திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை, பணம் மோசடி; வாலிபர் கைது
அண்ணாநகர்: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பெண் காவலருடன் உல்லாசமாக இருந்து விட்டு 6 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அண்ணாநகரில் வசிப்பவர் சுமதி (33, பெயர் மாற்றம்). போலீசாக வேலை பார்க்கிறார். கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8...
வாடகைக்கு வீடு எடுத்து கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து ‘கருவின்’ பாலினம் கண்டறிந்து கூறியவர் கைது: 2 பெண் உதவியாளர்களும் சிக்கினர்
வாழப்பாடி: வாழப்பாடி அருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து கர்ப்பிணிகளுக்கு ஸ்கேன் செய்து கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறியவரை போலீசார் கைது செய்தனர். 2 பெண் உதவியாளர்களும் சிக்கினர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகேயுள்ள பேளூரில் சக்திவேல் என்பவருக்கு சொந்தமான வீட்டில், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கொடுகூர் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் (50) என்பவர் வாடகைக்கு...
சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி இ-சிகரெட் பறிமுதல்: சென்னை, கேரளாவை சேர்ந்த 3 தொழிலதிபர் கைது
தூத்துக்குடி: சீனாவிலிருந்து தூத்துக்குடிக்கு கடத்தி வரப்பட்ட ரூ.10.5 கோடி மதிப்பிலான இ-சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக சென்னை மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3 தொழிலதிபர்களை மத்திய வருவாய் புலனாய்வு துறையினர்கைது செய்தனர். சிகரெட் லைட்டர் போன்ற கருவியில் நிகோடின் பவுடரை அடைத்து விற்பனை செய்யப்படுவதுதான் இ-சிகரெட் ஆகும். ஒரு இ-சிகரெட்டின் விலை ரூ.4 ஆயிரம் முதல்...
கணக்கில் வராத ரூ.3.24 லட்சம் சார்பதிவாளர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை, அண்ணாமலை நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (44). இவர் வீரசோழன் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சார்பதிவாளராக (பொ) பணியாற்றி வருகிறார். இவர், பத்திரப்பதிவுக்காக வரக்கூடிய பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையிலான போலீசார், அவரை கண்காணித்து வந்தனர். கடந்த 28ம் தேதி...
தஞ்சாவூரில் துணிகரம் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகை கொள்ளை
வல்லம்: தஞ்சாவூரில் தமிழக அரசின் டெல்லி பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் 87 பவுன் நகை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே சேகரன் நகரில் வசித்து வருபவர் ஏ.கே.எஸ். விஜயன். திமுக முன்னாள் எம்பியான இவர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய...
தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு 2 விமானங்களில் கடத்தி வந்த ரூ.1.45 கோடி கஞ்சா பறிமுதல்
* 2 வடமாநில கடத்தல் பயணிகள் சிக்கினர் * 2805 சிவப்பு காது நட்சத்திர ஆமைகளும் சிக்கின சென்னை: சென்னை விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து பெரும் அளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சுங்கத்துறையின் ஏர்இன்டலிஜென்ட் அதிகாரிகள் நேற்று...
ஆம்னி பஸ்சில் மயக்க பிஸ்கட் கொடுத்து மாணவி பலாத்காரம்: வீடியோ எடுத்து மிரட்டிய டிரைவர் கைது
மார்த்தாண்டம்: ஆம்னி பஸ்சில் கல்லூரி மாணவிக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து பலாத்காரம் செய்ததோடு, வீடியோ எடுத்து மிரட்டிய டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தக்கலை பகுதியில் வசித்து வரும் விவசாயி ஒருவரின் 22 வயது மகள், கோவையில் உள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்எஸ்சி இறுதியாண்டு படித்து வருகிறார். கடந்த 4...
நெல்லையில் உறவினருடன் கள்ளக்காதலால் கோவையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்
* சடலத்துடன் செல்பி எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என ஸ்டேட்டஸ் * போலீசுக்கு தகவல் சொல்லி வரும் வரை காத்திருந்து உடலை ஒப்படைத்த உத்தமர் கோவை: கோவையில் மகளிர் விடுதிக்குள் புகுந்து மனைவியை அரிவாளால் வெட்டி கொன்றதோடு, சடலத்துடன் செல்பி எடுத்து ‘துரோகத்தின் சம்பளம் மரணம்’ என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்த...
பாலியல் புகாரில் கைதால் ஆத்திரம் தலையை துண்டித்து அண்ணி படுகொலை: கொழுந்தன் வெறிச்செயல்
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே காட்டுக்கூடலூர் குளத்தங்கரை தெருவை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் மனைவி தமிழரசி (35). இவர்களுக்கு ஹரிகிருஷ்ணன் (13), ஹரிசக்தி (10) என்ற 2 மகன்கள் உள்ளனர். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் சென்னைக்கு சென்று,...