சிறுமியிடம் அத்துமீறல் போக்சோ வழக்கில் வாலிபர் கைது
திருச்சி, அக். 13: திருச்சி புத்தூர் நான்கு சந்திப்பு சாலைப் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (எ) ரஞ்சித் (32). இவர், திருச்சியை சேர்ந்த சற்று மனநலம் பாதித்த 17 வயது சிறுமியிடம் நட்பாக பழகி வந்துள்ளார். கடந்த 9ம் தேதி அந்த சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்து வந்து, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து...
திருச்சியில் குட்கா விற்ற 2 பேர் கைது
திருச்சி, அக்.13: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதாக அக்.11ம் தேதி பாலக்கரை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் சோதனை மேற்கொண்டதில், தஞ்சாவூர் சாலை தனியார் திருமண மண்டபம் அருகே புகையிலை பொருட்கள் விற்றதாக இ.பி ரோடு காந்தி தெருவைச் சேர்ந்த கோபி (21) என்பவரை கைது செய்தனர்....
போலி பாஸ்போர்ட் முதியவர் கைது
திருச்சி,அக்.13:போலி பாஸ்போர்ட்டில் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த முதியவரை போலீசார் கைது செய்தனர். திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 10ம் தேதி கோலாலம்பூரில் இருந்து வந்த பயணிகளை இமிகிரேசன் அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (63) என்பவரின் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் சோதனை செய்தபோது, போலி ஆவணங்களை...
தீ பாதுகாப்பு விழிப்புணர்வு
திருச்சி,அக்.12: திருச்சி கோர்ட் அருகிலுள்ள மத்திய மண்டல தீயணைப்பு நிலைய இயக்குனர் அலுவலகத்தில் வாங்க கற்றுக் கொள்வோம், தீ பாதுகாப்பு அறிவோம் உயிர்களை காப்போம் என்ற தலைப்பில் தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியை மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் தீயணைப்பு நிலைய அதிகாரி வினோத்...
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
திருச்சி, அக்.12: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது காலணி வீசிய ராகேஷ் கிஷோர் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. உறையூர் குறத்தெருவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட துணைச்...
கல்லூரிகளுக்கான செஸ் போட்டி
திருச்சி, அக்.12: சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு வாரியம் சார்பில் 2025-26ம் ஆண்டிற்கான 13வது மண்டலத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான செஸ் போட்டி இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரியில் நடந்தது. மாணவர்கள் பிரிவில் 9 கல்லூரிகளிலிருந்து 54 மாணவர்களும், மாணவியர்கள் பிரிவில் 7 கல்லூரிகளிலிருந்து 42 மாணவியர்களும் பங்கேற்ற செஸ் போட்டியில் அண்ணா பல்கலைக்கழக...
தஞ்சாவூர் துணைப்பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் போராட்டம்
திருச்சி, அக். 10: ஊழியர் விரோத போக்கோடு செயல்படும் தஞ்சாவூர், சரக துணைப்பதிவாளர் விநாசாந்தினி மீது நடவடிக்கை எடுக்க கோரி செவ்வாயன்று (அக்டோபர் 7) திருச்சி இணைப்பதிவாளர் அலுவலக வளாகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கும் போது, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு செய்ய வேண்டும். 6 மணிக்கு...
திருச்சி சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி
திருச்சி, அக். 10: திருச்சிராப்பள்ளி சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் தேசிய அளவிலான கைப்பந்தாட்டப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். திருச்சிராப்பள்ளி காவேரி குளோபல் சீனியர் செகண்டரி பள்ளியில் நடைபெற்ற ராக்சிட்டி சகோதயா மாவட்ட அளவிலான கைப்பந்தாட்டப் போட்டி 19 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் சமயபுரம் எஸ்.ஆர்.வி பப்ளிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்று முதலிடம் பெற்றனர்....
திருச்சி தலைமை செயலகத்தில் அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்த அமைச்சர்
திருவெறும்பூர், அக். 10: திருவெறும்பூர் பகுதியில் உழவர் சந்தை அமைத்து தரவேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார். திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி திருவெறும்பூர் பகுதிக்கு உட்பட்ட, கணேஷ் நகர், உய்யகொண்டான் வாய்க்கால் கரைப்பகுதியில், அரசுக்கு சொந்தமான...