திருச்சி அடுத்த துவாக்குடி அரசு கலைக்கல்லூரியில் ஆவணங்கள் தீயிட்டு எரிப்பு: பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை

திருவெறும்பூர், அக்.23: திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை தலைவர் அலுவலகம் மற்றும் ஆய்வகத்தின் பூட்டை உடைத்து ஆவணங்களை எரித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே துவாக்குடி அரசு கலைக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி...

கண்ணெதிரே தோன்றிய பிரபஞ்ச பேரழகு திருச்சியில் அக்.24ல் கல்விக்கடன் முகாம்

By MuthuKumar
23 Oct 2025

திருச்சி, அக்.23:திருச்சியில் அக்.24ம்தேதி கல்வி கடன் முகாம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு,திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து நடத்தும் மாபெரும் கல்வி கடன் முகாம் அக். 24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 2...

போதை மாத்திரை விற்றவர் கைது

By Ranjith
18 Oct 2025

திருச்சி, அக்.18: திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி பாலக்கரை பகுதியில் போதை மாத்திரை விற்கப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அக்.16ம் தேதி பாலக்கரை போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது பாலக்கரை ஆலம்தெரு அருகே போதை மாத்திரை விற்றதாக குட்ஷெட் ரோடு...

கருஞ்சோலைப்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

By Ranjith
18 Oct 2025

மணப்பாறை, அக்.18: மணப்பாறை அடுத்த கருஞ்சோலைப்பட்டி கிராமத்தில் நேற்று நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை வருவாய் வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார். மக்களை நாடி அரசு சேவைகளை அளித்தும் வரும் முதலமைச்சரின் திட்டமான உங்களுடன் ஸ்டாலின் முகாம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் ஊராட்சிகளுக்கான முகாம் கருஞ்சோலைப்பட்டி...

உப்பிலியபுரம் அருகே காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்பு

By Ranjith
18 Oct 2025

துறையூர், அக்.18:உப்பிலியபுரம் அருகே காணாமல் போன விவசாயி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அருகே வைரிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த ராமசாமி மகன் நடராஜன் (45). விவசாயி. இவரது மனைவி சுகந்தி. கடந்த 15ம் தேதி வயலுக்கு சென்ற நடராஜன் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி சுகந்தி மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடிப்பார்த்தும்...

வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பிய பெண் மீது வழக்கு

By Ranjith
16 Oct 2025

திருச்சி,அக்.16: திருச்சி இபி ரோடு, அண்ணா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஷ்வா ஜனனி(44). இவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மாத பராமரிப்பு தொகை ரூ.1250 அனைத்து குடியிருப்பு வாசிகளிடமும் பெறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்த குடியிருப்பைச் சேர்ந்த ஸ்ரீதேவி(42) என்ற பெண் பராமரிப்பு தொகை தராமல் வாட்ஸ்அப் செயலியில் தவறான...

சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது

By Ranjith
16 Oct 2025

சமயபுரம், அக். 17: திருச்சி அருகே மளிகை கடை பூட்டை உடைத்து சிகரெட் திருடிய 2 சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர்.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள மேலகல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சரவணன்(48). கல்பாளையம் மெயின் ரோட்டில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 13 ம் தேதி இரவு 10 மணியளவில் சரவணன் வழக்கம் போல்...

திருச்சி மாவட்டத்தில் 10,562 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது

By Ranjith
16 Oct 2025

திருச்சி,அக்.17: திருச்சி மாவட்டத்தில் 10,562 மெ.டன் ரசாயன உரங்கள் இருப்பில் உள்ளது என்று வேளாண் இணை இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருச்சி மாவட்டத்தின் ஆண்டு இயல்பான சராசரி மழையளவு 788.08 மி.லிட்டர் ஆகும். நடப்பாண்டில் 15.10.2025 வரை 421.55 மி.லிட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. ரசாயன உரங்களான...

திருச்சி தில்லைநகரில் சிலைகள் திருடிய 2 பேர் கைது

By Francis
13 Oct 2025

  திருச்சி, அக்.14: திருச்சி தில்லைநகரில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி சிலைகள் திருடிய சிறுவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் திருவேங்கடம் நகரை சேர்ந்தவர் சுதர்சன்(51). இவரது உறவினர் வீடு தில்லைநகர் 3வது கிராசில் உள்ளது. கடந்த 9ம் தேதி சுதர்சன் வீட்டை பூட்டி விட்டு வெளியே...

காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டு விழிப்புணர்வு குறித்த ஆய்வு கூட்டம்

By Francis
13 Oct 2025

  திருச்சி, அக்.14: திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாக்கு திருட்டு விழிப்புணர்வு கையெழுத்து இயக்க பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மத்திய, மாநில முன்னாள் அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர், திருச்சி பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் மாநகர் மாவட்ட தலைவர், மாமன்ற உறுப்பினர் எல்.ரெக்ஸ், வடக்கு...