தனிமரமான அதிமுக மாஜி அமைச்சர்; எந்த கட்சியிலும் சேர முடியாமல் நட்டாற்றில் தவிக்கும் பரிதாபம்; மா.செ. பதவியும் போச்சு: கட்சி ஆபீசும் போயே போச்சு

திருச்சி: தமிழக சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் 25 எம்எல்ஏக்கள் சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் 25 பேர் மற்றும் இவர்களது ஆதரவாளர்களின் பதவிகளை பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்தார். இதனிடையே வேலுமணி அணியை சேர்ந்தவர்களுக்கு அமைச்சர்...

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டு வர திட்டம்: அமைச்சர் ரமேஷ் தகவல்!

By Francis
15 hours ago

  சென்னை: தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் ஆன்லைனில் சிறப்பு தரிசன டிக்கெட் முறையை கொண்டு வர திட்டம் என இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தகவல் தெரிவித்துள்ளார். தரிசனத்திற்கு பக்தர்களிடம் லஞ்சம் வாங்குவதை தடுக்க ஆன்லைன் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையை கொண்டு வர திட்டம் என்று கூறியுள்ளார்.   ...

தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல புலம்புவாரா? - முதலமைச்சருக்கு அதிமுக கேள்வி

By Suresh
16 hours ago

சென்னை: “திமுக ஆட்சியில் முடிக்கப்பட்ட L&T நிறுவன ஒப்பந்தத்தை தனது 'கோட் சூட்' ஸ்டைலைக் கண்டு மயங்கி வந்தது போல போஸ் கொடுத்த முதலமைச்சர், தற்போது தமிழ்நாட்டை விட்டுப் போகும் Mazagon Dock முதலீட்டுக்கும் பொறுப்பு ஏற்பாரா? அல்லது வழக்கம் போல “என் மேல பழி போடுறாங்க” என புலம்புவாரா? என முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக...

கேரளத்தில் கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழப்பு!

By Francis
16 hours ago

  கேரள: தென்மேற்கு பருவமழை தீவிரத்தால் கேரளத்தில் பல பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   ...

நெல்லை அருகே ஊருக்குள் புகுந்து 6 பேருக்கு அரிவாள் வெட்டு: நான்கு பேர் கைது!

By Francis
16 hours ago

  நெல்லை: நெல்லை அருகே வெள்ளாளங்குளம் பகுதியில் ஊருக்குள் புகுந்து பெண் உள்பட 6 பேருக்கு அரிவாள் வெட்டு; சாதி ரீதியான தாக்குதலா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அங்குள்ள ஹோட்டலில் சாப்பிடும் போது இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறை தொடர்ந்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. முதற்கட்டமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்....

இந்த தேர்தல் ஒரு விபத்து; லாட்டரி சீட்டு அடித்தது போல் தவெகவுக்கு லக்கு அடித்துள்ளது: ஆர்.எஸ்.பாரதி செம கலாய்

By Suresh
16 hours ago

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் தேர்தல் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசியதாவது: நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நம் தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எல்லோரும் கண்ணீர் வடித்தார்கள். 1962ல் காஞ்சிபுரத்தில் அண்ணா தோல்வியடைந்தார். அப்போது...

‘‘சட்டமன்றம் படப்பிடிப்பு தளம் கிடையாது’’ மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவீர்கள் விஜய்: கோவி.செழியன் கேள்வி

By Suresh
16 hours ago

பெரம்பூர்: மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றப் போகிறீர்கள் விஜய் என்று முன்னாள் அமைச்சர் கோவி. செழியன் கேள்வி எழுப்பினார். சென்னை கிழக்கு மாவட்டம் திருவிக. நகர் வடக்கு பகுதி திமுக சார்பில், முத்தமிழ் அறிஞர் கலைஞரின் பிறந்தநாளை முன்னிட்டு புகழரங்க நிகழ்ச்சி பகுதி செயலாளர் தமிழ்வேந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் கோவி.செழியன்,...

முன்னணி பொறுப்பாளர்கள் குறித்து பொதுவெளியில் பேசிய விவகாரம்; விசிக மாநில நிர்வாகி இடைநீக்கம்: திருமாவளவன் நடவடிக்கை

By Suresh
16 hours ago

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிவிப்பு: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளையோர் அமைப்பான ‘இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை’ என்னும் துணைநிலை அமைப்பின் மாநில செயலாளர் பொறியாளர் சரவணன் என்கிற சங்கத்தமிழன் கட்சியின் கட்டுப்பாட்டைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சியை விட, கருத்தியலை விட, களம் காணும் மக்களைவிட, ‘தானே முதன்மை’ என...

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் தொடரும் மின்வெட்டு: விஜய் தொகுதி உள்பட பல இடங்களில் மக்கள் மறியல்

By Suresh
16 hours ago

சென்னை: சென்ைன மற்றும் புறநகர் பகுதிகளில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டுவருவதால் ஆங்காங்கே மக்கள் சாலை மறியல், மின்சார வாரிய அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். விஜய்யின் சொந்த தொகுதியிலும் நேற்றிரவு தொடர்ந்து மின்சாரம் தடைப்படுவதால் மக்கள் சாலை மறியல் நடத்தினர். தொடர் மின்வெட்டு மக்களிடம் பெரும் கோபத்தையும் இந்த அரசு மீது...

உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழப்பு!

By Francis
16 hours ago

  உத்தரகாண்ட்: உத்தரகாண்டில் நடைபெற்று வரும் உலகப் புகழ்பெற்ற சார்தாம் யாத்திரையில் கடந்த 49 நாட்களில் மட்டும் 165 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். கடினமான மலைப்பகுதி என்பதால் மாரடைப்பு ஏற்பட்டு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக கேதார்நாத் வழித்தடத்தில் 80 பேரும், பத்ரிநாத் வழித்தடத்தில் 48 பேரும், யமுனோத்ரி வழித்தடத்தில் 21 பேரும், கங்கோத்ரி வழித்தடத்தில் 16 பேரும்...