நீண்டகால உள்துறை அமைச்சர்: அத்வானியை பின்னுக்கு தள்ளிய அமித் ஷா

  டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சராக பணியாற்றும் அமித் ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானியின் சாதனையை முறியடித்து, நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி கடந்த 1998 மார்ச் 19 முதல் 2004 மே 22 வரை, அதாவது 2,256 நாட்கள் நாட்டின் உள்துறை...

5 பேருக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணை: அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார்

By Suresh
18 hours ago

  சென்னை: 5 நபர்களுக்கு ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான நியமன ஆணையை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். சென்னை முழுவதும் நாளொன்றுக்கு சுமார் 15 லட்சம் லிட்டர் பால் மற்றும் மாதம் ஒன்றுக்கு சுமார் ரூ.30 கோடி மதிப்பிலான பால் உப பொருட்கள், 35 ஆவின் ஜங்சன் பாலகங்கள், 200 ஆவின் பாலகங்கள்...

ஆதாரங்கள் இல்லை.. டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!!

By Nithya
18 hours ago

டெல்லி: டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கில் ஆதாரங்கள் இல்லை என்பதால் வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது பொதுப்பணித் துறையில் ஊழல் தொடர்பாக அப்போதைய பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின் மற்றும் அதிகாரிகள் மீது 2018ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பொதுப்பணித் துறையில் முறைகேடாக ஆள்களை...

வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

By Suresh
19 hours ago

  சென்னை: வார இறுதி நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதிகளில் 1,040 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வார விடுமுறை நாட்களை முன்னிட்டு ஆக.8, 9ம் தேதி சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான...

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி..!!

By Lavanya
19 hours ago

சென்னை: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அனுப்பி வைத்துள்ளார். துணைவேந்தர் நியமனம், யுஜிசி விதிகள் தொடர்பான வழக்குகளை காரணம்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகியது. கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா கடந்த ஏப்ரல் 28ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கலைஞர்...

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

By Nithya
20 hours ago

சென்னை: நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக.14ம்...

உத்தரகாசியில் மேகவெடிப்பால் காட்டாற்று வெள்ளம்; 4 பேர் உயிரிழப்பு: மீட்பு பணிகள் தீவிரம்

By Suresh
20 hours ago

  உத்தராகண்ட்: உத்தரகாசியில் தரலி என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர். உத்தரகாசியில் மேகவெடிப்பு ஏற்பட்டு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. இதில் கரையோர கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஹரித்துவாரில் மேகவெடிப்பு காரணமாக 30 செ.மீ. மழை கொட்டியதால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. கீர் கங்கை நதியில் வரலாறு காணாத அளவுக்கு வெள்ளப்பெருக்கு...

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

By Lavanya
21 hours ago

சென்னை: சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் 6.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (5.8.2025) மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி. அடையாறு மண்டலம், ராஜா அண்ணாமலையுரம், நாராயணசாமி தோட்டத்தில் உள்ள சென்னை...

நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை : ஐகோர்ட் கிளை பாராட்டு!!

By Porselvi
21 hours ago

மதுரை : நெல்லை ஐ.டி. பொறியாளர் கவின் ஆணவக் கொலை வழக்கில் அரசு துரித நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஐகோர்ட் மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது. நெல்லை கேடிசி நகர் பகுதியில் கடந்த 27ம் தேதி காதல் விவகாரத்தில் கவின் என்ற பட்டியலின இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை...

கொளத்தூர் பயணத்தால் நெடுநாள் பிரிந்திருந்த உணர்வை நீங்கி, புது வலிமையைப் பெற்றேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!!

By Nithya
a day ago

சென்னை: உடல்நிலை காரணமாக தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் பதிவில் கூறியதாவது; உடல்நிலை காரணமாகத் தள்ளிப்போன கொளத்தூர் பயணம், நெடுநாள் பிரிந்திருந்த உணர்வைத் தந்தது. அந்த உணர்வு நீங்கி, புது வலிமையைப் பெற்றேன் இன்று! இன்றைய கொளத்தூர் பயணத்தில்,...