துவரங்குறிச்சி அருகே வயலில் 12 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது

  துவரங்குறிச்சி, ஜூலை 31:துவரங்குறிச்சி அருகே வயலில் ஊர்ந்து வந்த 12 அடி நீள மலைப்பாம்பு பிடிபட்டது. திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள காட்டுப்பட்டியில் சிவமணி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த வயலுக்கு நேற்று காலை சிவமணி சென்றார். அப்போது வயலில் இரை தேடி 12 அடி நீள மலைப்பாம்பு...

துவரங்குறிச்சி அருகே லாரி மோதி டிரைவர் காயம்

By Ranjith
29 Jul 2025

  துவரங்குறிச்சி, ஜூலை 30: திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த இடையப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தொப்புலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்னுச்சாமி மகன் உத்திராபதி (38). லாரி டிரைவர். இவர் நேற்று மாலை வீட்டிலிருந்து அவரது டூவீலரில் மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சேத்துப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பாப்பாபட்டி பிரிவு சாலை அருகே அடையாளம் தெரியாத...

திருச்சி சரகத்தில் 6 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

By Ranjith
29 Jul 2025

  திருச்சி, ஜூலை 30: அரியலூர் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் உதயகுமார், திருச்சி மாவட்டம், வாத்தலை ஸ்டேசனுக்கும், அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ்வரன், அரியலூர் டவுன் ஸ்டேசனுக்கும், அரியலூர் டவுன் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், மீன்சுருட்டிக்கும், ஆண்டிமடம் இன்ஸ்பெக்டர் நடராஜன் அரியலூர் ஸ்டேசனுக்கும், அரியலூர் இன்ஸ்பெக்டர் வேலுசாமி, ஆண்டிமடம் ஸ்டேசனுக்கும், கரூர் மாவட்டம்,...

திருவெறும்பூர் அருகே பைக்குகள் மோதியதில் வாலிபர் பரிதாப பலி

By Neethimaan
28 Jul 2025

திருவெறும்பூர், ஜூலை 29: திருவெறும்பூர் அருகே கைக்குகள் மோதிக்கொண்ட விபத்தில் எச்இபிஎப் தீயணைப்பு நிலைய ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு தேர்வான வாலிபர் பலியானர். மேலும் 2 பேர் பலத்த காயம்அடைந்தனர். திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு பர்மா காலனி சேர்ந்தவர் அன்புமணி. இவரது மகன் அஜய் (19). இவர் ஐடிஐ முடித்துவிட்டு எச்இபிஎப் தொழிற்சாலையில் உள்ள...

மக்கள் குறைதீர் நாள் கூட்டம்: 508 மனுக்கள் பெறப்பட்டது

By Neethimaan
28 Jul 2025

திருச்சி,ஜூலை 29: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சரவணன் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல், சாதிச் சான்றுகள், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் வீடு ஒதுக்கீடு தொடா்பான மனுக்கள், கலைஞா் மகளிர் உரிமைத்தொகை வேண்டி மனுக்கள், முதியோர் உதவித் தொகை, விதவை உதவித்தொகை,...

திருவானைக்காவல் கோயிலில் ஆரோகண, அவரோகண உத்சவம்

By Neethimaan
28 Jul 2025

திருச்சி, ஜூலை 29:திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தின் பத்தாம் நாள் விழா நேற்று மாலை நடந்தது. திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் ஆடி தெப்போற்சவத்தை முன்னிட்டு நடந்த பத்தாம் நாள் விழாவில், நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் ஆரோகண, அவரோகண உத்சவம் என்ற ஏற்றி இறக்கும் வைபவம் இனிதே துவங்கி நடந்தது. மூலவரான...

துறையூர் அரசு கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச புத்தகம்

By Ranjith
27 Jul 2025

  துறையூர், ஜூலை 28: திருச்சி மாவட்டம் துறையூரில் புதிதாக தொடங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரியில் பாடநூல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் துறையூர் எம்எல்ஏ ஸ்டாலின்குமார் கலந்து கொண்டு 74 கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு புத்தகங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்பொழுது துறையூர் மக்களின் 50 ஆண்டுகால கோரிக்கையான இந்த அரசு கலை அறிவியல் கல்லூரியை...

முசிறி வட்டத்தில் காவிரி கரையோரங்களில் பேரிடர் மீட்பு குழு முகாம்

By Ranjith
27 Jul 2025

  முசிறி, ஜூலை 28: முசிறி தாலுகாவில் பேரிடர் மீட்பு குழுவினர் முகாமிட்டு காவிரி கரை ஓரங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். கர்நாடகாவில் தற்போது பெருமழை பெய்து வருகிறது அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகள் நிரம்பியது. இதன் காரணமாக அங்கு வரும் தண்ணீர் அப்படியே காவிரி ஆற்றில் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையில்...

திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி

By Ranjith
27 Jul 2025

  திருச்சி, ஜூலை 28: திருச்சி மாவட்ட யோகாசன சாம்பியன்ஷிப் போட்டி திருச்சி, தில்லைநகரில் நேற்று நடந்தது. இந்த போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 3 வயதுக்கு மேல் 45 வயதுக்கு உள்பட்டவர்களுக்கு நடத்தப்பட்டது. போட்டிகளை யோகாசன சங்க தலைவர் டாக்டர் செந்தில்குமார், தேசிய யோகாசன நடுவர்...

மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி எம்பி துரை வைகோ கலெக்டருடன் நேரில் சந்திப்பு

By Suresh
26 Jul 2025

திருச்சி, ஜூலை 26: திருச்சி எம்பி துரை வைகோ, நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை நேரில் சந்தித்து, தன் தொகுதி மக்களின் முக்கிய நான்கு கோரிக்கைகள் குறித்து விளக்கிக் கூறினார். திருச்சி எம்பி துரை வைகோ நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் சரவணனை கலெக்டர் அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது தன்...