திருப்பூரில் திடீர் மழை: பொதுமக்கள் அவதி

திருப்பூர், நவ. 15: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்திருந்தது. அதன்படி திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்தது. மழையால் திருப்பூர் அவிநாசி ரோடு, பி.என்.ரோடு, ஊத்துக்குளி...

திமுக கிரிக்கெட் போட்டி வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு

By Ranjith
12 Nov 2025

உடுமலை, நவ. 13: துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48வது பிறந்தநாளை முன்னிட்டு குடிமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள வாகத்தொழுவு ஊராட்சி வி.வேலூர் கிராமத்தில் திமுக சார்பில் மாபெரும் கிரிக்கெட் போட்டி நடந்தது. போட்டியில் வெற்றிபெற்ற அணிகளுக்கு மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியம் தலைமையில் குடிமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் அணிகடவு கிரி,...

கொங்கணகிரி முருகன் கோயிலில் ரூ.4.19 லட்சம் உண்டியல் காணிக்கை

By Ranjith
12 Nov 2025

திருப்பூர், நவ. 13: திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கொங்கணகிரி கந்தபெருமான் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை செயல்அலுவலர், அறநிலையத்துறை சரக ஆய்வாளர், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு எண்ணப்பட்டது. இதில், ரூ.4 லட்சத்து 19...

பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்ய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்

By Ranjith
12 Nov 2025

திருப்பூர், நவ. 13: பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் திருப்பூர் மாநகருக்கு வந்துள்ள 8 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களை, மாநகர போலீஸ் கமிஷனர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாட்டில் அமைதியை பாதுகாத்து சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் தமிழக காவல்துறை முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் காவல்துறையின் பணிகள் சிறக்கும் வகையில் புதிய போலீஸ் நிலையங்கள்,...

பெயிண்டரிடம் செல்போன் பறித்தவருக்கு 2 ஆண்டு சிறை

By Ranjith
11 Nov 2025

திருப்பூர், நவ. 12: திருப்பூர் போயம்பாளையத்தை சேர்ந்தவர் ஆபிரகாம்செல்வம் (55), பெயிண்டர். கடந்த 31-12-2023 அன்று இரவு இவர், புதிய பஸ்நிலையம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது, அவரை திருப்பூர் கல்லாங்காடு ரோடு, எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த கணேஷ் (30) என்பவர் வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து வடக்கு போலீசார்...

காலி பணியிடங்களை நிரப்ப கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்

By Ranjith
11 Nov 2025

திருப்பூர், நவ. 12: திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதியதாக திறக்கப்படும் மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் பணியிடங்கள் புதியதாக நிரப்பப்படாமல் ஏற்கனவே உள்ள மருத்துவக்கல்லூரி...

ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் தீவிர சோதனை

By Ranjith
11 Nov 2025

திருப்பூர், நவ. 12: டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து திருப்பூர் ரயில் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டனர். டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் கார் குண்டு வெடித்ததில் 9க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டோர் தீக்காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தை...

‘உங்கள் வெகுமதியை பெற இன்றே கடைசிநாள்’ வங்கி பெயரில் வரும் குறுஞ்செய்திகள் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்

By Suresh
10 Nov 2025

திருப்பூர், நவ. 11: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்குநாள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிதாக்கும் அதே நேரத்தில் இணையதளம் வாயிலாக நடைபெறும் சைபர் கிரைம் குற்றங்கள் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. சமீப காலமாக அதிக பயனர்களைக் கொண்ட ஸ்டேட் பேங்க் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது போன்ற வெகுமதி பாய்ண்டுகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்ற...

தாராபுரத்தில் கோரிக்கை வலியுறுத்தி சாலை பணியாளர்கள் நூதன போராட்டம்

By Suresh
10 Nov 2025

தாராபுரம், நவ.11: தாராபுரத்தில் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அங்கீகரிக்க வலியுறுத்தி சாலை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரம்- உடுமலை சாலையில் உள்ள கோட்ட பொறியாளர் அலுவலகம் முன் நடந்த தொடர் முழக்க போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் வெங்கடசாமி தலைமை தாங்கினார். கோட்ட துணை தலைவர்கள் தங்கவேல் மற்றும் செல்வகுமார்,கோட்ட...

துணை ஜனாதிபதி வருகைக்காக அகற்றப்பட்ட வேகத்தடைகளை மீண்டும் அமைக்க வேண்டும்

By Suresh
10 Nov 2025

திருப்பூர், நவ. 11: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 28 மற்றும் 29ம் தேதிகளில் திருப்பூருக்கு வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அவரின் வருகையை முன்னிட்டு திருப்பூர் மாநகரில் அவர் வந்து சென்ற இடங்களில் உள்ள சாலைகளில் வேகத்தடைகள் அகற்றப்பட்டது.திருப்பூர் புஷ்பா ரவுண்டானா, மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம், டவுன்ஹால், தாராபுரம் சாலை உள்ளிட்ட...