒரு கண்டத்திற்கு ஒரு அணியை தேர்வு செய்ய முடிவு எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ...
ஊழல் குற்றச்சாட்டு காரணமாக TARIL India நிறுவனம் மீது தடை விதித்தது உலக வங்கி!
வாஷிங்டன்: இந்தியாவின் முன்னணி மின்மாற்றி உற்பத்தி நிறுவனமான TARIL India மீது உலக வங்கி தடை விதித்தது. நைஜீரியாவில் நடைபெறும் ரூ.4,300 கோடி மதிப்பிலான மின்கம்பி மேம்பாட்டு திட்டத்தில் நடந்த ஊழல் காரணமாக தடை விதிக்கப்படுவதாக உலக வங்கி அறிவித்துள்ளது. ...
தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு
சென்னை: தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்புஅறிவை மையப்படுத்தி ஆட்சியைப் பிடித்து, அறிவொளியை அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதையே தலையாய கடமையாக ஆற்றி வரும் தி.மு.கழகத்தின் சாதனையை இனி எவராலும் இம்மண்ணில் படைக்க முடியாது! கருப்பும் -...
கும்மிடிப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு!!
திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தில் குளத்தில் மூழ்கி ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்தார். குளத்தில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை தர்ஷிணியை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒன்றரை வயது குழந்தை தர்ஷிணியை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். ...
புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும்: ஐகோர்ட்
சென்னை: புழல் சிறையில் உள்ள இலங்கை கைதியை, அவரது குடும்பத்தினர் சந்திக்க அனுமதி அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டுள்ளது. புழல் சிறையில் உள்ள இலங்கையைச் சேர்ந்த கைதி புஷ்பராஜ், குடும்பத்தினர் சந்திக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், இலங்கையில் உள்ள தனது தாய் உடன் தொலைபேசி மூலம் பேச...
பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பலி!!
கடலூர்: பண்ருட்டி அருகே நடந்த சாலை விபத்தில் சின்னத்திரை நடிகர் பேரரசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பி.ஆண்டிகுப்பம் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பேரரசு மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. பேரரசு உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து காடாம்புலியூர் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ...
பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும்: சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் பறிமுதல் செய்யப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிங்க் ஆட்டோக்களை ஆண்கள் ஓட்டினால் ஆர்டிஓ மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கெனவே எச்சரிக்கை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னை மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான போக்குவரத்து வசதியாகவும், பெண்களுக்குத் தனியாகத் தொழில்...
திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை: காவல்துறை விளக்கம்
தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் கடற்கரையில் பக்தர்கள் தங்குவதற்கு எந்த தடையும் காவல்துறையால் அறிவிக்கப்படவில்லை எனவும் பாதுகாப்பாக தங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் எஸ்பி ஆல்பர்ட் ஜான் விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்; "தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தொடர்ந்து பாதுகாப்பு பணியில்...
டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிப்பு
டெல்லி: டிசம்பர் 1 முதல் 19 ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அறிவித்துள்ளார். ஜனநாயகத்தை வலுப்படுத்தும் ஆக்கப்பூர்வ, அர்த்தமுள்ள கூட்டத்தொடரை எதிர்நோக்குகிறோம் எனவும் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். ...