கணவன், மனைவி மீது கட்டையால் தாக்குதல் 5 பேருக்கு போலீஸ் வலை ஆரணியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில்
ஆரணி, ஜூலை 31: ஆரணியில் தண்ணீர் பிடிக்கும் தகராறில் கணவன், மனைவி மீது கட்டையால் சரமாரி தாக்குதல் நடத்திய 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி டவுன் காந்தி நகரை சேர்ந்தவர் குலாப்நபி(40), இவரது மனைவி மைதிலி(38), இவர்களுக்கும், அதேபகுதியை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவருக்கும், இடையே நகராட்சி குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக நேற்று...
போதைப்பொருட்கள் பதுக்கிய குடோன், மளிகை கடைக்கு சீல் ரூ.50 ஆயிரம் அபராதம்
கீழ்பென்னாத்தூர், ஜூலை 31: வேட்டவலம் பேருந்து நிலையம் எதிரே பெருமாள் என்பவர் மளிகை கடை வைத்துள்ளார். இவருக்கு சொந்தமான குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்கள் பதுக்கி விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பானு சுஜாதா தலைமையிலான அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதில்...
மகன் திட்டியதால் தாய் தற்கொலை
கலசபாக்கம், ஜூலை 31: கலசபாக்கம் அருகே மகன் திட்டியதால் தாய் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலசபாக்கம் ஒன்றியம் காப்பலூர் கிராமத்தில் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மினி(70). இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். பத்மினி மகனுடன் வசித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பத்மினிக்கும்...
மறு அறிவிப்பு வரும் வரை நெல் மூட்டை கொண்டுவர வேண்டாம் வியாபாரிகள் வேலை நிறுத்தத்தால் நிர்வாகம் முடிவு சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டிக்கு
சேத்துப்பட்டு ஜூலை 30: தமிழகத்தில் உள்ள மார்க்கெட் கமிட்டிகளில் மின்னணு தேசிய வேளாண் சந்தை இனாம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் விலை பொருட்கள் ஏலம் விடப்பட்டு விவசாயிகள் வங்கி கணக்குக்கு மூலம் பணம் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒழுங்குமுறை விற்பனை கூட அனைத்து வேளாண்...
15 கிலோ வெள்ளி கொள்ளை வழக்கில் விசாரணை தீவிரம் 500 சிசிடிவி கேமராக்களை தனிப்படை ஆய்வு ஆரணியில் நடந்த சம்பவம்
ஆரணி, ஜூலை 30: ஆரணி அடுத்த ராட்டிணமங்கலம் இ.பி.நகரை சேர்ந்த பெருமாள்(37), என்பவர், ஆரணி-வேலூர் சாலையில் நகைக்கடை வைத்துள்ளார். இவர் கடந்த 27ம் தேதி கடைக்கு வந்தபோது, கடையின் சுவரை துளையிட்ட மர்ம நபர்கள், 15 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றிருந்தனர். மேலும் காஸ் கட்டர் மூலம் லாக்கரை உடைக்க முயன்று முடியாததால் 25...
விவசாயியை சரமாரி தாக்கி கத்தியால் கிழித்தவர் கைது மனைவி, 2 மகன்களுக்கு வலை ஆரணி அருகே நிலத்தகராறில்
ஆரணி, ஜூலை 30: ஆரணி அருகே நிலத்தகராறில் விவசாயியை சரமாரி தாக்கி கத்தியால் கிழித்தவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது மனைவி, 2 மகன்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆரணி அடுத்த ஆகாரம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(60), அதேபகுதியை சேர்ந்தவர் இவரது உறவினர் முருகன்(50), இவர்கள் இருவரும் விவசாயிகள். உறவினர்களான இவர்களிடையே நிலம் சம்மந்தமாக...
திராவிட மாடல் ஆட்சியில் ஒவ்வொரு குடும்ப பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது பொதுக்கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றும் திட்டங்களால்
திருவண்ணாமலை, ஜூலை 29: திருவண்ணாமலை மாநகர திமுக சார்பில், ராஜராஜன் தெருவில் கலைஞரின் 102வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நேற்றிரவு நடந்தது. மாநகர செயலாளர் கார்த்திவேல்மாறன் தலைமை தாங்கினார். மாநகர பகுதி செயலாளர்கள் விஜயராஜ், சீனுவாசன், குட்டி புகழேந்தி, ஷெரீப், சண்முகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பகுதி செயலாளர் கோவிந்தன் வரவேற்றார். கூட்டத்தில், பொதுமக்களுக்கு நலத்திட்ட...
2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு பித்தளை அண்டாவையும் தூக்கி சென்றனர் வந்தவாசி அருகே கும்பல் கைவரிசை
வந்தவாசி, ஜூலை 29: வந்தவாசி அருகே 2 வீடுகளில் கதவு உடைத்து தங்கம், வெள்ளி நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். வந்தவாசி அடுத்த கொண்டையங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சகாதேவன்(53), மணி(45) ஆகியோரின் வீடுகள் அருகருகே உள்ளது. இந்நிலையில் இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு குடும்பத்துடன் அவர்களது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தனர்....
தண்டராம்பட்டு அருகே பரபரப்பு: செப்டிக் டேங்கில் பயங்கர சத்தத்துடன் வெளியேறிய காஸ்
தண்டராம்பட்டு, ஜூலை 28: தண்டராம்பட்டு அருகே செப்டிக் டேங்கில் இருந்து பயங்கர சத்தத்துடன் காஸ் வெளியேறிய சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது. தண்டராம்பட்டு அடுத்த தச்சம்பட்டு காவல் நிலையம், வருவாய் அலுவலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மார்க்கெட் கமிட்டி ஆகிய கட்டிடங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தேக்கி வைப்பதற்காக காவல் நிலையம் எதிரே செப்டிக்...