ஜூலை-21: பெட்ரோல் விலை ரூ.107.77, டீசல் விலை ரூ.99.55- க்கு விற்பனை!

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.107.77ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.99.55 ஆகவும் நிர்ணயம், மற்றும் சிஎன்ஜி காஸ் விலை கிலோகிராம் ரூ.97.00 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. ...

மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது; முதல் நாளில் முடங்கியது நாடாளுமன்றம்: வினாத்தாள் கசிவு, ராமர் கோயில் விவகாரத்தை எழுப்பி கடும் அமளி

By Arun Kumar
4 hours ago

  புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதில் வினாத்தாள் கசிவு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமென ஏற்கனவே எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்நிலையில், காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பி முழக்கமிடத் தொடங்கினர். இதனால் கேள்வி...

கழிவறையில் தூக்குப்போட்டு திரிபுரா டிஜிபி தற்கொலை: அலுவலகத்திலேயே நடந்த சோகம்

By Arun Kumar
4 hours ago

  அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் பா.ஜ ஆட்சி நடக்கிறது. அங்கு மாநில காவல் துறை தலைவராக இருந்த அமிதாப் ரஞ்சனுக்குப் பிறகு, 2025 கடந்த மே 2025ல் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டவர் அனுராக் தன்கர். 1994ஆம் ஆண்டு பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான இவர், சிபிஐ அதிகாரியாகவும், திரிபுரா மாநில புலனாய்வுப் பிரிவு தலைவராகவும் பணியாற்றியவர். இந்நிலையில்,...

இங்கிலாந்தின் பிரதமராக ஆன்டி பர்ன்ஹாம் பதவி ஏற்பு

By Arun Kumar
4 hours ago

  லண்டன்: இங்கிலாந்து நாட்டில் ஆளும் தொழிலாளர் கட்சி தலைவராகவும், பிரதமராகவும் இருந்த கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் பதவி விலகினார். இதையடுத்து தொழிலாளர் கட்சி தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் ஆன்டி பர்ன்ஹாம்(56) மட்டுமே போட்டியிட்டதால், அவர் முறைப்படி தொழிலாளர் கட்சி தலைவராக கடந்த வியாழக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கெய்ர் ஸ்டார்மர் நேற்று மன்னர்...

உலக கோப்பைக்கு தயாராக உடல்தகுதி முக்கியம்…: கேப்டன் கில் கவலை

By Arun Kumar
4 hours ago

  லார்ட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்த நிலையில், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உலக கோப்பைக்கு தயாராக, வீரர்கள் நல்ல உடல்தகுயுடன் இருப்பது அவசியம் என இந்திய அணி கேப்டன் கில் தெரிவித்துள்ளார்.இந்தியா-இங்கிலாந்து அணிகளிடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில்,...

சில்லி பாயின்ட்…

By Arun Kumar
4 hours ago

  * ஒருநாள் போட்டிகளில் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் கண்ட ஜோடிகள் பட்டியலில் ரோகித் கோஹ்லி 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளனர். லார்ட்ஸ் போட்டியில் 2வது விக்கெட்டுக்கு 86 பந்தில் 113 ரன் எடுத்த இந்த ஜோடிக்கு இது 21வது செஞ்சுரி பார்ட்னர்ஷிப் ஆகும். இலங்கையின் தில்ஷன் சங்கக்கரா (20) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டனர். இந்த...

உலக கோப்பை கால்பந்து 2வது முறையாக ஸ்பெயின் சாம்பியன்: பைனலில் அர்ஜென்டினாவை வீழ்த்தி அசத்தல்

By Arun Kumar
4 hours ago

  நியூயார்க்: ஃபிபா உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பரபரப்பான பைனலில், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஸ்பெயின் அணி 2வது முறையாக சாம்பியனாகி சாதனை படைத்தது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா நாடுகள் இணைந்து நடத்திய 23வது உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் அர்...

அரசு வக்கீல்கள் நியமனத்தில் நடந்த தில்லாலங்கடியால் விசில் நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியிருப்பது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

By Arun Kumar
4 hours ago

  ‘‘இலை தரப்பினர் பலரும் மாற்றுக்கட்சி நோக்கி செல்லும் நிலையில், முன்னாள் மாஜி மந்திரி நீண்ட காலமாகவே சைலண்ட் மோடில் இருக்கிறாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘புரம் என முடியும் கடலோர மாவட்டத்தில் ஒருகால கட்டத்தில் இலைக்கட்சி ரொம்பவே செல்வாக்குடன் இருந்தது.. இலைக்கட்சிக்கான மாவட்டங்கள் என்பதில் முன்னணியில் இருந்த மாவட்டத்தில், இன்றைக்கு நாளுக்கு நாள்...

மாமல்லபுரத்தில் 29ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்

By Arun Kumar
4 hours ago

  சென்னை: பாமக தலைவர் அன்புமணி, பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் கூட்டாக வெளியிட்ட அறிக்கை: பாமக பொதுக்குழுக்கூட்டம் வரும் 29ம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ஃப்ளூயன்ஸ் அரங்கத்தில் நடைபெறும். பாமகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ...

மேகதாது விவகாரம் ஒகேனக்கல்லில் ஆக.2ல் தேமுதிக ஆர்ப்பாட்டம்

By Arun Kumar
4 hours ago

  சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு ஆதரவாக மேலும் வலுசேர்க்கும் வகையிலும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை எதிர்த்தும், காவிரி நதியிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடாததைக் கண்டித்தும், தேமுதிக சார்பில் வரும் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல்லில்...