கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெற்பயிர் முளைக்க துவங்கியது

திருவெறும்பூர், அக்.26: திருவெறும்பூர் அருகேயுள்ள கீழக்குறிச்சி பகுதியில் அறுவடைக்கு தயாரான குறுவை நெல்மணிகள் மழைநீரில் மூழ்கி முளைப்பதால் விவசாயிகள் வேதனை அடைந்துனர்.திருவெறும்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சில தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள...

திருச்சி அருகே கொலை வழக்கில் கைதான மூவருக்கு குண்டாஸ்

By Suresh
26 Oct 2025

திருச்சி அக்.26: திருச்சி துறையூர் ஆலத்துடையான்பட்டி கிராமத்தில் வசித்து வரும் சுரேஷ் (35) என்பவர் தனது மனைவி மாதவி வீடான தொட்டியம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முள்ளிப்பாடி கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், முன் விரோதம் காரணமாக கடந்த 2.9.2025-ம் தேதி இரவு முள்ளிப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே துறையூர் ஆலத்துடையான்பட்டி பகுதியை சேர்ந்த கல்பேஷ்...

இரைதேடி அலைமோதிய கொக்குகள் பாரில் தகராறு: ரவுடி கைது

By Suresh
26 Oct 2025

திருச்சி, அக். 26: திருச்சி மேலகல்கண்டார்கோட்டை கம்பி கேட் அருகிலுள்ள டாஸ்மாக் பாரில், அர்ஜுனன் நகர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த சிவக்குமார்(38), பிரபல ரவுடியான இவர் கீழகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஆனந்த் இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தனர். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.இதனை உறையூர் சோமு பிள்ளை தெருவைச் சேர்ந்த புகழ்(26) என்பவர்...

திருவெறும்பூர் பகுதியில் இயந்திர நடவு செய்த 1000 ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கியது

By Suresh
25 Oct 2025

திருவெறும்பூர், அக்.25: திருவெறும்பூர் சுற்றுவட்ட பகுதியில் இயந்திரத்தில் நடவு செய்த சுமார் 1000 ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மழைநீர் ஆங்காங்கே தேங்கி விவசாய நிலங்களையும், குடியிருப்புகளையும் பாதித்து வருகிறது. அதன்...

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள 24 மணிநேர கட்டுப்பாட்டு அறை

By Suresh
25 Oct 2025

திருச்சி,அக்.25: திருச்சி மாநகராட்சியில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், 24 மணி நேரமும் செயல்படும் கண்காணிப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு தற்போது செயல்பட்டு வருகிறது என மாநகராட்சி கமிஷனர் மதுபாலன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையின் புகார் எண். 8300113000 மற்றும் 0431-3524200...

வாலிபரை தாக்கிய 3 பேர் கைது

By Suresh
25 Oct 2025

திருச்சி, அக்.25: திருச்சி இபி ரோடு கல்மந்தை காலனியை சோ்ந்தவர் மணிகண்டன்(27). இவர் கடந்த அக்.21ம் தேதி காலை தனது டூவீலரில் பால் வாங்கச் சென்றார். அப்போது காந்தி மார்க்கெட் வாழைக்காய் மண்டி அருகே வந்தபோது மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது தாயாரைத் திட்டியதாக தெரிகிறது. அப்போது, இருவருக்கு இடையே தகராறு ஏற்பட்டதில், மணிகண்டனை மோசமான...

துறையூர் அருகே பருவ மழை காரணமாக நிரம்பி வழியும் ஆலத்துடையான்பட்டி ஏரிகள்

By Ranjith
23 Oct 2025

துறையூர், அக். 24: துறையூர் அருகே ஆலத்துடையான் பட்டி பெரிய ஏரி, சின்ன ஏரி முழு கொள்ளளவு எட்டியதை தொடர்ந்து நிரம்பி வழிந்தது. திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆலத்துடையான் பட்டியில் சின்ன ஏரி, பெரிய ஏரி உள்ளது. பெரிய ஏரியின் பரப்பளவு 218 ஏக்கர் கொண்டது. வடகிழக்கு பருவ மழை ஆரம்பித்து...

திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி

By Ranjith
23 Oct 2025

திருச்சி, அக். 24: திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அக்டோபர் கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு நேற்று திருச்சி அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் மாத விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மருத்துவ கல்லூரி முதல்வர் குமரவேல் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாத...

கத்தியை காட்டி மிரட்டி பணம் கேட்ட பிரபல ரவுடி கைது

By Ranjith
23 Oct 2025

திருச்சி, அக். 24: திருச்சியில் சத்திரம் பஸ் ஸ்டாண்டு அருகே நின்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடியை போலீசார் கைது செய்தனர். திருச்சி, திருவெறும்பூர், பாப்பாகுறிச்சி சாலையை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(48). இவர் கடந்த 21ம் தேதி சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர் இவரிடம் ரூ.2...

கிருஷ்ணசமுத்திரத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

By MuthuKumar
23 Oct 2025

திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் கிருஷ்ணசமுத்திரம் முதல் நிலை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நேற்று நடந்தது. பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் முகம் தமிழகம் முழுவதும் பத்தாயிரம் இடங்களில் நடத்துவதற்கு முடிவு செய்து நடத்தப்படுகிறது. மேலும் இதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் அருகே உள்ள கிருஷ்ணசமுத்திரம் முதல்...