படியூர் அரசு பள்ளியில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி
காங்கயம், நவ. 7: காங்கயம் படியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் எச்ஐவி, எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று விழிப்புணர்வு பேரணி நடந்தது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் விஜயகுமார், பேரணிக்கு தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை லிங்கேஸ்வரி முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் சரண்யா, மாவட்ட தலைமை மருத்துவமனை சுகவாழ்வு மைய ஆலோசகர் கருப்புசாமி ஆகியோர் தொடங்கி...
கைகாட்டிப்புதூரில் சிறப்பு தீவிர திருத்த படிவம் வழங்கும் பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு
அவிநாசி, நவ. 7: அவிநாசி வட்டம், கைகாட்டிப்புதூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் இல்லத்திற்கு சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான மனிஷ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் அவிநாசிலிங்கம்பாளையத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர...
தொழிலாளர் சட்டத்தை மீறிய 146 நிறுவனங்கள் மீது வழக்கு
திருப்பூர், நவ. 6: திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) காயத்ரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதத்தில் பல்வேறு தொழிலாளர் நல சட்டங்களின் கீழ் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. இதில் எடையளவு சட்டத்தின் கீழ் எடை குறைவு, முத்திரை, மறுமுத்திரை இடாத எடை அளவுகள் வைத்திருத்தல் போன்ற பிரிவின் கீழ் 34...
மாவட்ட கால்பந்து போட்டி மாணவர்கள் உற்சாகம்
திருப்பூர், நவ. 6: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 14 குறு மையங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டது. வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் மாவட்ட அளவிலான போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடந்தது. 19 வயதுக்கு...
15 நாட்களுக்கு பிறகு பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
உடுமலை, நவ. 6: உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. தினமும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலில் வழிபட்டு அருவியில் குளித்து செல்கின்றனர்.இந்நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அருவிக்கு செல்லும் வழியில் உள்ள இரும்பு பாலம் சரிந்து விழுந்தது. இதையடுத்து,...
காங்கயத்தில் முறையாக சாலையை சீரமைக்காததால் வாகன ஓட்டிகள் அவதி
காங்கயம்., நவ.5: காங்கயம் பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலையில் இருபுறமும் வணிக கடைகள் இயங்கி வருகின்றன. இச்சாலை பெரும்பாலும் வாகன நெரிசலாக காணப்படும். பேருந்து நிலையம் பின்புறம் சென்னிமலை சாலைக்கு திரும்பும் இடத்தில் சாலையில் சேதங்கள் ஏற்பட்டு சிறு சிறு பள்ளங்களாக இருந்தது. இதனை சரி செய்ய சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பள்ளங்களை ஜல்லி கற்களை...
ரயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு
உடுமலை, நவ. 5: உடுமலை அருகே ராகல்பாவியில் ரயில்வே சுரங்கப்பாதை உள்ளது. இதன் வழியாக ராகல்பாவியில் இருந்து பூலாங்கிணறு, ஆர்.கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு வாகனங்களில் பொதுமக்கள் சென்று வந்தனர். இந்நிலையில், கடந்த வாரம் பெய்த மழையால் சுரங்கப்பாதையில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகனங்கள் செல்ல முடியவில்லை. பல கிமீ தூரம் சுற்றிக்கொண்டு செல்லும்...
டூ வீலர் திருடிய வாலிபருக்கு 2 ஆண்டு சிறை
திருப்பூர், நவ.5: திருப்பூர் கொங்குநகர் பகுதியில் இருசக்கர வாகனம் திருடியது தொடர்பாக மங்கலத்தை சேர்ந்த சதாம் உசேன்(33) என்பவரை கடந்த 2023ம் ஆண்டு திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு 2ம் எண் நீதிமன்றத்தில் நடந்தது. ஜாமீனில் வந்த சதாம் உசேன் நீதிமன்ற...
வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்ற வாலிபர் கைது
திருப்பூர், நவ.1: திருப்பூர் நல்லூர் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் நல்லூர் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முதலிபாளையம் பிரிவில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். போலீசார் விசாரணையில் அவர் முன்னுக்கு பின்...