டிஎன்பிஎல்.ன் பசுமை உற்பத்தி டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் காப்பியர் பேப்பர் அறிமுகம்
வேலாயுதம்பாளையம், ஜூலை 22: தமிழ்நாடு காகித ஆலை சார்பில் பசுமை உற்பத்தி - டிஜிட்டல் புதுமையான தொழில்நுட்பத்தில் காப்பியர் பேப்பர் அறிமுகவிழா நடைபெற்றது. தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனம் காகிதம் தயாரிப்பில் ஒரு முன்னனி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்களுக்காக பிரத்யேக சந்திப்பு திருச்சியில் நடைபெற்றது.தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் வாடிக்கையாளர் சந்திப்பு...
வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்றவர்கள் கைது
திருச்சி, ஜூலை 21: திருச்சியில் 3 வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். திருச்சி - திண்டுக்கல் நெடுஞ்சாலை கோரையாறு பாலம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு கடந்த 19ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர்....
வயலூர் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை வழிபாடு
திருச்சி, ஜூலை 21: திருச்சி, வயலூர் முருகன் கோயிலில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். முருக பெருமானின் ஏழாவது படைவீடு என திருச்சி, வயலூர் முருகன் கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு வள்ளி, தேவசேனா சமேதராக சுப்ரமணியசுவாமி காட்சி அளிக்கிறார். இங்கு சுவாமி தரிசனம் செய்தால் திருமண தடை நீங்கும்...
ஆடிமாத முதல் ஞாயிறு உறையூர் வெக்காளி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு கூழ்
திருச்சி, ஜூலை 21: திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் நேற்று ஆடி மாத முதல் ஞாயிறு கிழமையை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் பக்தர்களுக்கு ஏற்ப வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி...
நாமக்கல் பெண்களின் சிறுநீரகம் விற்பனை; திருச்சி தனியார் மருத்துவமனையில் விசாரணை
திருச்சி, ஜூலை 20: நாமக்கல் மாவட்டத்தில் பெண்களின் சிறுநீரகங்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக திருச்சி தில்லை நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் நேற்றுமுன்தினம் விசாரணை மேற்கொண்டனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் இரண்டு பெண்களிடம் சிறுநீரகங்களைப் பெற்று லட்சக்கணக்கில் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறையினர் விசாரணை விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், திருச்சி மற்றும்...
சிறுப்பு பயிற்றுனர் சங்கத்தினர் திருச்சி தபால் நிலையத்தில் இருந்து முதல்வருக்கு மனு
திருச்சி, ஜூலை 20: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் முதல்வருக்கு தபால் நிலையத்தில் மனு அனுப்பி கோரிக்கைகளை முன் வைத்தனர். தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுதிறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர் சங்கம் சார்பில், தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் வாயிலாக அரசு மற்றும்...
திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றம்
திருச்சி, ஜூலை 20: திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி கோயிலில் ஆடிப்பூர தெப்ப திருவிழா நேற்று இரவு 7.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர தெப்பத்திருவிழா வரும் 30ம் தேதி வரை 12 நாட்கள் நடைபெறுகிறது. அதனை வந்தார். 2ம் நாளான இன்று (20-ந்தேதி) அம்மன் கிளிவாகனத்திலும், 3ம்நாள் காமதேனு, 4ம்நாள் சந்திரபிரபை, 5ம் நாள் வெள்ளி...
பணியாளர்கள் குறைத்ததை கண்டித்து எச்இபிஎப் தொழிற்சாலை தொழிற்சங்கத்தினர் மனிதசங்கிலி
திருவெறும்பூர், ஜூலை 19: திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய படைகலன் தொழிற்சாலையான எச் இ பி எப் தொழிற்சாலை வேலை பார்த்து வரும் ஊழியர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் நேரத்தில் 5 சதவீதத்தை தன்னிச்சையாக குறைத்த எச் இ பி எப் நிர்வாகம் மற்றும் எம் ஐ எல் நிர்வாகத்தை கண்டித்து எச் இ பி...
திருவெறும்பூர் அருகே ஓம் சக்தி பீடம் கோயிலில் மாவிளக்கு படைத்து பூஜை
திருவெறும்பூர், ஜூலை 19: திருவெறும்பூர் அருகே உள்ள பெல் கைலாசபுரம் டவுன்ஷிப் குடியிருப்பில் அமைந்துள்ள ஓம் சக்தி பீடம் ஆலயத்தில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு 1008 போற்றி சொல்லி மாவிளக்கு படைத்து பூஜை நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே உள்ள பெல் குடியிருப்புவளாகத்தில் ஓம் சக்தி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் அப்பகுதிப்பு பெண்கள் வழிபாடு...