கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்

உடுமலை, நவ. 21: தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் கணபதிபாளையம் கிராம ஊராட்சி வெனசுப்பட்டி கிராமத்தில் நடை பெற்றது. உடுமலை கோட்ட உதவி இயக்குநர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள் முருகன், பிரகாஷ் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள் அடங்கிய குழுவினர் 750க்கும்...

வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும்

By Ranjith
20 Nov 2025

திருப்பூர், நவ. 21: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், அனைத்து இஸ்லாமிய ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் நிர்வாகிகள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள் விண்ணப்பப் படிவங்களை வாக்காளர்களிடம் வழங்கி விட்டு சீக்கிரம் திருப்பித் தருமாறு அவசரப்படுத்துகிறார்கள். டிசம்பர் 4 வரை...

தடுப்புச்சுவர் சேதமடைந்த பாலத்தால் விபத்து அபாயம்

By Ranjith
18 Nov 2025

உடுமலை, நவ. 19: குடிமங்கலம் ஒன்றியம் அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் உப்பாறு கிளை ஓடை செல்கிறது. கொங்கல் நகரத்தில் இருந்து நெகமம் செல்லும் சாலையில் ராமச்சந்திராபுரத்தில் இந்த ஓடை குறுக்கிடுகிறது. இதனால் இந்த சாலையில் கடந்த 1984-ம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் கட்டப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக,...

பெரியகோட்டை ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு தாமதம்: பொதுமக்கள் அவதி

By Ranjith
18 Nov 2025

உடுமலை, நவ. 19: உடுமலை அருகே உள்ள பெரியகோட்டை ஊராட்சியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், புதிதாக உருவான குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, ஏராளமானோர் குடிநீர் இணைப்புக்கான டெபாசிட் தொகையை செலுத்தி உள்ளனர். பிவிசி குழாய்களையும் குடியிருப்புவாசிகளே வாங்கி தரவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்தால் கூறப்பட்டதாலும், பலரும் பிவிசி பைப்புகளை...

பாதுகாப்பற்ற நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்

By Ranjith
18 Nov 2025

உடுமலை, நவ. 19: அணிக்கடவு ஊராட்சி ராமச்சந்திராபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் உள்ளது. சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் நகைகளை இங்கு அடகு வைத்து கடன் பெறுகின்றனர். மேலும், பல்வேறு சொத்து ஆவணங்களை பெற்றுக்கொண்டு விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. நகை, பணம் மற்றும் ஆவணங்கள் உள்ள இந்த கூட்டுறவு வங்கி வளாகம் பாதுகாப்பற்ற...

உத்தமபாளையம் வட்டமலைக்கரை ஓடை அணையில் சிசிடிவி கேட்டு மனு

By Neethimaan
17 Nov 2025

திருப்பூர், நவ.18: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மனிஷ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன் அளித்த மனுவில், உத்தமபாளையத்தில் வட்டமலைக்கரை ஓடை அணை உள்ளது. பரம்பிக்குளம் ஆழியார் அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் அணைக்கு...

பெரியகுளம் கரையில் குப்பையால் சுகாதார சீர்கேடு

By Neethimaan
17 Nov 2025

உடுமலை,நவ. 18: உடுமலை அருகே உள்ள பெரியவாளவாடி பிரிவில் பெரியகுளம் உள்ளது. திருமூர்த்தி அணை 8 குளம் பாசனத்தில் உள்ள இந்த குளம் பெரிய அளவில் நீர்பிடிப்பு உள்ள பகுதியாகும். நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது,இந்த குளம் நிரம்பி வழியும். தற்போது இந்த குளத்தின் கரையில் குப்பை, கூழங்களை குவித்து வைத்துள்ளனர். இறைச்சிக் கழிவுகளையும் கொட்டிச் செல்கின்றனர்....

எஸ்ஐஆர் பணி தொடர்பாக திமுக ஆலோசனைக்கூட்டம்

By Neethimaan
17 Nov 2025

திருப்பூர், நவ.18: தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில், பொதுமக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் மற்றும் குழப்பங்கள் உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகமான முரசொலி...

எஸ்ஐஆர் தொடர்பாக ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு மையம்

By Ranjith
14 Nov 2025

காங்கயம், நவ. 15: காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எஸ்ஐஆர் 2025 சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட கணக்கிட்டு படிவங்களை, பூர்த்தி செய்து வழங்க வசதியாக தாங்கள் வாக்களிக்கும் ஓட்டுச்சாவடிகளில் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, வாக்குச்சாவடி நிலை அலுவலர், பிஎல்ஓ தன்னார்வலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாக்காளர்கள் இன்றும் (சனி),...

எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து அலுவலர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

By Ranjith
14 Nov 2025

அவிநாசி, நவ. 15: எஸ்.ஐ.ஆர். பணியில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களை ஈடுபடுத்துவதை கண்டித்து, எஸ்.ஐ.ஆர் பணியை புறக்கணித்து மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட பொருளாளர் ரமேஷ்குமார், வட்டாரத் தலைவர் ஆனந்தன், வட்டார செயலாளர்...