சேலம் மலை அடிவாரத்தில் சுற்றிவளைப்பு 2 மூதாட்டிகளை கொன்ற ரவுடி சுட்டுப்பிடிப்பு: எஸ்.ஐ.யை வெட்டி விட்டு தப்பியபோது போலீஸ் அதிரடி

இளம்பிள்ளை: சேலம் அருகே 2 மூதாட்டிகளை கொலை செய்து கல்குவாரியில் வீசிய வழக்கில், போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி, சங்ககிரி அருகே எஸ்ஐயை ெவட்டி விட்டு தப்பியபோது இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தார். குண்டுகாயமடைந்ததால் சேலம் அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். சேலம் மாவட்டம் இளம்பிள்ளையை அடுத்த இடங்கணசாலை தூதனூர் இ.காட்டூர் கிராமத்தை...

தைலாபுரத்தில் ராமதாசுடன் அருள் எம்எல்ஏ சந்திப்பு: அன்புமணியை கைது செய்ய வலியுறுத்தி பேட்டி

By Karthik Yash
15 hours ago

திண்டிவனம்: வாழப்பாடி தாக்குதல் சம்பவத்துக்குபின் பாமக நிறுவனர் ராமதாசை தைலாபுரத்தில் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். பின்னர் வெளியே வந்த அவர், அன்புமணியை கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தினார். சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் கார் மீது வாழப்பாடியில் அன்புமணி ஆதரவாளர்களால் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று மதியம் தைலாபுரம் வந்த...

ஓசூர் தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த ஆண் நண்பர் சிக்கினார்: டெல்லியில் சுற்றிவளைப்பு

By Karthik Yash
15 hours ago

ஓசூர்: ஓசூர் அருகே தனியார் பெண்கள் விடுதி குளியலறையில் ரகசிய கேமரா வைத்த முக்கிய குற்றவாளியை டெல்லியில் தனிப்படை போலீசார் சுற்றிவளைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே வன்னியபுரத்தில் ஐபோன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு, 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில், பெண் ஊழியர்களுக்காக லாலிக்கல் பகுதியில் தொழிற்சாலை...

விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி ஆம்புலன்ஸ் சென்றபோது தவெகவினர் தாக்கினரா? டிரைவர்களிடம் 9 மணி நேரம் சிபிஐ விசாரணை

By Karthik Yash
15 hours ago

கரூர்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில் ஆம்புலன்ஸ் சென்றபோது தவெகவினர் அடித்ததாக ஆம்புலன்ஸ் டிரைவர் புகார் அளித்த நிலையில், எதற்காக தவெகவினர் அடித்தார்கள், ஏன் இடையூறு செய்தார்கள் என அவர்களிடம் 9மணி நேரம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கரூரில் கடந்த செப்டம்பர் 27ம்தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின்போது...

வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரை கத்தியால் குத்திவிட்டு ரவுடி தப்ப முயற்சி: கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு

By Karthik Yash
15 hours ago

ஸ்ரீவில்லிபுத்தூர்: வழக்கு விசாரணைக்கு அழைத்து வந்தபோது போலீஸ்காரரின் கையில் கத்தியால் குத்திய ரவுடி, தனது கழுத்தையும் அறுத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே வடபட்டியை சேர்ந்தவர் மாரி என்ற மரியராஜ் (40). இவர் மீது மல்லி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட காவல்நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. மல்லி, கிருஷ்ணன்கோவில் காவல்நிலையங்களின்...

காலை 8-10 மணி வரை ரயில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் கட்டாயம்: மோசடி தடுக்க நடவடிக்கை

By Karthik Yash
15 hours ago

சென்னை: காலை 8-10 மணி நேரத்தில் டிக்கெட் புக்கிங் செய்பவர்களுக்கு ஆதார் அங்கீகாரம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் மொபைல் ஆப் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு புதிய கட்டாய விதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இனி பிரபல ரயில்களில் இருக்கைகளுக்கான அதிக தேவை உள்ள காலை 8 மணி முதல்...

சொல்லிட்டாங்க...

By Karthik Yash
16 hours ago

* மக்களை சந்திக்காமல், மக்களிடம் நேரடித் தொடர்பு இல்லாமல், திரைப்பட புகழை வைத்துக் கொண்டு, தான் மிகப்பெரிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி விட்டதாக மாய பிம்பத்தை உருவாக்குகிறார்கள். - அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி. * ஜெயலலிதா மூலம் 3 முறை முதலமைச்சரானவர் ஓபிஎஸ். கொல்லைப்புறம் வழியாக முதலமைச்சரானவர் இபிஎஸ். - அதிமுக முன்னாள் அமைச்சர்...

கரூர் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரொம்பவே ஷாக்கானது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Karthik Yash
16 hours ago

‘‘காக்கிகள் தனிப்பிரிவுல தலைமை இல்லாததால் அந்த பிரிவே ஒருங்கிணைப்பு இல்லாம இருக்குதாமே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல கடந்த சில மாதங்களுக்கு முன்னாடி தனிப்பிரிவுல பணிபுரிஞ்சு வந்த அதிகாரி பணியிடமாற்றம் செய்யப்பட்டாரு.. அவருக்கு அப்புறமாக ஒரு லேடி அந்த பிரிவுல பொறுப்பு அதிகாரியாக இருந்தாங்க.. அப்புறம், ரெண்டு ஸ்டார் காக்கிகள் மூன்று பேரைக்...

யார் யாரோ கிளம்பி அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என கனவு காண்கிறார்கள் எந்த கொம்பனாலும் திமுகவை தொட முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

By Karthik Yash
16 hours ago

சென்னை: இன்றைக்கு யார் யாரோ கிளம்பி, திமுக அழித்து விடலாம்; ஒழித்து விடலாம் என்று கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். திமுகவை எந்தக் கொம்பனாலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திமுக தலைவர் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் செங்குன்றம் பேரூராட்சி மன்றத்தின் முன்னாள் துணை தலைவர் இரா.ஏ.பாபு...

இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை 19 சதவீதம் வரை உயர்வு

By Karthik Yash
16 hours ago

சென்னை: இந்தியாவில் வீட்டு மனைகளின் விலை 19% வரை உயர்ந்துள்ளது. இந்தியாவின் எட்டு முக்கிய நகரங்களில் வீடுகளின் விலை சராசரியாக ஏழு விழுக்காட்டிலிருந்து 19 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது என்று மனை வர்த்தக நிறுவனமான ட்ராப் டைகர் தெரிவித்துள்ளது . இந்த எட்டு நகரங்களில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, புனே, அகமதாபாத்...